கிறிஸ்தவ விசுவாசம் குறித்த விளக்கவுரை (Ambrose, Exposition of the Christian Faith)

Ambrose of Milan, An Exposition of the Christian Faith, in Tamil. Book 5


புத்தகம் V

முன்னுரை

உண்மையுள்ள, ஞானமுள்ள ஊழியக்காரன் யார்? பேதுருவின் விஷயத்திலும், பவுலின் விஷயத்திலும் அவருடைய வெகுமதி சுட்டிக்காட்டப்படுகிறது. பவுலின் வழிகாட்டுதலைப் பின்பற்ற ஆர்வமாக இருந்த அம்ப்ரோஸ், இந்தப் புத்தகத்தை முந்தைய புத்தகத்தில் சேர்க்க முடியாததால் அதை மற்றவற்றுடன் சேர்க்க விரும்பினார். பின்னர் விவாதத்திற்கான தலைப்பு அதற்கான காரணத்துடன் கூறப்படுகிறது. அவர் மன்னிக்கப்பட வேண்டும், ஏனென்றால் ஒரு ஊழியன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்திற்கு வட்டி என்ற வெகுமதியை செலுத்த வேண்டும். விசுவாசம் என்பது அவர் பெறும் வெகுமதி. அவர் ஒரு வெகுமதியை எதிர்பார்க்க முடிந்தால் மகிழ்ச்சியடைவார், ஆனால் பரிசுத்தவான்களின் வெகுமதியை விட தண்டனையைத் தவிர்ப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். இதற்கு தகுதி பெற அனைவரும் முயற்சி செய்யுமாறு அவர் வலியுறுத்துகிறார்.

1. “புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய சேவகன் யார்? தன் வீட்டாருக்கு தக்க நேரத்தில் உணவளிக்கும் சேவகனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அந்த சேவகன் யார்? அவன் எஜமானன் வரும் நேரத்தில் தன் கடமையைச் சரியாகச் செய்யும் சேவகன் பாக்கியவான்” என்று மத்தேயு 24:45-46 கூறுகிறது. இந்த சேவகன் பயனற்றவன் அல்ல; அவன் முக்கியமான ஒருவனாக இருக்க வேண்டும். அவன் யாராக இருக்கலாம் என்று நாம் சிந்திப்போம்.

2. கர்த்தரால் தம்முடைய மந்தையை மேய்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேதுரு, மூன்று கட்டளைகளைக் கேட்கத் தகுதியானவர்: “என் சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கவும்,” “என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கவும்,” மற்றும் “என் ஆடுகளுக்கு உணவளிக்கவும்” ஆகியவை. மந்தையைக் கவனித்து விசுவாசத்துடன் உணவளிப்பதன் மூலம், அவர் தனது முந்தைய பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கொண்டார். எனவே மந்தையை மேய்க்கும்படி அவருக்கு மூன்று முறை சொல்லப்படுகிறது, மேலும் கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மூன்று முறை மறுதலித்தவரை, அவர் கர்த்தரை நேசிக்கிறாரா மூன்று முறை ஒப்புக்கொள்ளும்படி மூன்று முறை கேட்கப்படுகிறது.

3. “நீங்கள் இன்னும் தயாராக இல்லாததால், நான் உங்களுக்கு திட உணவை அல்ல, பாலைக் கொடுத்தேன்” என்று சொல்லக்கூடிய ஊழியக்காரன் பாக்கியவான் என்று 1 கொரிந்தியர் 3:2 கூறுகிறது. ஏனென்றால் உங்களுக்கு எப்படி உணவளிப்பது என்று அவர் அறிந்திருந்தார். நம்மில் எவரால் இதைச் செய்ய முடியும்? “பலவீனமானவர்களுக்கு, நான் பலவீனமானவர்களை வெல்லும்படி பலவீனமானேன்” என்று எவரால் சொல்ல முடியும்?” என்று 1 கொரிந்தியர் 9:22 இல் கேட்கப்பட்டுள்ளது.

4. கிறிஸ்துவால் தனது மந்தையைப் பராமரிக்கவும், பலவீனரை ஆதரிக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மனிதராக இருந்தாலும், தீத்து 3:10-ல் ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கைக்குப் பிறகு, தீங்கு செய்பவனின் சகவாசத்தை விட்டுவிடும்படி கூறப்பட்டுள்ளது. ஆகவே ஒரு தவறான ஆட்டின் நடத்தை பரவி முழு மந்தைக்கும் பரவி அதற்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழுவிலிருந்து ஒரு மதவெறியரை உடனடியாக நீக்குகிறார். மீண்டும் தீத்து 3:9-ல் கூறப்பட்டுள்ளபடி, “முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோயீசனின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, எவருக்கும் உதவாதவை” என்பதன்மூலம் அர்த்தமற்ற கேள்விகள் மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

5. பழைய அறுவடைக்குப் பின் வயலில் இந்தப் புதிய களைகளுக்கு மத்தியில் வாழும் நாம் அறியாமையில் உள்ளவர்கள் என்பதால், நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? “பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்” என்று மத்தேயு 13:25 கூறுவது போல, நாம் அமைதியாக இருந்தால், விட்டுக்கொடுப்பவர்கள் என்று தோன்றுகிறது; நாம் அவற்றிற்கு எதிராக வாதிட்டால், நாம் உலகப்பிரகாரமானவர்களாகவோ அல்லது சரீரப்பிரகாரமானவர்களாகவோ அடையாளப்படுத்தும் ஆபத்து உள்ளது. சண்டையை ஏற்படுத்தும் இதுபோன்ற விஷயங்களை இந்த வழியில் கையாள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது: “கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் பொறுமையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும்” என்று 2 தீமோத்தேயு 2:24–25 கூறுகிறது. மேலும் வேறு சில பொது இடங்களில் எவராவது சண்டையிடுவதை அவதானித்தால், “நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை” என்று கூறும்படி 1 கொரிந்தியர் 11:16 கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணத்திற்காகவே, எங்கள் எழுத்துக்கள் வடிவில் எந்த சத்தமும் இல்லாமல் நமக்காக மதவெறியர்களின் அக்கிரமத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஓரளவு எழுதுவதே எங்கள் நோக்கமாக இருந்தது.

6. ஓ பேரரசரான அகஸ்டஸ் அவர்களே, எங்கள் ஐந்தாவது புத்தகத்தைத் தொடங்குகிறோம். நான்காவது புத்தகம் திராட்சைக் கொடி பற்றிய நமது விவாதத்துடன் முடிவடைவது பொருத்தமாக இருந்தது. எனவே அது அதிக தலைப்புகளால் நிரம்பியிருக்காது, மாறாக ஆன்மீக திராட்சைத் தோட்டத்தின் கனியால் நிரம்பியிருக்கும். அதே நேரத்தில், விவாதிக்க இன்னும் பல முக்கியமான விஷயங்கள் இருக்கும்போது விசுவாசம் குறித்த தொகுப்பின் சேகரிப்பை முடிக்காமல் விட்டுவிடுவது சரியானதாக இருக்காது.

7. ஐந்தாவது புத்தகத்தில் பிரிக்க முடியாத கடவுளைப் பற்றி – பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி – பேசுகிறோம். இங்கே பரிசுத்த ஆவியைப் பற்றிய முழுமையான விவாதத்தை நாம் கொடுக்கவில்லை. நற்செய்தியால் வழிநடத்தப்பட்டு, இந்த ஐந்து புத்தகங்களுக்கும் ஒப்படைக்கப்பட்ட விசுவாசத்தின் ஐந்து கொடைகளாக, அவை முக்கிய புத்தகங்கள் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். கர்த்தர் திரும்பி வந்து, தாம் கொடுத்த வேதனத்தை மண்ணில் புதைத்து வைத்திருப்பதைக் கண்டால், அவர் என்னை உதவாக்கரை என்றும் சோம்பேறி என்றும் அழைக்கலாம். ஏனென்றால் அவர் விதைக்காத இடத்தில் அறுவடை செய்பவர், சிதறாத இடத்தில் சேகரிப்பவர் என்பது எனக்குத் தெரியும். எனவே “நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்று மத்தேயு 25:26-27 எடுத்துரைக்கிறது. அல்லது மற்றொரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது போல்: “சரியென்றால், நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்” என்று லூக்கா 19:23 கூறுகிறது.

8. எனது இவ்வளவு நீண்ட உரையால் எரிச்சல் அடைத்திருப்பவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்னை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டுகிறது. “நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே” என்று 1 கொரிந்தியர் 4:1 கூறுகிறது. நாம் அனைவரும் ஊழியர்கள், ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக இல்லை. “தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார்” என்று 1 கொரிந்தியர் 3:5-6 கூறுகிறது. ஆகையால், ஒவ்வொருவரும் தங்கள் முயற்சிகளின் அடிப்படையில் வெகுமதியைப் பெற, கடினமாக உழைக்கட்டும். ஏனென்றால், அப்போஸ்தலன் சொன்னது போல், “நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற ஊழியர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள்” என்று 1 கொரிந்தியர் 3:9 கூறுகிறது. எனவே, தங்கள் முதலீட்டில் இத்தகைய பலாபலன்களைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்; தங்கள் உழைப்பின் பலனை அடைபவர் பாக்கியவான் என்றும், “பொன், வெள்ளி, முத்து, மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திவாரத்தின்மீது வீட்டைக் கட்டமுடியும். அப்படிப்பட்டவன் பாக்கியவான்” என்று 1 கொரிந்தியர் 3:12 மீண்டும் கூறுகிறது.

9. இந்த வார்த்தைகளைக் கேட்கிற அல்லது படிக்கிற அனைவரும் எங்களுக்கு முக்கியமானவர்கள். நீங்கள் பணம் கொடுப்பவரின் வட்டி – பணத்தின் மீது அல்ல, பேச்சின் மீது ஆர்வம்; விவசாயிக்குக் கொடுக்கப்படும் வெகுமதி; நீங்கள் கட்டிடக் கலைஞருக்குப் பொன், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள். உங்கள் தகுதிகளில்தான் ஆசாரியரின் உழைப்பின் முக்கிய பலன்கள் உள்ளன; உங்கள் ஆன்மாக்களில் ஒரு ஆயருடைய திருப்பணியின் பலன் பிரகாசிக்கிறது; உங்கள் முன்னேற்றத்தில் கர்த்தருடைய பொன் பிரகாசிக்கிறது; நீங்கள் தெய்வீக வார்த்தைகளைப் பற்றிக்கொண்டால் உங்கள் விசுவாசம் வெள்ளியைப் போல் மின்னுகிறது. கர்த்தருடைய வார்த்தைகள் நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப் போல தூய்மையானவை; வெள்ளி சோதிக்கப்பட்டு, ஏழு முறை சுத்திகரிக்கப்படுகின்றது. எனவே நீங்கள் கடன் கொடுப்பவரை செல்வந்தராக்குவீர்கள், விவசாயிக்கு மிதமிஞ்சிய அறுவடையைக் கொடுப்பீர்கள், மேலும் பிரதான கட்டிடக் கலைஞர் திறமையானவர் என்பதை நிரூபிப்பீர்கள். நான் பெருமையாகப் பேசவில்லை; நான் என்னுடைய சொந்த நன்மையை அல்ல, உங்களுக்குக் கிடைக்கும் நன்மையையே விரும்புகிறேன்.

10. அப்படியானால் நான் உம்மைப் பற்றிச் சொல்லும் உண்மை உடையவனாயிருக்க வேண்டும்: ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பைகள் நிறைய பணம் தந்தீர். ஆகவே, நான் அதை வைப்பிலிட்டு மேலும் ஐந்து மடங்கு பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான் (மத்தேயு 25:20). மேலும், “இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றவர்களாக இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும்” என்கிறது 2 கொரிந்தியர் 4:7. இவைதான் கர்த்தர் நம்மிடம் ஆன்மீக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தச் சொல்லும் பொக்கிஷங்கள் அல்லது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு நாணயங்கள். சுவிசேஷத்தில் நல்ல சமாரியன் திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட மனிதனின் காயங்களை குணப்படுத்துவதற்கு பணம் செலுத்துவதற்காக விட்டுச் சென்றவை தான் இந்த நாணயங்கள்.

11. சகோதரரே, உங்கள் முன்னேற்றத்திற்காக நான் அதிகாரத்தையோ அல்லது என் பங்கை விட அதிகமாகவோ பெறுவதற்காக பேராசை கொள்வதில்லை. ஏற்கனவே கிடைக்கும் ஊதியம் எனக்குப் போதுமானது. அதைப் பெற்றதற்கு நான் தகுதியற்றவன் அல்ல என்று நம்புகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டவை மிகுதியானவையாக இருந்தால், அவற்றை என்னைவிடச் சிறந்த, தேவையுள்ள மனிதர்களுக்குக் கொடுக்கட்டும். நான் அவற்றைக் கோரவில்லை. ஏனென்றால், “நான் கடைசியாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் உனக்கும் சமமாகவே கூலி கொடுக்க விரும்புகிறேன்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை மத்தேயு 20:14 மேற்கோள் காட்டுகிறது. அத்தோடு மற்றுமொரு சந்தர்ப்பத்தில், “தகுதியுள்ளவன் பத்து நகரங்களின் மீது அதிகாரம் பெறட்டும்” என்று லூக்கா 19:17 இல் கூறப்பட்டுள்ளது.

12. நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை எழுதிய மோயீசனைப் போல அவர் இருக்கட்டும். ஐந்து அரசர்களை தோற்கடித்து கிபியோனியர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நூனின் மகனான யோசுவாவைப் போல அவன் இருக்கட்டும், அவன் வரவிருக்கும் தன் சொந்தப் பெயரைக்கொண்ட ஒரு மனிதனின் உருவமாக இருக்கட்டும், அவனுடைய வல்லமையால் பூமிக்குரிய ஆசைகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும், புறஜாதிகள் தங்கள் பழைய களியாட்டங்கள் மற்றும் இச்சைகளுக்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்திற்குத் திரும்புவார்கள். அவன் தாவீதைப் போல இருக்கட்டும், அவனைப் பற்றி இளம் பெண்கள் பாடியபோது: “பெண்கள், “சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!” என்று பாடினார்கள்” என்று 1 சாமுவேல் 18:7 கூறுகிறது.

13. தனக்குக் கொடுக்கப்பட்ட நாணயங்களைத் தன் சொந்த சரீரமாக எண்ணி தரையில் புதைத்த மனிதனைப் போல, நான் இருளில் வெளியே தள்ளப்படாவிட்டால் எனக்குப் போதும். ஜெப ஆலயத் தலைவரும் ஏனைய யூதர்களின் தலைவர்களும் இதைத் தான் செய்தார்கள்; அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை, தங்கள் சொந்த சரீரங்களுக்கு சேவை செய்யப் பயன்படுத்தினர். மேலும் சரீர இச்சைகளின் பின் சென்றதன் மூலம், பரலோக நம்பிக்கையை அழித்து, மதிப்புக்குரிய இதயத்தை குழியில் மூழ்கச் செய்தனர்.

14. ஆகையால், கர்த்தருடைய பணத்தை சரீரத்தில் புதைத்து மறைத்து வைக்கவோ அல்லது நமக்கு கொடுக்கப்பட்ட ‘ஒரு நாணயத்தை ஒரு துணியில் சுற்றி மறைத்துவைக்கவோ வேண்டாம்’ என்று லூக்கா 19:20 கூறுகிறது. அதற்கு பதிலாக, நல்ல நேர்மையான பணப்பரிமாற்றம் செய்பவர்களைப் போல இருக்கும் பட்சத்தில், ‘இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்’ என்று உபாகமம் 30:14 சொல்கிறது.

15. இது கர்த்தருடைய வார்த்தை, நீர் இரட்சிக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற கொடை. இந்தப் பணம் பெரும்பாலும் மக்களின் மேசைகளில் காணப்பட வேண்டும், இதனால் நிலையான வர்த்தகத்தின் மூலம், நல்ல நாணயங்களின் சத்தம் ஒவ்வொரு தேசத்திற்கும் செல்ல முடியும், இதன் மூலம் நித்திய ஜீவன் கொள்வனவு செய்யப்படுகிறது. யோவான் 17:3 கூறுவது போல், ‘ஒரே உண்மையான தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் நாங்கள் அறியவேண்டும் என்று சர்வவல்லமையுள்ள பிதாவே, நீர் தாராளமாகக் கொடுக்கும் நித்திய ஜீவன் இதுவே.

அத்தியாயம் 1

மனித மகிழ்ச்சி எதைச் சார்ந்துள்ளது என்பது குறித்து ஆரியர்கள் அவதூறு செய்வது எவ்வளவு தூரம் தவறானது? குறிப்பாக அவர், “நீர் மட்டுமே உண்மையான கடவுள் என்பதை அவர்கள் அறியட்டும்” என்று கூறுவதன் மூலம் யோவான் எப்போதும் குமாரனை பிதாவுடன் இணைக்கிறார். அந்தப் பகுதியில் “உண்மையான கடவுள்” என்ற வார்த்தைகள் குமாரனுக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் அவர் கடவுள் என்பதை மறுக்க முடியாது, அவர் ஒரு பொய்யான கடவுள் அல்ல என்பதையோ அல்லது அவர் பெயரளவில் மட்டுமே கடவுள் என்றும் நிச்சயம் கூற முடியாது. அப்போஸ்தலரின் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்ட இந்த கடைசி விஷயம், கிறிஸ்து உண்மையான கடவுள் என்பதைக் காட்டுகிறது.

16. ஆகையால், ஆரியர்கள் நமது நம்பிக்கையையும் நமது விருப்பங்களின் நோக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது எவ்வளவு தவறு என்பதை உணரட்டும். மேலும், கிறிஸ்து ஒரே உண்மையான கடவுளிலிருந்து வேறுபட்டவர் என்று கூறி, மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாக இந்தக் கருத்தை அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவதால், அவர்களின் இவ்வாறான புனிதமற்ற கருத்துக்களை முடிந்தவரை தவறு என்று நிரூபிப்போம்.

17. இந்த விஷயத்தில், இதுதான் பரிபூரண நல்லொழுக்கத்தின் வெகுமதி என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது, இந்த தெய்வீக மற்றும் ஒப்பற்ற கொடை. நாம் பிதாவுடன் சேர்ந்து கிறிஸ்துவை அறிந்து குமாரனை பிதாவிடமிருந்து பிரிக்கக்கூடாது; வேதவசனங்களும் அவர்களைப் பிரிக்கவில்லை. தெய்வீக மாட்சிமையின் பன்முகத் தன்மையை விட ஐக்கியத்தையே பின்வருபவை வலியுறுத்துகின்றன. பிதாவை அறிவதும் குமாரனை அறிவதும் ஒரே வெகுமதியையும் அதே மரியாதையையும் தருகிறது என்பதைக் காட்டுகிறது; பிதாவையும் குமாரனையும் அறியாவிட்டால் யாரும் அந்த வெகுமதியைப் பெறமாட்டார்கள். ஏனென்றால், பிதாவை அறிவது நித்திய ஜீவனைத் தருவது போல, குமாரனை அறிவதும் அதேபோன்ற நித்திய ஜீவனைத் தருகிறது.

18. ஆகையால், ஆரம்பத்திலிருந்தே சுவிசேஷகர் தனது பக்திமிக்க விசுவாச அறிக்கையான பிதாவாகிய தேவனோடு வார்த்தையை இணைத்து, “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறியும்படிக்கு” (யோவான் 17:3) என்று கூறினார். இங்கே, கர்த்தருடைய வார்த்தைகளை எழுதும்போது, ​​பிதாவும் குமாரனும் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளார். அவர்களை இணைப்பதன் மூலம், அவர் பிதாவையும் குமாரனையும் பிணைக்கிறார். ஆகவே உண்மையான கடவுளான கிறிஸ்துவை பிதாவின் மகத்துவத்திலிருந்து யாரும் பிரிக்க முடியாது, ஏனெனில் அவர்களின் ஐக்கியம் அவர்களை என்றும் பிரிக்காது.

19. ஆகையால், “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறியும்படி” என்று அவர் சொன்னபோது, ​​சபேலியர்களின் வாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். மேலும் இதுபற்றிக் கேட்ட யூதர்களை வாயடைக்கச் செய்தார். எனவே, பிதாவும் குமாரனும் ஒருவர் என்று சபேலியர்கள் நினைக்க மாட்டார்கள். ஒருவேளை கிறிஸ்துவைச் சேர்க்காவிட்டால் அவர்கள் நம்பியிருக்கக்கூடும். ஏனென்றால், யூதர்கள் குமாரனை பிதாவிடமிருந்து பிரிக்க மாட்டார்கள்.

20. ஆனாலும், பிதாவை ஒரே உண்மையான கடவுள் என்று அவர் அறிவித்ததிலிருந்து, இயேசு கிறிஸ்துவையும் ஒரே உண்மையான கடவுள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தும் கூட, அவர்கள் ஏன் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நான் கேட்கிறேன்? இரண்டு கடவுள்களைப் பற்றிப் பேசுவது போல் தோன்றுமோ என்ற பயத்தில், இதை வேறு எந்த வகையிலும் சொல்ல முடியாது. ஏனென்றால், நாங்கள் இரண்டு கடவுள்களைப் பற்றிப் பேசவில்லை, ஏனென்றால் குமாரன் பிதாவைப் போலவே ஒரே தெய்வீகத் தன்மை கொண்டவர் என்று ஒப்புக்கொள்கிறோம்.

21. தெய்வத்துவத்தில் வேறுபாடு இருப்பதாக அவர்கள் நினைப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது, கிறிஸ்து கடவுள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா? அவர்களால் அதை மறுக்க முடியாது. அப்படியானால் அவர்கள் அவரை உண்மையான கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா? அவர்கள் அவரை உண்மையான கடவுள் என்று மறுத்தால், அவர்கள் அவரை ஒரு பொய்யான கடவுள் அல்லது பெயரளவில் மட்டுமே கடவுள் என்று அழைக்கிறார்களா என்று சொல்லுங்கள். கடவுள் என்ற சொல் உண்மையான கடவுளுக்கு, அல்லது கடவுளுக்கு பட்டப்பெயராக அல்லது ஒரு பொய்யான கடவுளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று வேதாகமம் கூறுகிறது. உண்மையான கடவுள் தந்தை; அவரைக் கடவுள் என்ற பட்டப்பெயரால் புனிதர்கள் அழைக்கிறார்கள்; ஒரு பொய்யான கடவுள் பிசாசு மற்றும் சிலையைப் போன்றவர். இப்படியான நிலையில் அவர்கள் கடவுளின் குமாரனை எவ்வாறு ஒப்புக்கொள்வார்கள் மற்றும் தேடி அடைவார்கள் என்று சொல்லுங்கள். கடவுளின் பெயர் அவருக்குப் பொய்யாகக் கொடுக்கப் பட்டதாக அவர்கள் கருதுகிறார்களா, அல்லது உண்மையில் அவருக்குள் கடவுள் என்ற பட்டப்பெயரால் மட்டுமே கடவுள் வசிக்கிறாரா?

22. அந்தப் பெயர் தவறாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறி, வெளிப்படையான தெய்வ நிந்தனையில் விழ முடியும் என்று நான் நம்பவில்லை; இல்லையெனில், கடவுளின் பெயர் தவறாக அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி, ஒருபுறம் பேய்களுக்கும் சிலைகளுக்கும், மறுபுறம் கிறிஸ்துவுக்கும் தங்களைக் காட்டிக் கொடுக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், அவர் தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதால் அவர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார் என்று அவர்கள் நினைத்தால் – பல புனித நபர்களைப் போலவே (தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன) என்று யோவான் 10:35 கூறுகிறது – அவர்கள் அவரை மற்ற மனிதர்களுக்கு மேலாக வைக்கவில்லை; அவர்கள் அவரைத் தங்களுடன் சமமாகப் பார்க்கிறார்கள்; இதனால், அவர் மோயீசனிடம் கூறியது போல், அவர் மற்ற மனிதர்கள் இருக்க அனுமதித்ததைப் போலவே இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்: யாத்திராகமம் 7:1 இல் கூறப்பட்டுள்ளபடி, “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான்” என்று. அதேபோல, சங்கீதங்களிலும் இது “நான் (தேவன்), நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய குமாரர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

23. தேவ நிந்தனையாளர்களைப் பற்றிய இந்தக் கருத்தை பவுல் நிராகரிக்கிறார். 1 கொரிந்தியர் 8:5 இல் அவர் மேற்கோள் காட்டுகிறார்: “பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பலர் இருக்கின்றனர். எனினும் அவர்கள் நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பலர் காணப்படுகின்றனர்” என்று சொல்வதன் மூலம், அவர், “தேவர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லவில்லை, “தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். ஆனால் எபிரேயர் 13:8 சொல்வது போல், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர் – பெயரில் மட்டுமல்ல, சத்தியத்திலும் அப்படியே.

24. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று சொல்வது முற்றிலும் சரி, எனவே அரியசுக்கு இங்கே தவறு கண்டுபிடிக்க இடமில்லை. இரண்டாம் சங்கீதத்தில், பிதா குமாரனிடம், “நீர் என் குமாரன், இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று வாசிக்கும்போது, ​​அவர் நேற்றல்ல, இன்று அந்த வார்த்தையை எடுத்துக்காட்டி, நமது சரீரத்தை எடுத்துக்கொள்வது பற்றிச் சொல்லப்பட்டதை தெய்வீக தலைமுறையின் நித்திய இயல்புடன் இணைக்கிறார். அப்போஸ்தலர் பணிகள் 13:32-33 இல் பவுல் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம். நாம் அவர்களுடைய மக்கள். இந்த வாக்குறுதி நமக்கு உண்மையாகுமாறு தேவன் செய்தார். இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியபடியால் தேவன் இதைச் செய்தார். சங்கீதம் இரண்டிலும் நாம் இதைப்பற்றி வாசிக்கிறோம். ‘நீர் எனது குமாரன், இன்று நான் உமது தந்தையாகி இருக்கிறேன்’ என்று. இவ்வாறு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட அப்போஸ்தலன், அந்தக் கடுமையான கருத்தை மறுக்கும் வகையில் பேசினார்: நேற்று, இன்று, என்றென்றும் அதேதான். நேற்று அவரது நித்தியத்தைக் குறிக்கிறது; இன்று அவர் ஒரு மனித உடலை எடுப்பதைக் குறிக்கிறது.

25. ஆகையால், கிறிஸ்து இருக்கிறார், இப்போதும் எப்போதும் இருக்கிறார், ஏனென்றால் அவர் எப்போதும் இருக்கிறவர். கிறிஸ்து எப்போதும் இருக்கிறார், அவரைப் பற்றி மோயீசன் கூறுகையில், ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னதாகச் சொல்” என்று யாத்திராகமம் 3:14 சான்றளிக்கிறது. கபிரியேல் இருந்தார், ரபேல் இருந்தார், தேவதூதர்கள் இருந்தனர்; ஆனால் ஒரு காலத்தில் இல்லாதவர்கள் குறித்து, அதே கூற்றைப் பயன்படுத்தி என்றென்றும் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் கிறிஸ்து, நாம் படிப்பது போல், ஆம் மற்றும் இல்லை எனப்படுபவர் அல்ல; இதுகுறித்து 2 கொரிந்தியர் 1:19) கூறுகையில், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான் என்கிறது. எனவே இருப்பது என்ற பண்பு கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது.

26. ஆகையால், மக்கள் அவரைப் பெயருக்காகத்தான் கடவுள் என்று அழைக்க மாட்டார்கள். அத்தோடு அவரை ஒரு பொய்யான கடவுள் என்று அழைப்பது ஒரு பெரிய பாவமாகும். இப்படிக் கூறுவது இன்னும் அவர் உண்மையான கடவுள் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது – அவர் உண்மையான பிதாவிலிருந்து வேறுபட்டவர் அல்ல, அவரோடு ஒரே பொருளானவர். தனக்கு வெளியே இருந்து அதிகாரத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் அல்லாமல், தனக்குள் பரிசுத்தப்படுத்தும் வல்லமையைக் கொண்டிருப்பதன் மூலம் அவர் விரும்புவோரை பரிசுத்தப்படுத்தி நியாயப்படுத்த முடியும். ஆகையால், அவர் ஏன் உண்மையான கடவுளாக இருக்க முடியாது? அப்போஸ்தலன் அவரை உண்மையான கடவுள் என்று அழைத்தார், ஏனென்றால் அவர் இயல்பிலேயே கடவுள், வேதாகமம் இதுபற்றி கலாத்தியர் 4:8 வழியாகக் கூறும்போது: “முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள்” என்று. இதன்பொருள், உண்மையான கடவுள்களாக இருக்க முடியாதவர்களுக்கு, அந்தப் பட்டம் இயல்பிலேயே சொந்தமானது அல்ல.

அத்தியாயம் 2

குமாரன் உண்மையில் உண்மையான கடவுள் என்றும், பிதாவை விடக் குறைவானவர் அல்ல என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிதாவைப் பற்றி வேதாகமத்தில் solus (தனியாக) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதின் ஊடாக இது தெளிவாகிறது. இது குமாரனை விலக்கவில்லை; உண்மையில், இந்த சொல் அவருக்கு மட்டும், அவருக்கு மட்டுமே மிகவும் பொருத்தமானது. திரித்துவம் மற்றவர்களிடையே மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக தனித்துவம் பெற்று விளங்குகிறது. குமாரன் மட்டுமே பிதாவின் கிரியைகளை நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார். தன்னகத்தே அழியாமையையும் கொண்டிருக்கிறார். இருப்பினும், நமது விவாதங்களில் அவரை பிதாவிடமிருந்து பிரிக்க இது நம்மை இட்டுச் செல்ல அனுமதிக்கக்கூடாது. அவதாரம் பற்றிய அந்தப் பகுதியை நாம் இன்னும் விளக்கலாம். இறுதியாக, குமாரனை பிதாவிடமிருந்து பிரிக்க விரும்புவோர், மனிதகுலத்தின் மீட்பில் பிதாவின் பங்கேற்பைத் தடுக்கிறார்கள்.

27. முந்தைய புத்தகங்களில், கிறிஸ்து உண்மையானவர், ஆம், மிகவும் உண்மையான கடவுள் என்பதை வேதாகமத்தின் பகுதிகள் மூலம் முழுமையாக நிரூபித்துள்ளோம். எனவே, கற்பிக்கப்பட்டுள்ளபடி, கிறிஸ்து உண்மையான கடவுள் என்றால், பிதா மட்டுமே உண்மையான கடவுள் என்று சிலர் படிக்கும்போது, ​​அவர்கள் ஏன் குமாரனை பிதாவிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள் என்பதைக் குறித்து ஆராய்வோம்.

28. சிலர் பிதா மட்டுமே உண்மையான கடவுள் என்று கூறுகிறார்கள். ஆனால் குமாரன் மட்டுமே உண்மை என்பதை அவர்களால் மறுக்க முடியாது, ஏனென்றால் கிறிஸ்துவே உண்மை. சொற்களின் பயன்பாட்டின்படி ஒரு மனிதன் சத்தியம் என்ற வார்த்தையிலிருந்து உண்மை என்றும், ஞானத்திலிருந்து ஞானி என்றும், நீதியிலிருந்து நீதிமான் என்று மட்டுமே அழைக்கப்படுகிறான். நாம் கூறுவதால், உண்மை உண்மையாக இருப்பவரை விடச் சிறியதா? பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில் நாம் அப்படிக் கருதவில்லை. ஏனென்றால், பிதா சத்தியத்தால் நிறைந்தவர் என்பதால், அவருக்கு எதுவும் குறைவு இல்லை; மேலும், குமாரன் சத்தியமாக இருப்பதால், உண்மையுள்ளவருக்குச் சமமானவர்.

29. “மட்டுமே” என்ற வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில், குமாரன் பிதாவிடமிருந்து பிரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் தீர்க்கதரிசிகள் மூலம், “நானே பரந்து விரிந்த வானங்களை உண்டாக்கினேன்” (ஏசாயா 44:24) என்று கூறியுள்ளார். குமாரன் இல்லாமல் பிதா நிச்சயமாக அவற்றை உண்டாக்கவில்லை. ஏனென்றால், “கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்” என்று நீதிமொழிகள் 8:27 கூறுகிறது. பவுல் குமாரனைப் பற்றிக் கூறும் வேதவசனங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறுகிறார்: “ஆண்டவரே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திவாரப்படுத்தினீர், வானங்கள் உம்முடைய கைகளின் கிரியையாயிருக்கிறது” என்று எபிரேயர் 1:10; மற்றும் சங்கீதம் 102:25ஐ மேற்கோள் காட்டி இவை கூறப்பட்டுள்ளன). எனவே, குமாரன் வானங்களை உண்டாக்கினார் என்பதை நாம் புரிந்துகொண்டாலும், பிதா இல்லாமல் அவர் அதை தனியாகச் செய்யவில்லை, அல்லது நீதிமொழிகள் 3:19-ஐப் படிக்கும் போது, ​​”கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திவாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்” என்று வாசிக்கும்போது, ​​பிதா குமாரன் இல்லாமல் வானங்களை தனியாகவோ, பிதா இல்லாமல் குமாரன் தனியாகவோ படைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் வானங்களை விரித்தவர் தனியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

30. குமாரனின் வெளிப்பாட்டை நாம் எவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்ட (பிதாவுக்குத் தெரியாமல் அவர் எந்த ஒரு காரியத்தையும் செய்தார் என்பதை நாம் ஒருபோதும் நம்பக்கூடாது என்றாலும்), இங்கே இன்னொரு பகுதியும் உள்ளது, அங்கு அது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “தேவன் ஒருவரே வானங்களை உண்டாக்கினார், அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்” என்று யோபு 9:8 இலும், “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தான் என்றால், உம்மிடம் என்னைத் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று மத்தேயு 14:28 இலும் சொல்லப்பட்டிருப்பதாக நற்செய்தி எமக்குக் கூறுகிறது. தீர்க்கதரிசனம் கூட இதற்கு சான்றளிக்கிறது. வரவிருக்கும் கர்த்தரைப் பற்றி யோபு தீர்க்கதரிசனம் உரைத்தார், அவர் பெரிய லெவியாதானை வெல்வார் என்று கூறினார், அது நிறைவேறியது. அந்த லெவியாதான் – அதாவது, பிசாசு – கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை லெவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார், என்று ஏசாயா 27:1 கூறுகிறது.

31. எனவே குமாரன் மட்டுமே உண்மையான கடவுள், ஏனென்றால் இதுவும் அவருடைய ஒரே உரிமையாக குமாரனுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஏனென்றால் எந்தப் படைக்கப்பட்ட உயிரினத்திற்கும் அவர் தனியாக இருக்கிறார் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. படைப்பில் மற்றவர்களுடன் பங்கு கொள்ளும் குமாரனை எப்படி தனியாக இருப்பது போல் எண்ணி மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியும்? பூமிக்குரிய உயிரினங்களில் மனிதன் ஒரு பகுத்தறிவுள்ளவன், ஆனால் அவன் மட்டுமே பகுத்தறிவுள்ளவன் அல்ல, ஏனென்றால் கடவுளின் பரலோக கிரியைகளும் பகுத்தறிவுள்ளவை, தேவதூதர்களும் அதிதூதர்களும் பகுத்தறிவுள்ளவர்கள். அவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்பதால், மனிதன் மட்டுமே பகுத்தறிவுள்ளவன் என்று சொல்லிவிட முடியாது.

32. இரண்டாவது அல்லது வேறொரு சூரியன் இல்லாததால், சூரியன் தனியாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் சூரியனுக்கு நட்சத்திரங்களுடன் பல பொதுவான விஷயங்கள் உள்ளன, ஏனென்றால் அவை அனைத்தும் வானத்தில் பயணிக்கின்றன. அது பரிசுத்தமான, பரலோகப் பொருளைச் சேர்ந்தது, அது ஒரு உயிரினம், மேலும் அது கடவுளின் அனைத்து படைப்புகளோடும் சேர்த்து கணக்கிடப்படுகின்றது. சூரியன் மற்றைய அனைத்துடனும் சேர்ந்து கடவுளுக்கு சேவை செய்கிறது, எல்லாவற்றுடனும் சேர்ந்து அவரை ஆசீர்வதிக்கிறது, எல்லாவற்றுடனும் சேர்ந்து அவரைப் புகழ்கிறது. எனவே, சூரியன் உண்மையிலேயே தனியாக இருப்பதாகச் சொல்ல முடியாது, ஏனென்றால் அது மாற்றவைகளில் இருந்து பிரிக்கப்படவில்லை.

33. எனவே, எந்தவொரு படைக்கப்பட்ட உயிரினத்தையும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் தெய்வீகத்துடன் ஒப்பிட முடியாது. அவர் இந்தப் படைப்புகளுக்கு மத்தியில் இல்லை, ஆனால் அவர் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறார். (இத்தருணத்தில், பரிசுத்த ஆவியைப் பற்றிய எங்கள் அறிவிப்பை சற்று விளக்கி வைக்கிறோம்) பிதா மற்றவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளாததால் ஒரே உண்மையான கடவுள் என்று குறிப்பிடப்படுவது போல; குமாரனும் தனித்துவமான உண்மையான கடவுளின் வடிவம், தந்தையின் ஒரே கரம், கடவுளின் ஒரே நல்லொழுக்கம் மற்றும் ஞானம்.

34. இவ்வாறு, பிதா செய்வதை குமாரன் மட்டுமே செய்கிறார், ஏனெனில், “இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார்” என்று யோவான் 5:19-ல் எழுதப்பட்டுள்ளது. பிதாவும் குமாரனும் செய்யும் பணி ஒன்று என்பதால், பிதாவும் குமாரனும் கடவுளாக மட்டுமே செயல்பட்டார்கள் என்று சொல்வது சரிதான்; எனவே, படைப்பாளரைப் பற்றிப் பேசும்போது, ​​பிதாவும் குமாரனும் இருவரையும் குறிக்கிறோம். ஏனென்றால், ரோமர் 1:25-ல், “படைப்பவரை விட சிருஷ்டிக்கு அதிகமாகச் சேவை செய்தவர் யார்?” என்று பவுல் கேட்டபோது, ​​பிதா படைப்பாளர் என்பதை அவர் மறுக்கவில்லை. அத்தோடு, ரோமர் 11:36 இல் “தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன” என்பதையும் அவர் மறுக்கவில்லை.

35. “அவர் ஒருவரே, அவருக்கு என்றும் அழிவில்லை” என்று 1 தீமோத்தேயு 6:16 இல் உள்ள பதிவோடு இது ஒத்துப்போகிறது. அதேநேரம், அவரில் ஜீவன் இருக்கிறபடியால், அவருக்கு அழியாமை எப்படி இல்லாமல் இருக்க முடியும்? அவர் அதை தனது இயல்பிலும் தனது அத்தியாவசிய இருப்பிலும் கொண்டிருக்கிறார்; மேலும் அதை ஒரு தற்காலிக கிருபையாக அல்லாமல், அவரது நித்திய தெய்வீகத்தின் காரணமாகக் கொண்டிருக்கிறார். ஒரு ஊழியராக, ஒரு வெகுமதியாக அல்ல, மாறாக அவரது சந்ததியின் தனித்துவமான உரிமையால், இணை நித்திய குமாரனாக அவர் அதைப் பெற்றுள்ளார். “பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று யோவான் 5:26 கூறுகிறது. அவர் அதை எப்படிக் கொடுத்தார் என்பதை நீங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டீர்கள், அது அவருடைய தலைமுறையின் ரகசியமாக இருக்கும்போது, ​​அதை ஒரு இலவச கிருபையின் வெகுமதி என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அப்படியானால், பிதாவுக்கு குமாரனுக்கும் இடையில் வாழ்க்கை முறையில் வேறுபாடு இல்லாத பட்சத்தில், அதேவேளை, குமாரனுக்கும் அழியாமை இல்லாத நிலையில், பிதாவுக்கு மட்டுமே அழியாமை இருப்பதாக எப்படிக் கருத முடியும்?

36. எனவே, இந்தப் பகுதியில் குமாரன் பிதாவிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளட்டும். அவர் ஒருவரே உண்மையான கடவுள். குமாரன் ஒரே உண்மையான கடவுள் அல்ல என்பதை அவர்களால் எப்படியும் நிரூபிக்க முடியாது. இங்கே கிறிஸ்து உண்மையான மற்றும் ஒரே கடவுள் என்பதையும், இந்தப் பகுதி ஓரளவு பிதா மற்றும் குமாரனின் தெய்வீகத்தன்மையையும், ஓரளவு கிறிஸ்துவின் அவதாரத்தையும் குறிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். இயேசு கிறிஸ்துவை நித்தியத்திலிருந்து ஒரேபேறான கடவுள், கடவுளின் உண்மையான குமாரன் என்றும், சரீர வடிவில் ஒரு கன்னியிடமிருந்து பிறந்தவர் என்றும் ஒப்புக்கொள்ளாவிட்டால் அறிவு முழுமையடையாது. இந்த சுவிசேஷகர் வேறு இடங்களிலும் இதையே கற்பிக்கிறார், “தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று 1 யோவான் 4:2 கூறுகிறது.

37. இறுதியாக, இந்த முழு பகுதியும் இந்த வசனத்தில் அவதாரத்தை ஒரு சடங்காகக் குறிப்பிடுவது சரியானது என்பதைக் காட்டுகிறது. “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார்” என்று யோவான் 17:1 இல் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, வேளை வந்துவிட்டது என்று கூறி மகிமைப்படுத்தப்படக் கேட்கும்போது, ​​அவர் மனித சரீரத்தை எடுத்துக்கொள்வது பற்றி மட்டுமே பேசுகிறார் என்று நாம் நினைக்கக்கூடாது. கடவுளுக்கு காலம் குறித்த நிலையான தருணங்கள் இல்லை, நித்திய ஒளியால் மகிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒரே உண்மையான கடவுளான பிதாவில், கடவுளின் உண்மையான குமாரன் கடவுளுடன் ஐக்கியத்தில் இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கன்னி மரியாளிடமிருந்து பிறந்தபோது அவர் பெற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்து என்ற பெயரின் மூலமாக, அவதாரத்தின் புனிதத்தை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

38. இருப்பினும், மக்கள் குமாரனை தந்தையிடமிருந்து பிரிக்க விரும்பினால், பிதா மட்டுமே உண்மையான கடவுள் என்று அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் குமாரனின் அவதாரத்தைப் பற்றி சிந்திக்கலாம். ‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள். ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. ஆகவே இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்” என்று அப்போஸ்தலர் பணிகள் 4:11-12 பதிவு செய்கிறது. ஆகவே, பிதா நமக்கு இரட்சிப்பை வழங்குவதிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் கற்பனை செய்கிறார்கள். ஆனால் பிதா இல்லாமல் இரட்சிப்பு இல்லை, குமாரன் இல்லாமல் நித்திய ஜீவனும் இல்லை.

அத்தியாயம் 3

கடவுளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருப்பதால், இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ஆரியர்களின் ஆட்சேபனைக்கு, பன்முக கடவுள்கள் இருப்பது பல வேறுபட்ட பொருட்களிலிருந்து வரக்கூடியது என்பதே பதிலாக இருக்கும். ஆனாலும் அது சாத்தியமில்லை. அவர்களின் குற்றச்சாட்டு அவர்களையே எதிர்கொள்கிறது. ஒரே வகையைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு நபரும் “மனிதன்” என்று அழைக்கப்பட்டாலும், இரண்டு பேர் ஏன் ஒரு நபராக இருக்க முடியாது என்பதை பல விஷயங்களின் இருப்பு காட்டுகிறது. மனிதர்களில் ஒரு இயல்பு உள்ளது, ஆனால் தெய்வீகத் தன்மை உடையவர்களிடையே தான் உண்மையான ஒற்றுமை தங்கி உள்ளது. குறிப்பாக வழிபாடு அவருக்கு உரியது என்பதை அவர்கள் மறுக்கவில்லை என்பதால் குமாரனை பிதாவிடமிருந்து பிரிக்க முடியாது

39. ஆனால் ஆரியர்கள், பிதா ஒரே உண்மையான கடவுள் என்று நீங்கள் கூறினால், குமாரனும் கடவுள் என்று கூறினால், பிதாவும் குமாரனும் ஒரே இயல்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒப்புக்கொண்டால், உங்களுக்கு ஒரு கடவுள் இல்லை, இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள், என்று விடாப்பிடியாய் முரண்டு பிடிக்கிறார்கள். மேலும் அவர்கள், ஒரே பொருளில் இருப்பவர்கள் ஒரே கடவுள் அல்ல, இரண்டு கடவுள்கள் என்று தெரிகிறது. இரண்டு மனிதர்கள் அல்லது இரண்டு ஆடுகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பற்றிப் பேசப்படுவது போல, ஒரு மனிதனும் ஒரு ஆடும் இரண்டு மனிதர்கள் அல்லது இரண்டு ஆடுகள் என்று பேசப்படுவதில்லை, ஆனால் ஒரு மனிதனும் ஒரு ஆடும் என்று தான் பேசப்படுகின்றது என்கிறார்கள்.

40. ஆரியர்கள் சொல்வது இதுதான்; இந்த புத்திசாலித்தனமான வாதத்தின் மூலம் அவர்கள் மிகவும் அப்பாவிகளான மனிதர்களை சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தெய்வீக நூலான வேதாகமத்தைப் படித்தால், பன்முகத்தன்மை என்பது வேறுபட்ட மற்றும் மாறுபட்ட பொருட்களைக் கொண்ட விஷயங்களைப் பற்றியது என்பதைக் காண்போம். அதைத்தான் ἑτερούσια குறிக்கிறது. சொலமனின் புத்தகங்களில், குறிப்பாக அவர் குறிப்பிடும் பகுதியில் இது விளக்கப்பட்டுள்ளது: “என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு. வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை” என்று நீதிமொழிகள் 30:18-19 இல் கூறப்பட்டுள்ளவை ஒரே மாதிரியானவையோ அல்லது ஒரே இயல்பைக் கொண்டிருப்பனவோ அல்ல; அவை தனித்துவமானவை மற்றும் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டவை, ஆனாலும் அவை இன்னும் மூன்று அம்சங்களாகவே கருதப்படுகின்றன. எனவே, வேதாகம வசனங்களின் அடிப்படையில், அவர்களின் வாதங்கள் தங்களுக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

41. எனவே, பிதாவும் குமாரனும் வெவ்வேறு பொருளானவர்கள் என்றும், அவர்களின் தெய்வீகம் வேறுபடுத்தக்கூடியது என்றும் அவர்கள் கூறும்போது, ​​அவர்கள் உண்மையில் இரண்டு கடவுள்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பிதாவையும் குமாரனையும் நாம் ஏற்றுக் கொள்ளும்போது, ​​அவர்கள் தெய்வீகத்தில் ஒன்று என்று கூறுகிறோம். எனவே இரண்டு கடவுள்கள் அல்ல, ஒரே கடவுள் தான். இதை நாம் கர்த்தருடைய சொந்த வார்த்தைகள் ஊடாக நிரூபிக்கிறோம். பல கடவுள்கள் இருந்தால், இயல்பிலோ அல்லது விருப்பத்திலோ, அவர்கள் செய்யும் செயல்களிலோ வேறுபாடு இருக்கும். அவர்களின் சொந்த சாட்சியத்தால் அவற்றை மறுக்க, இரண்டு மனிதர்கள் உதாரணமாகக் காட்டப்படுகிறார்கள்: பிறப்பு, காலம், சிந்தனை, செயல்கள் மற்றும் இடம் ஆகியவற்றால் அவர்கள் ஒரே இயல்பைப் பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள்; எனவே ஒரு மனிதனை இருவராக இருப்பதாகச் சொல்ல முடியாது; பன்முகத்தன்மை இருக்கும் இடத்தில் ஒற்றுமை இருப்பதில்லை. ஆனால் கடவுள் ஒருவரே, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் முழுமையும் மகிமையும் இந்த வழியில் தான் காட்டப்படுகிறது.

42. உண்மையில், ஒற்றுமை பற்றிய உண்மை இதுதான்: மனித பிறப்பு அல்லது மனித இயல்பைப் பற்றிப் பேசும்போது, ​​”ஒரு மனிதன்” என்ற சொற்றொடர் ஒரு நபரை மட்டுமல்ல, அனைத்து மக்களையும் குறிக்கிறது. “கர்த்தர் தான் எனக்கு உதவியாளர், மனிதன் எனக்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து நான் பயப்பட மாட்டேன்” என்ற வார்த்தைகள் பொதுவாக மனிதர்களையும், அவர்களின் பொதுவான பலவீனத்தையும் சுட்டிக்காட்டுகின்றன, ஒரு தனி மனிதனை அல்ல. மனிதனை விட கர்த்தரை நம்புவது நல்லது என்றும் அது கூறுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மனிதனை அல்ல, ஒரு உலகளாவிய நிலையைக் குறிக்கிறது. பின்னர் அது பலவற்றைப் பற்றிப் பேசுகையில், இவ்வாறு கூறுகிறது: இளவரசர்களை விட இறைவனிடம் நம்பிக்கை வைப்பது நல்லது. “மனிதன்” என்ற சொல் பயன்படுத்தப்படும்போது, ​​அது அனைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளும் பொதுவான இயல்பைக் காட்டுகிறது; ஆனால் “இளவரசர்கள்” என்று குறிப்பிடப்படும் இடத்தில், அவர்களுக்கிடையே நிலவும் வெவ்வேறு சக்திகள் குறித்த வேறுபாடு காணப்படுகிறது.

43. மக்களிடையே அல்லது மனிதர்களிடத்தில் ஒரு விஷயத்தில் ஒரேவிதமான ஒற்றுமை உள்ளது: அன்பு, அல்லது ஆசை, அல்லது உடல், அல்லது பக்தி அல்லது நம்பிக்கை. ஆனால் கடவுளின் மகிமைக்காக எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய ஒற்றுமை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்கு மட்டுமே சொந்தமானது.

44. ஆகையால், பிரிக்க முடியாத ஒரு உயிரினமாக அவர்களை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான எதுவும் இல்லாத மக்களிடையே உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டும் கர்த்தர், “இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது” என்று யோவான் 8:17 கூறுவதைக் கவனிக்கிறோம். ஆனால் அவர் தன்னையும் பிதாவையும் பற்றிய சாட்சியத்தைப் பற்றிப் பேசும்போது, ​​இரண்டு கடவுள்கள் இருப்பதால் அவர்களின் சாட்சியம் உண்மை என்று அவர் கூறவில்லை; மாறாக அவர்: “நான் என்னைப் பற்றி சாட்சியமளிக்கிறேன், என்னை அனுப்பிய பிதா என்னைப் பற்றி சாட்சியமளிக்கிறார்” (யோவான் 8:18) என்று கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர் கூறுகையில்: “நான் கணிக்கும் போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார்” என்று யோவான் 8:16 ஊடாகக் கூறியுள்ளார். இவ்வாறு, இரண்டு இடங்களிலும் அவர் பிதாவையும் குமாரனையும் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் அவர் இரண்டு கடவுள்கள் இருப்பதைக் கூறவோ அல்லது அவர்களின் தெய்வீகப் பொருளின் ஐக்கியத்தைத் துண்டிக்கவோ இல்லை.

45. அப்படியானால், ஒரு பொருளால் ஆனது எதுவாக இருந்தாலும் அது தனியாக இல்லாவிட்டாலும் வேறுபடுத்த முடியாது என்பது தெளிவாகிறது. தனி என்பதை கிரேக்கர்கள் μονοτής என்று அழைப்பதை நான் குறிக்கிறேன். தனி என்பது ஒரு நபருடன் தொடர்புடையது; ஒரு இயற்கையுடன் ஒன்றுபட்டது. வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை வழக்கமாக ஒன்று என்றல்ல; பல என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 8:5 இல் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு” என்று. ஆகவே வெவ்வேறு பொருள்களைக் கொண்டவர்கள் மற்றும் ஒரே இயல்புடையவர்கள் கடவுள்கள் என்று அழைக்கப்படுவதை நீங்கள் காண்கிறீர்களா? “நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்” என்று 1 கொரிந்தியர் 8:6 கூறுகிறது. அத்தோடு, ஒரே கடவுள், ஒரே கர்த்தராகிய இயேசு; மேலும் ஒரே கடவுள், இரண்டு கடவுள்கள் அல்ல; 1 கொரிந்தியர் 8:4, 6 இன் படி, ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம், அவர் ஒரே கர்த்தர், இரண்டு கர்த்தர்கள் அல்ல.

46. எனவே பல கடவுள்கள் இல்லை, அதேநேரம், கடவுளின் ஒற்றுமை உடைக்கப்படவில்லை. கர்த்தராகிய இயேசுவைப் பற்றி நாம் படிக்கும்போது, ​​பிதாவை ஆட்சி செய்யும் உரிமையிலிருந்து பிரிக்கவில்லை, ஏனென்றால் அவர் அந்த உரிமையை குமாரனுடன் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல், ஒரே உண்மையான கடவுளான பிதாவைப் பற்றி நாம் படிக்கும்போது, ​​குமாரனை ஆட்சி செய்யும் உரிமையிலிருந்து பிரிக்க முடியாது, ஏனென்றால் குமாரன் அதை பிதாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

47. “உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும்” என்று மத்தேயு 4:10) இல் கூறப்பட்டிருப்பது குறித்து நாம் வாசிக்கும்போது அவர்கள் என்ன உணர்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பேசட்டும். கிறிஸ்துவை வணங்கவோ அல்லது அவருக்கு சேவை செய்யக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்களா? ஆனால் அவரை வணங்கிய கானானியப் பெண் (மத்தேயு 15:25) தான் கேட்டதைப் பெற தகுதியானவள் ஆகிறாள். தனது கடிதங்களின் தொடக்கத்திலிருந்தே தன்னை கிறிஸ்துவின் ஊழியன் என்று அழைக்கும் அப்போஸ்தலன் பவுல், “நான் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர்” என்று கலாத்தியர் 1:1) இல் கூறப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் சொல்லட்டும். அவர்கள் அரியஸுடன் துரோகத்தில் இணைந்து, கிறிஸ்து மட்டுமே உண்மையான கடவுள் என்பதை மறுத்து, அவரை வணங்கவோ அல்லது சேவை செய்யவோ கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுவார்களா? அல்லது கிறிஸ்துவுக்கு சேவை செய்வதிலும் அவரை வணங்குவதிலும், கடமையுடன் சேவைசெய்த ஒரே உண்மையான கடவுளை வார்த்தையிலோ அல்லது இதயத்திலோ மறுக்காத பவுலுடன் நிற்க அவர்கள் உடன்படுவார்களா?

அத்தியாயம் 4

சில மதவெறியர்கள் கிறிஸ்து தந்தையை வணங்கினார் என்று கூறுகிறார்கள். ஆனால் கவனமாகப் படித்தால் இந்த வழிபாடு அவரது மனிதநேயத்திற்கு சொந்தமானது என்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில், கிறிஸ்து செய்த மற்ற செயல்களில் நாம் அடிக்கடி காணும் விதமாக, இது அவரது தெய்வீகத்திற்கான ஆதாரத்தையும் வழங்குகிறது

48. குமாரன் பிதாவாகிய தேவனை வணங்குகிறார் என்று யாராவது சொன்னால், “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்கிறீர்கள்; நாங்கள் எதைத் தொழுதுகொள்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று யோவான் 4:22 இல் எழுதியிருப்பதைக் கொண்டு, அது எப்போது சொல்லப்பட்டது, யாருக்குச் சொல்லப்பட்டது, யாருடைய விருப்பத்திற்கு அது பதிலளித்தது என்பதைப் பற்றி அவ்வாறு சொன்னவர்கள் சிந்திக்கட்டும்.

49. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், பயணத்தால் சோர்வடைந்த இயேசு, ஒரு சமாரியப் பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார் (யோவான் 4:6-7) என்பது நல்ல காரணத்திற்காகவே கூறப்பட்டது. அவர் ஒரு மனிதனைப் போலப் பேசினார் என்று கூறுவதன் மூலம் இதை விளக்குகிறது, ஏனென்றால் கடவுளாக, அவர் சோர்வடையவோ தாகமாகவோ இருக்க முடியாது.

50. அந்தப் பெண் அவரை ஒரு யூதன் என்று அழைத்து, அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நினைத்தபோது, ​​அவர் நியாயப்பிரமாணத்தின் மர்மங்களைக் கற்பிக்கும் ஒரு யூதராக பதிலளித்தார்: “நீங்கள் அறியாததை வணங்குகிறீர்கள்; நாங்கள் அறிந்ததை வணங்குகிறோம். நாங்கள் வணங்குவதை நாங்கள் அறிவோம்.” அவர் சரீரவடிவில் மக்களுடன் இணைந்திருப்பதைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் சரீரமாக மாறுவதைத் தவிர அவர் எப்படி மனிதர்களுடன் இணைக்கப்பட முடியும்? அவர் சரீர வடிவமான ஒருவராகப் பேசினார் என்பதைக் காட்ட, “சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது” என்று யோவான் 4:22 மேற்கோள் காட்டுகிறது.

51. இதற்குப் பிறகு, அவர் தனது மனித உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யோவான் 4:23 இன் வார்த்தைகளைப் பேசும்போது, உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆத்மார்த்தமாகவும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். இப்போது ‘நாங்கள் வழிபடுவோம்’ என்று அவர் சொல்லவில்லை. அவர் நம் கீழ்ப்படிதலில் பங்கு பற்றி இருந்தால் அவர் அதைச் சொல்லியிருப்பார்.

52. மத்தேயு 28:9-ல் மரியாள் அவரை வணங்கியதைக் காணும்போது, ​​அவர் ஒரு சேவகனாக வணங்குவதும், அதே நேரத்தில் ஆண்டவராக வணங்கப்படுவதும் சாத்தியமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, ஒரு மனிதனாக, மனிதர்களிடையே இருப்பவராய் அவர் வணங்குகிறார், அதே நேரத்தில் ஆண்டவராக, அவர் அவருடைய ஊழியர்களால் துதிக்கப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.

53. ஆகையால், அவதாரத்தின் புனிதத் தன்மையினூடாக நாம் பல விஷயங்களைப் படித்து அறிந்து அவற்றை விசுவாசிக்கிறோம். ஆனால் நமது மனித இயல்பின் ஆழமான உணர்வுகளிலும் கூட நாம் தெய்வீக மாட்சிமையைக் காணலாம். இயேசு தனது பயணத்தினால் சோர்வடைந்திருந்தபோதும் சோர்வுற்றவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறார்; தாகமுள்ளவர்களுக்கு ஆன்மீக பானம் கொடுக்கும் போது அவரும் அந்தப் பானத்தை அருந்த தாகத்துடன் இருந்தார். பசியுள்ளவர்களுக்கு இரட்சிப்பின் உணவை வழங்க வந்தபோது அவர் பசியுடன் இருந்தார்; நமக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்று அவர் மரித்தார்; மீண்டும் உயிர்த்தெழவே அவர் அடக்கம் செய்யப்பட்டார்; பயந்தவர்களை வலுப்படுத்த அவர் கொடிய சிலுவையில் தொங்கினார்; அவர் ஒளியைக் கொடுக்க வானத்தை அடர்ந்த இருளால் மூடுகிறார்; பூமி பலமாக இருக்க அவர் அதை அசைக்கும்படி செய்கிறார்; கொந்தளிக்கும் கடலை அமைதிப்படுத்தினார்; இறந்தவர்களின் கல்லறைகளைத் திறந்து அவை உயிருள்ளவர்களின் வீடுகள் என்பதைக் காட்டினார்; அவர் கடவுளிடமிருந்து மனிதனாகப் பிறந்தவர் என்று மக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக அவர் ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார்; அறியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, அவர் அறியாதவர் போல் காட்டிக்கொண்டார்; அவர் யூதர் என்பதனால் வழிபடுகிறவர் என்று கூறப்படுகிறது; இதன் அர்த்தம் குமாரன் உண்மையான தேவனாக வணங்கப்பட வேண்டும் என்பதே.

அத்தியாயம் 5

அம்புரோஸ், செபதேயுவின் பிள்ளைகளின் தாயிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகளை வற்புறுத்தித் திணித்தவர்கள் குறித்து பேசுகையில், அவர்களின் வேண்டுகோள் கருணை மற்றும் தயை காரணமாக வந்தது, ஏனென்றால் கிறிஸ்து அவளுக்கு துக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இப்படிப்பட்ட நெகிழ்விற்கு போதுமான காரணம் முன்வைக்கப்படுகிறது. அந்த வேண்டுகோளை சாத்தியமற்றது என்று அறிவிப்பதற்குப் பதிலாக, அதைத் தந்தையிடம் விட்டுவிடவே ஆண்டவர் விரும்பினார். கிறிஸ்துவின் இந்தப் பதில் அவருக்கு எவ்விதத்திலும் களங்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை; அதை அவருடைய சொந்த வார்த்தைகளும், வேதாகமத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தெரிகிறது.

54. கடவுளுடைய குமாரன் எவ்வாறு பிதாவுக்குச் சமமான ஒரே உண்மையான கடவுளாக இருக்க முடியும் என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். குறிப்பாக அவர் செபதேயுவின் மகன்மாரிடம் ‘நீங்கள் என் பாத்திரத்தில் பருகுவீர்கள்; ஆனால் என் வலது அல்லது இடது பக்கத்தில் அமரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார்” என்று மத்தேயு 20:23 கூறுகிறது. எனவே, நீங்கள் விரும்பியபடி, இது தெய்வீக சமத்துவமின்மைக்கான உங்கள் சான்றாகும்; இருப்பினும், கடவுளின் நல்லொழுக்கம் மற்றும் ஞானத்தின் ஆழமான மர்மங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உண்மையிலேயே இறைவனின் கருணையைப் பாராட்டி அவருடைய கிருபையைப் போற்ற வேண்டும்.

55. தன் மகன்மாருக்காக இந்த உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கும் ஒரு தாயைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவள் ஒரு தாய், தன் மகன்மாரின் மரியாதைக்காகக் கவலைப்படுவதில், அவள் விரும்புவதில் கொஞ்சம் கட்டுப்பாடற்றவளாக இருந்திருக்கலாம், ஆனால் அவள் இன்னும் மன்னிக்கப்படக் கூடியவள். அவள் ஒரு வயதான, பக்தியுள்ள தாய், அவளுக்கு ஆறுதல் இல்லை. அவளுடைய வலிமையும், திறமையும் கொண்ட மகன்மாரால் அவளுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருந்தும்கூட, அவள் அவர்களை விட்டுவிட்டு, தன் சொந்த மகிழ்ச்சியை விட கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் அவளுடைய மகன்களுக்கு கிடைக்கக்கூடிய அரிய வெகுமதியைத் தேர்ந்தெடுத்தாள். ஏனென்றால், மத்தேயு 4:22 சொல்வது போல், கர்த்தர் அவர்களை அழைத்ததும் அவர்கள் உடனடியாக தங்கள் வலைகளையும் அவர்களது தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

56. பின்னர், ஒரு தாய்க்குரிய ஆவலால் உந்தப்பட்டு, இரட்சகரிடம் மன்றாடினாள்: “உமது இராச்சியத்தில் என் இரண்டு மகன்மாரும் ஒருவனை உமது வலது பாரிசத்திலும், மற்றொருவனை உமது இடது பாரிசத்திலும் அமரச் செய்தருளுவீராக” என்று அவள் இரட்சகரை நோக்கி இறைஞ்சியதாக மத்தேயு 20:21 கூறுகிறது. அவளது வேண்டுகோள் முறையற்றது என்றாலும், அது ஒரு தாயின் பாசத்தின் காரணமாகவே வந்தது, ஏனென்றால் ஒரு தாயின் இதயத்திற்கு பொறுமை என்பது மிகவும் அரிது. அவள் அதை ஆழமாக விரும்பினாள், அவளுடைய ஏக்கம் புரிந்துகொள்ளத்தக்கது, ஏனென்றால் அவள் செல்வத்தை அல்ல, அருளையே தேடினாள். அவளுடைய வேண்டுகோள் ஏளனத்துக்குரியதல்ல அல்ல, ஏனென்றால் அவள் தன்னைப்பற்றி அல்ல, தன் குழந்தைகளைப் பற்றி நினைத்தாள். இந்த ஒரு தாயையும் அவளுடைய பக்தியையும் கவனியுங்கள்.

57. அப்படியானால் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கொண்டிருக்கும் அன்பு உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றினால் அது ஆச்சரியமல்ல, ஏனென்றால் சர்வவல்லமையுள்ள பிதாவின் ஒரே பேறான குமாரனுக்கான அன்பை நீங்கள் ஒரு அற்ப விஷயமாகக் கருதுகிறீர்கள் என்பதனால். வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் வெட்கப்பட்டார் (நமது மனித அனுபவத்திற்கும் ஆன்மாவின் இயல்புகளுக்கும் பொருந்தக்கூடிய சொற்களில் சொல்ல வேண்டுமென்றால்) — அவர் வெட்கப்பட்டார், அவரே சொன்னது போல் கவலைப்பட்டார் – ஒரு தாய் தன் மகன்மாருக்காக தனது சொந்த இருக்கையில் ஒரு இடத்தைக் கேட்டபோது, அதை மறுக்கவேண்டிய காரணத்தால் அவர் கவலையும் வெட்கமும் அடைந்தார். சில சமயங்களில் நித்திய கடவுளின் குமாரன் சேவை செய்வதற்காகவே இங்கு இருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள், மற்ற சமயங்களில் அவரது பங்கு ஒரு ஊழியரின் பாத்திரத்தைப் போன்றது என்றும், அது பகிரப்பட்ட மகத்துவத்தால் அல்ல, ஆனால் அது தந்தையின் கட்டளை காரணமாக என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் நீங்கள் கடவுளின் குமாரனை மறுக்கிறீர்கள், அவர் உண்மையிலும் உண்மையான கடவுள், அவர் மக்களுக்கு எதையும் மறுத்திருப்பார் என்று கூறமுடியாது.

58. வயதான காலத்தில் தன் மகன்மார் தனக்கு அடைக்கலம் அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் அவள் ஆறுதல் கண்ட விதம் குறித்த ஒரு தாயின் அன்பைப் பற்றி அவர் நினைத்தார் – ஒரு தாயின் ஏக்கம் காரணமாக அவள் கவலைப்பட்டாலும், அவள் தன் மகன்மாரைப் பிரிந்திருப்பதைத் தாங்கிக்கொண்டாள், அது அவளுடைய அன்பின் மிகவும் ஆழமான அடையாளமாகக் காணப்படுகிறது.

59. பலவீனமான இனமாகக் காணப்பட்ட பெண்ணைக் கவனியுங்கள், கர்த்தர் இன்னும் தம்முடைய உள்ளுணர்வின் மூலம் அதிகாரம் அளிக்கவில்லை. ஏவாளின் சந்ததியை நினைத்துப் பாருங்கள், எல்லோரும் மரபுரிமையாகக் கொண்ட கட்டுப்பாடற்ற ஆசைகளின் சுமையைச் சுமக்கிறார்கள். அவள் இன்னும் கர்த்தருடைய இரத்தத்தால் இரட்சிக்கப்படவில்லை, மேலும் அதிக மரியாதைக்கான ஆசை இன்னும் அவளுடைய இதயத்தில் இருந்தது. இந்த இயல்பான போக்கின் காரணமாக, அவள் பாவம் செய்தாள்.”

60. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு முதலிடத்தைப் பெற முயற்சிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அது அவள் தனக்காகச் செய்ததை விட மிகச் சிறந்தது இதுவல்லவா? நாம் அறிந்தது போல, “தங்களில் மிக முக்கியமானவர் யார் என்று தெரிந்துகொள்ள அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள்” என்று லூக்கா 22:24 கூறுகிறது.

61. ஒரு மருத்துவர் எல்லாவற்றையும் இழந்த ஒரு தாயையோ அல்லது அவமானகரமான நிந்தைகளால் அவதிப்படுபவரையோ காயப்படுத்தக்கூடாது, இதனால் அவள் உதவி கேட்டு அவளுடைய கோரிக்கை ஆணவம் காரணமாக மறுக்கப்பட்டால், அவளுடைய மனு நியாயமற்றது என்ற தீர்ப்பால் அந்தத் தாய் துக்கப்படலாம்.

62. இறுதியாக, ஒரு தாயின் அன்பு மதிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்த கர்த்தர், அந்தப் பெண்ணிடம் அல்ல, அந்தப் பெண்ணின் மகன்மாரிடம் பேசியபோது: “நான் அருந்த வேண்டிய பாத்திரத்தில் நீங்கள் அருந்த முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், எங்களால் முடியும்” என்று பதிலளித்தனர். அதற்கு இயேசு, “நீங்கள் என் பாத்திரத்தில் அருந்துகிறீர்கள் என்பது உண்மைதான்; ஆனால் என் வலது பாரிசத்திலோ என் இடது பாரிசத்திலோ அமர்வது குறித்து என்னால் தீர்மானிக்க முடியாது, அந்த இடங்கள் என் பிதாவினால் தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது” என்று பதிலளித்தார் என்று மத்தேயு 20:22-23 இல் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

63. கர்த்தர் மிகவும் பொறுமையும் கருணையும் கொண்டவர்; அவரது ஞானம் ஆழமானது, அவரது அன்பு உண்மையிலேயே நல்லது! சீடர்கள் முக்கியமான ஒன்றைக் கேட்கிறார்கள், அவர்களால் பெற முடியாத ஒன்றைக் கேட்கிறார்கள் என்பதைக் காட்ட அவர் விரும்பினார், எனவே அவர் தனது சொந்த உரிமைகளில் எதையும் விட்டுக்கொடுப்பதைப் பற்றி கவலைப்படாமல், தனது தந்தையின் மகிமைக்காக தனது தனித்துவமான உரிமைகளை வைத்திருந்தார்: “கிறிஸ்து அவரளவில் எல்லாவற்றிலும் தேவனைப் போன்றிருந்தார். அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை” என்று பிலிப்பியர் 2:6.வலிந்துரைக்கிறது. மேலும், யோவான் 13:1 நமக்குச் சொல்வது போல், தம்முடைய சீடர்களை நேசித்தார் (கடைசி வரை அவர் அவர்களை நேசித்தார்), அவர்கள் அவரிடம் கேட்க விரும்புவதை அவர் மறுக்க விரும்பவில்லை. நல்லவரும் பரிசுத்தருமான ஆண்டவரான நம் கர்த்தர் தம்முடைய அன்பில் எதையும் விட்டுக்கொடுப்பதை விட, தம்முடைய சில சிறப்பு உரிமைகளை இரகசியமாய் வைத்திருப்பார். 1 கொரிந்தியர் 13:4 இல் “அன்பு பொறுமை உள்ளது. தன்னைப் புகழாது, அன்பு தற்பெருமை பாராட்டாது. அன்பு பொறாமை அற்றது” என்று கூறப்பட்டுள்ளது.

64. இறுதியாக, இயேசு, “உங்களுக்குக் கொடுப்பது என்னுடையது அல்ல” என்று சொன்னபோது, ​​பலவீனத்துடன் அல்ல, மென்மையுடன் பேசினார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். செபதேயுவின் மகன்மார் தங்கள் தாய் இல்லாதாது குறித்து கேட்டபோது, ​​அவர் பிதாவைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதைக் கவனியுங்கள். மாற்கு 10:40 இல் கூறப்பட்டுள்ளது போல, “எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்று மாற்கு இதைப் பதிவு செய்கிறார். ஆனால் மத்தேயு 20:23 இல், தாய் தன் மகன்மாருக்காகக் கேட்கும்போது, ​​அவர் அதே வார்த்தைகளைச் சொல்லி “என் பிதாவின்” என்ற சொல்லையும் சேர்க்கிறார். இது பிதாவினால் தயார் செய்யப் பட்டவர்களுக்கே என்று விளக்குகிறார். இங்கே அவர் “என் பிதாவின்” என்று சேர்க்கிறார், ஏனெனில் ஒரு தாயின் உணர்வுகள் அதிக மென்மையைக் கொண்டிருப்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

65. ஆனால், “என் பிதா யாருக்காக இதை ஆயத்தம் செய்தாரோ” என்று சொல்வதன் மூலம் அவர் தம்முடைய பிதாவுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்தார் அல்லது தம்மிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டார் என்று அவர்கள் நினைத்தால், இது பிதாவின் வல்லமையைக் குறைப்பதாக அவர்கள் நினைக்கிறார்களா? ஏனென்றால் குமாரன் யோவான் 5:22 இல் “பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் குமாரனிடமே ஒப்படைத்திருக்கிறார்” என்று பிதாவைப் பற்றிச் சொல்கிறார்.

66. ஆனால், பிதா எல்லா நியாயத்தீர்ப்பையும் குமாரனிடம் ஒப்படைத்துவிட்டார் என்று நம்புவது அநீதியானது என்று நாம் நினைத்தால், அது அவரிடமே இல்லை – ஏனென்றால் அவர் அதை ஏற்கனவே வைத்திருக்கிறார். தெய்வீக மாட்சிமை என்பது தன்னகத்தே வைத்திருப்பதை இழக்க முடியாது என்பதாகும். மனிதர்கள் அல்லது எந்த உயிரினமும் பெறக்கூடியதை குமாரனால் கொடுக்க முடியாது என்று கருதுவதும் சமமாக அநீதியானது என்று நாம் உணர வேண்டும்; இது இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. “நான் என் பிதாவிடம் செல்கிறேன். எனது பெயரில் நீங்கள் எதை வேண்டினாலும் அதை உங்களுக்காக நான் செய்வேன்” என்று யோவான் 14:12-13 கூறுகிறது. பிதா கொடுக்கக்கூடியதை குமாரனால் கொடுக்க முடியாவிட்டால், சத்தியம் பொய்யானது, பிதா தம் நாமத்தினாலே கேட்கப்பட்டதைச் செய்ய முடியாது. பிதாவிடம் மட்டுமே வேண்டுதல்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை; ஏனென்றால் பிதாவிடம் கேட்கப்படும் எல்லாவற்றையும், அவர் கொடுப்பார் என்று அவர் அறிவித்துள்ளார். இறுதியாக, அவர் சொல்லவில்லை: ‘நீங்கள் என்னிடம் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்; ஆனால்: என் நாமத்தினாலே நீங்கள் அவரிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்’ என்று.

அத்தியாயம் 6

மேலே கூறப்பட்ட ஆட்சேபனைக்கு ஓரளவேனும் முழுமையாக பதிலளிக்க வேண்டுமாயின், இந்த வேண்டுகோள் சாத்தியமற்றதாக இல்லாவிட்டால் கிறிஸ்துவால் அதை வழங்க முடிந்திருக்கும் என்று அவர் கூறுகிறார். குறிப்பாக பிதா அவருக்கு அனைத்து நியாயத்தீர்ப்புகளையும் வழங்கும் அதிகாரத்தை அளித்திருப்பதால், அதை குறைபாடுகள் இல்லாத ஒரு கொடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் கோரிக்கை சாத்தியமற்ற விஷயங்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் காட்டுகிறார். இதை உண்மையிலேயே சாத்தியமாக்க வேண்டுமாயின், கிறிஸ்துவின் பதிலை அவரது மனித இயல்பின் அடிப்படையைக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். மேலும் இதை அடுத்த பத்தியின் விளக்கத்தின் மூலம் காட்டுகிறார். இறுதியாக, முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான கிறிஸ்துவின் சாத்தியமற்ற தன்மை குறித்து அவர் அளித்த பதிலை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

67. செபதேயுவின் மனைவியும் அவருடைய மகன்மாரும் விடுத்த வேண்டுகோள் மக்களுக்கு அல்லது படைக்கப்பட்ட எந்தவொரு உயிரினத்திற்கும் சாத்தியமானதாக இருக்குமா என்று நான் இப்போது கேட்கிறேன். அது சாத்தியமானால், எல்லாவற்றையும் படைத்தவருக்கு எப்படித் தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் தம்முடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் அமர அதிகாரம் கொடுக்கமுடியாமல் போனது? அல்லது பிதாவால் எல்லா நியாயத்தீர்ப்புகளையும் வழங்கும் அதிகாரத்தைக் கொடுத்தவருக்கு எப்படி மக்களின் தகுதிகளை மதிப்பிடாமல் இருக்க முடிந்தது?

68. அவர் அதை எவ்வாறு கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். எல்லாவற்றையும் வெறுமையிலிருந்து படைத்த குமாரன், அதை மட்டும் எவ்வாறு தேவையின் நிமித்தம் பெற முடியும்? தாம் உருவாக்கிய நியாயத்தீர்ப்பு அவருக்கு எப்படி இல்லாமற் போனது? “குமாரனை மதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் மதிக்கவில்லை” என்று யோவான் 5:23 இல் சொல்லப்படுவது போல், எல்லா மக்களும் பிதாவை மதிக்கும் விதமாக குமாரனை மதிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பிதா குமாரனுக்கு எல்லா நியாயத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் கொடுத்தார். இது உண்மையில் குமாரனின் வல்லமையைப் பற்றியது அல்ல; அதைப் பற்றிய நமது புரிதல் எவ்வாறு வளர்கிறது என்பதைப் பற்றியது. நாம் கற்றுக்கொள்வது அவருடைய சாரத்தை மாற்றப் போவதில்லை, ஆனால் அது நமக்கு நன்மை பயக்கும். கடவுளின் குமாரனை அறிவதன் மூலம், நாம் நித்திய ஜீவனை அடைய முடியும்.

69. எனவே, தேவனுடைய குமாரனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் என்பது ​​உண்மையில் அவருடைய மகிமையைப் பற்றியது, அது நமக்கு நன்மை பயக்கக்கூடியது, அவருக்கு அல்ல. அந்த மகிமையிலிருந்து கடவுளின் வல்லமை பெருகும் என்று யாராவது நினைத்தால், பிதாவாகிய தேவனுடைய வல்லமையும் பெருக முடியும் என்று அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், குமாரனைப் போலவே பிதாவும் அவரைப் பற்றிய நமது அறிவால் மகிமைப்படுகிறார். யோவான் 17:4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி: “நான் பூமியில் எனது பணியை முடித்துவிட்டேன். இப்போது உமது மகிமையை எனக்குத் தாரும்” என்று கூறப்பட்டுள்ளது. எனவே, கேட்கப்பட்டது சாத்தியமானது என்றால், அதை வழங்குவது நிச்சயமாக குமாரனின் வல்லமையில் தான் தங்கியிருந்தது.

70. மனிதர்கள் அல்லது பிற படைப்புகளில் எவராவது கடவுளின் வலது பாரிசத்திலோ அல்லது இடது பாரிசத்திலோ வீற்றிருக்கிறார்களா என்பதை இவர்கள் காட்டட்டும். பிதா குமாரனிடம், “என் வலது பாரிசத்திலோ வீற்றிருப்பீராக” என்று கூறுகிறார். எனவே, குமாரனின் வலது பாரிசத்தில் யாராவது அமர்ந்தால், குமாரன் பிதாவுக்கும் அந்த அவ்வாறு அமர்ந்திருப்பவருக்கு இடையில் தான் இருப்பார்.

71. பின்னர் ஒருவர் அவரிடம், மனிதர்களால் முடியாத ஒன்றைப் பற்றிக் கேட்டார். அதற்கு அவர் மக்கள் தம்முடன், தமக்கு இணையாக உட்கார முடியாது என்று அவர் சொல்லவில்லை; அவர் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு முன்பு தம்முடைய தெய்வீக மகிமை குறித்த இரகசியம் பேணப்பட வேண்டுமென்றும் அதை வெளிப்படுத்தக்கூடாது என்றும் அவர் விரும்பினார் என்று மத்தேயு 17:9 கூறுகிறது. முன்னதாக, அவர் மோயீசனுடனும் எலியாவுடனும் மகிமையுடன் தோன்றியபோது, ​​அவர்கள் கண்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தம் சீடர்களை எச்சரித்திருந்தார்.

72. ஆகையால், மனிதர்களுக்கோ அல்லது பிற படைக்கப்பட்ட உயிரினங்களோ இதற்கு தகுதி பெறுவது சாத்தியமில்லை என்றால், பிதா மனிதர்களுக்கோ அல்லது பிற படைக்கப்பட்ட உயிரினங்களுக்கோ கொடுக்காததை, குமாரன் தனது அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதற்காக அவருக்குக் குறைவான வல்லமை இருப்பதாக எண்ணலாகாது. அப்படி இல்லையெனில், அவர் யாருக்குக் கொடுத்தார் என்று மக்கள் சொல்லட்டும். நிச்சயமாக தேவதூதர்களுக்கு அல்ல; வேதாகமம் அனைத்து தேவதூதர்களும் சிம்மாசனத்தைச் சுற்றி நிற்கிறார்கள் என்று கூறுகிறது (வெளிப்படுத்துதல் 7:11). இதற்கு சாட்சிபகரும் விதமாக, லூக்கா 1:19 இல், “நான் கடவுளுக்கு முன்பாக நிற்கும் கபிரியேல்” என்று தேவதூதனான கபிரியேல் தானே கடவுளுக்கு முன்பாக நின்றதாகக் கூறியுள்ளார்.

73. ஆகையால், சிம்மாசனம் தேவதூதர்களுக்கோ அல்லது வீற்றிருப்பவரே வணங்கும் மூப்பர்களுக்கோ கொடுக்கப்படவில்லை; அவர்கள் மாட்சிமையின் சிம்மாசனத்தில் அமராது, வேதாகமம் கூறுவது போல் சிம்மாசனத்தைச் சுற்றியே அமர்ந்திருக்கிறார்கள். வெளிப்படுத்துதல் 4:4 இல் “சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்தி நான்கு சிறிய சிம்மாசனங்கள் இருந்தன. அந்த இருபத்துநான்கு சிறிய சிம்மாசனங்களில் இருபத்து நான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். மூப்பர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் தலையில் தங்கக் கிரீடங்கள் இருந்தன” என்று கூறப்பட்டுள்ளது. நற்செய்தியில், கர்த்தர் மேலும் கூறும்போது: “புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின்[a] பன்னிரண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்” என்கிறது மத்தேயு 19:28. அப்போஸ்தலர்கள் தம்முடைய சொந்த சிம்மாசனத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று அவர் சொல்லவில்லை, ஆனால் பன்னிரண்டு சிம்மாசனங்கள் உள்ளன என்று அவர் கூறினார்; இவற்றை நாம் பொதுவான இருக்கைகளாகக் கருதக்கூடாது, அவற்றை ஆன்மீக கிருபையின் ஆசீர்வதிக்கப்பட்ட சின்னங்களாகக் கருத வேண்டும்.

74. இறுதியாக தீர்க்கதரிசி மிகாயா, இராஜாக்களின் புத்தகத்தில், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தம்முடைய சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருப்பதையும், பரலோக சேனைகள் யாவும் அவரைச் சுற்றி அவருடைய வலது பாரிசத்திலும் இடது பாரிசத்தியிலும் நிற்பதையும் நான் கண்டேன்” (1 இராஜாக்கள் 22:19). தேவதூதர்கள் கடவுளின் வலது மற்றும் இடது பக்கத்தில் நிற்கிறார்கள், எல்லா வானகத்து சேனைகளும் அவருடன் நிற்கின்றன, அப்படி என்றால், மனிதர்கள் கடவுளின் வலது அல்லது இடது பக்கத்தில் எப்படி அமர்ந்திருக்க முடியும்? நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் பரலோக தேவதூதர்களைப் போல இருப்பார்கள் என்று கர்த்தர் கூறுகிறார். (மத்தேயு 22:30). உயிர்த்தெழும் அனைவரும் பரலோகத்திலிருக்கும் தேவதூதர்களுக்கு ஒப்பாவார்கள். ஆனால் தேவதூதர்களை விட பெரியவர்கள் அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

75. அப்படியானால், பிதா குமாரனைவிட அதிகமாக எதையும் கொடுக்கவில்லை என்றால், குமாரனும் பிதாவை விட குறைவாக எதையும் கொடுக்கவில்லை. எனவே, குமாரன் எந்த வகையிலும் பிதாவை விடக் குறைவானவராக இருக்க முடியாது.

76. இப்போது, ​​மக்கள் தாங்கள் விரும்பியதைப் பெறுவது உண்மையில் சாத்தியமானதாக இருக்கும் எண்டு வைத்துக்கொள்வோம்; அப்படியானால் மத்தேயு 20:23 இல் கூறப்பட்டுள்ளபடி: “என் வலது மற்றும் இடது பக்கங்களில் அமரப்போகிறவர்கள் யார் யாரென்று என்னால் முடிவு செய்ய இயலாது. அது யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்று அவர் கூறுவதன் அர்த்தம் தான் என்ன? முன்பு, அவர் குறிப்பிடுகையில், “நீங்கள் என் பாத்திரத்தில் அருந்துவார்கள்” என்றும், “உங்களுக்குக் கொடுக்கும் முடிவு என் கையில் இல்லை” என்றும் கூறுகையில், அவர் முன்பு ‘என்னுடையது’ என்று சொன்னதுபோலவே, பின்னர் மீண்டும் ‘என்னுடையது’ என்றேதான் குறிப்பிட்டார். அவரது வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து முந்தைய கூற்றுகள் அவர் ஏன் என்னுடையது என்று குறிப்பிட்டார் என்பதை விளக்குகின்றன.

77. ஒரு பெண், இயேசுவை ஒரு ஆணாக எண்ணி, அவருடைய இராச்சியத்தில் தன் மகன்மாரை அவரது வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் அமரஅனுமதிக்குமாறு கேட்டார். இயேசுவும் ஒரு மனிதனாக, தனது கவலை பற்றி பதிலளித்தார்: மத்தேயு 20:22 இல் கூறப்பட்டுள்ளபடி, “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க முடியுமா?” என்று.

78. அவர் தம்முடைய சரீரத்தின் துன்பத்தைப் பற்றி ஒரு மனிதனாகப் பேசக்கூடிய சொற்கள் மூலம் பேசியதால், துன்பத்தைத் தாங்குவதற்கான ஒரு உதாரணத்தை அவர் நமக்கு விட்டுச் சென்ற அதே மனித சொற்களில் காட்டினார். ஆனால் ஒரு மனிதனாக, பரலோக சிம்மாசனத்தில் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்க முடியவில்லை. அதனால்தான் அவர், “அது என்னுடையது அல்ல” என்றும், வேறு இடங்களில் கர்த்தர், “நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை” என்றும் கூறியதாக யோவான் 7:16 பதிவு செய்கிறது. அவருடைய வார்த்தைகள் அவருடைய சரீரத்தின் வழியாகப் பேசப்படவில்லை என்றும், தெய்வீக வார்த்தைகள் சரீரத்துக்குச் சொந்தமானவை அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

79. ஆனாலும், அவர் நேசித்த தம்முடைய சீடர்களிடம், “நீங்கள் என் பாத்திரத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று முதலில் கேட்பதன் மூலம், அவர் தனது பாசத்தை தெளிவாகக் காட்டினார். அவர்களுடைய வேண்டுகோளை அவரால் நிறைவேற்ற முடியாததால், அதை மறுப்பதற்கு முன்பு, அவர் அவர்களுக்கு என்ன கொடுப்பார் என்பதைப் பற்றி விவாதிக்க அனுமதித்தார்; இது, அவர்களின் வேண்டுகோளின் நியாயத்தன்மையைப் பற்றியது என்பதை அவர்கள் உணரச் செய்வதாக இருந்தது.

80. நீங்கள் நிச்சயமாக என் கிண்ணத்தில் இருந்து அருந்துவீர்கள் என்று அவர் கூறுகிறார்; அதாவது, என் உடல் தாங்கும் துன்பத்தை நான் உங்களுக்கு மறுக்க மாட்டேன். ஒரு மனிதனாக நான் ஏற்றுக்கொண்ட அனைத்தையும், நீங்கள் பின்பற்றலாம். துன்பத்தின் வெற்றியை, சிலுவையின் மரபை நான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். ‘ஆனால், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் அமர்வது என்னால் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய ஒன்றல்ல’ என்கிறார். அவர், கொடுப்பது என்னுடையது அல்ல என்று அவர் சொல்லவில்லை, ஆனால் உங்களுக்குக் கொடுப்பது என்னுடையது அல்ல என்றே சொல்கிறார். இதன் பொருள் அவருக்கு வல்லமை இல்லை என்பதல்ல, ஆனால் அவர் படைத்த உயிரினங்கள் போதுமான அளவு தகுதியற்றவை என்றே அர்த்தம்.

81. அல்லது இதை இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்களுக்குக் கொடுப்பது என்னுடையது அல்ல, அதாவது, அது என்னுடையது அல்ல, ஏனென்றால் நான் மனத்தாழ்மையைக் கற்பிக்க வந்தேன்; அது என்னுடையது அல்ல, ஏனென்றால் நான் ஊழியம் செய்ய வந்தேன், ஊழியம் செய்விக்க அல்ல; அது என்னுடையது, ஏனென்றால் நான் நீதியைக் காட்ட வந்தேன், தயவு காட்ட அல்ல.

82. பின்னர், பிதாவைப் பற்றிப் பேசுகையில், கடவுள் மக்களின் வேண்டுகோள்களுக்கு மட்டும் செவிசாய்ப்பதில்லை, அவர்களின் தகுதிகளையும் கருத்தில் கொள்கிறார் என்று அவர் கூறினார். “கடவுள் பாரபட்சம் காட்டுபவர் அல்ல என்பதை இப்போது நான் நிச்சயமாகப் புரிந்துகொள்கிறேன்” என்று கூறப்பட்டதை அப்போஸ்தலர் 10:34 மேற்கோள் காட்டுகிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்காக மட்டுமே அவர் மக்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. அப்போஸ்தலன் மீண்டும், “அவர் முன்னறிந்தவர்களை, முன்னறிவித்தார் என்று ரோமர் 8:29 கூறியதாக பதிவு செய்கிறார்.” அவர் அவர்களை அறிவதற்கு முன்பே அவர்களை முன்னறிவிக்கவில்லை, ஆனால் முன்னறிந்தவர்களுக்கு வெகுமதியை முன்னறிவித்தார்.

83. ஆகையால், அந்தப் பெண் சாத்தியப்படாத ஒன்றை, கர்த்தரிடமிருந்து ஒரு சிறப்பு பாக்கியமாகக் கோரியதற்காகக் கடிந்து கொள்ளப்படுவது சரிதான். கர்த்தர் தம்முடைய சொந்த வெகுமதியால் இரண்டு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கும் பரிசுத்த- வான்களுக்கும் கொடுக்கத் தீர்மானித்தவற்றைக் கொடுத்தார். மேலும் அவர்களுக்காக யாரும் ஜெபிக்காமல் இருந்தபோதும் கூட, “நீங்கள் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமர்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்” என்று மத்தேயு 19:28 இல் எழுதப்பட்டுள்ளது.

84. ஆகையால், கோரிக்கை சாத்தியமாகும் என்று நாம் நினைத்தாலும், இங்கே பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லை. ஆனால் நான் அறிந்தவகையில் தேவதூதர்கள் கர்த்தரின் சிம்மாசனத்தைச் சுற்றி நிற்கிறார்கள் என்று ஏசாயா 6:2 கூறுகிறது. அப்படியானால், மனிதர்கள் தேவனுடைய குமாரனின் வலது பாரிசத்திலோ அல்லது இடது பாரிசத்திலோ அமர முடியும் என்று நான் எப்படி கற்பனை செய்ய முடியும்? “தேவதூதர்கள் மேல் வீற்றிருக்கிறவரே, உம்மை நீரே எனக்கு காட்டுவீராக” என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும், அப்போஸ்தலர்கள் தேவதூதர்கள் மேல் எப்படி உட்காருவார்கள்?

85. நான் எனது சொந்த இஷ்டத்துக்கு அமைய இந்த முடிவுக்கு வரவில்லை, ஆனால் நம் ஆண்டவர் பேசிய வார்த்தைகளிலிருந்து தான் இந்த முடிவை மேற்கொள்ள எண்ணினேன். யோவான் 17:24 இல், கர்த்தர் பிதாவிடம், “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன்” என்று கூறுகிறார். பிதா மக்களுக்கு தெய்வீக சிம்மாசனத்தைக் கொடுப்பார் என்று அவர் நினைத்திருந்தால், “நான் அமரும் இடத்தில் அவர்கள் அமர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறியிருப்பார். அதற்கு பதிலாக அவர், “அவர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று அல்ல; நான் இருக்கும் இடத்தில், நான் இருப்பது போல அல்ல” என்று கூறுகிறார்.

86. பின்னர் “அவர்கள் என் மகிமையைக் காணட்டும்” என்ற வார்த்தைகளைக் கவனிக்கவும். அவர்கள் என் மகிமையைப் பெறட்டும் என்று அவர் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் அதைப் பார்க்கட்டும். ஏனெனில் ஊழியன் பார்க்கிறான், கர்த்தர் அதைக் கொண்டிருக்கிறார்; தாவீது நமக்குக் கற்பித்தது போல, “கர்த்தருடைய மகிழ்ச்சியைக் காணட்டும்” என்று கூறினார். மேலும் கர்த்தர் தாமே இதை நற்செய்தியில் காட்டியுள்ளார், “இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று மத்தேயு 5:8 பதிவு செய்கிறது. அவர்கள் காண்பார்கள் என்றுதான் அவர் கூறுகிறாரே அன்றி, அவர்கள் தேவதூதர்கள் மத்தியில் கடவுளுடன் வீற்றிருப்பார்கள் என்று அல்ல.

87. ஆகையால், கடவுளின் குமாரனை அவரது தெய்வீக இயல்பு காரணமாக குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் பிதாவையும் குறைத்து மதிப்பிடுவீர்கள். நீங்கள் குமாரனைப் பற்றி தவறாக நம்பினால், நீங்கள் பிதாவை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது; தூய ஆவியைப் பற்றி தவறாக நினைத்தால், நீங்கள் குமாரனை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. மூன்று பொருளானவர்களிடம் ஒரு கண்ணியம், ஒரு மகிமை, ஒரு அன்பு மற்றும் ஒரு மகத்துவம் உள்ளது. மூவரில் ஒருவரிடமிருந்து நீங்கள் எதை எடுத்துக்கொள்கிறீர்களோ அது அனைவரிடமிருந்தும் பறிக்கப்படுகிறது. அவற்றை தனித்தனி பகுதிகளாகப் பிரித்தால் உண்மையான முழுமை கிடைக்காது.

அத்தியாயம் 7

பின்வரும் பகுதி ஆட்சேபனைக்கு உட்படுகிறது: “நீர் என்னை நேசித்தது போல, அவர்களையும் நேசித்தீர்” என்ற ஆட்சேபனைக்கு பதிலளிக்க, அவர் முதலில் ஆரியர்களின் விளக்கம் தவறு என்பதைக் காட்டுகிறார். பின்னர் அவர் இந்த வார்த்தைகளை மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகிறார். இறுதியாக, அவர் முழுப் பகுதியையும் கருத்திற் கொள்கிறார். இதிலிருந்து, கிறிஸ்துவின் பணி, அது சரீரத்தால் பெறப்பட்டாலும், அவரை காயப்படுத்துவதில்லை என்று அவர் முடிவு செய்கிறார். இது நிரூபிக்கப்பட்டவுடன், தெய்வீக பணி எவ்வாறு நிறைவேறுகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

88. ஓ பேரரசரான அகஸ்டஸ் அவர்களே, சிலர் தெய்வீக இயல்பு ஒன்றுதான் என்பதை மறுக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் யோவான் 17:23 இல் சொல்லப்பட்டதைப் பயன்படுத்தி, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான அன்பைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள், “நீர் என்னை நேசித்தது போல அவர்களையும் நேசித்தீர்” என்று அந்த வாசகம் கூறுகிறது. அவர்கள் இதைச் சொல்லும்போது, ​​கடவுளின் குமாரனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒப்பீட்டின் ஒருமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.

89. பிதா மிகவும் பிரியம் கொண்டுள்ள குமாரனைப் போலவே மனிதர்களையும் நேசிக்க முடியுமா? இதுகுறித்து சாட்சியமளிக்கும் விதத்தில், மத்தேயு 3:17 “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” என்று உறுதிப்படுத்துகிறது. அவர் தாமே குமாரனை மகிழ்ச்சியடையச் செய்கிறார்; அவர் மூலமாக நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக ஆகிறோம். கடவுள் தம்முடைய சொந்த குமாரனைத் தம்முடைய சொந்த சாயலில் காண்கிறவர்களுக்கு, அவர் தம்முடைய குமாரன் மூலம் மற்றைய குமாரர்களை குமாரனின் சாயலாக ஏற்றுக்கொள்கிறார். நாம் அவரைப் போலவே ஆகும்போது, ​​குமாரன் மூலம் அரவணைப்பைப் பெற அழைக்கப்படுகிறோம். கடவுள் இயல்பில் காட்டும் நித்திய அன்பு ஒன்று, ஆனால் கிருபையால் காட்டப்படும் அன்பு வேறு.

90. “நீர் என்னை நேசித்தது போல அவர்களை நேசித்தீர்” என்று எழுதப்பட்ட வார்த்தைகளைப் பற்றி அவர்கள் ஒரு விவாதத்தைத் தொடங்கி, அது ஒரு ஒப்பீடாகச் செய்யப்படுகிறது என்று நினைத்தால்; பின்வருபவை ஒப்பீடாகச் சொல்லப்பட்டதாக அவர்கள் நம்பலாம்: “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருப்பது போல இரக்கமுள்ளவராயிருங்கள்” என்று லூக்கா 6:36 இலும், “பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்” என்று மத்தேயு 5:48 இல் கூறியிருப்பதை அவர்கள் ஒப்புநோக்கலாம். ஆனால் அவர் தம்முடைய மகிமையின் முழுமையில் பரிபூரணராக இருக்கிறார். ஆனால் நாமோ நல்லொழுக்கத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே பரிபூரணமாக இருக்கிறோம். எப்போதும் நிலைத்திருக்கும் அன்பின் முழுமையுடன் பிதா குமாரனை நேசிக்கிறார். ஆனால் நம் விஷயத்தில், கிருபையின் வளர்ச்சி தான் நமக்கு கடவுளின் அன்பைப் பெற்றுத் தருகிறது.

91. அப்படியானால், கடவுள் மனிதர்களுக்கு எவ்வாறு கிருபை அளித்துள்ளார் என்பதைப் பாருங்கள், மேலும் பிதா மற்றும் குமாரனின் இயற்கையான, பிரிக்க முடியாத அன்பைப் பிரிக்க முயல்கிறீர்களா? மாட்சிமையின் ஒற்றுமை பற்றி நீங்கள் குறிப்பிடும் இடத்தில், வார்த்தைகளை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறீர்களா?

92. இந்த முழுப் பகுதியையும் பற்றி சிறிது நேரம் சிந்தித்து அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதைப் பாருங்கள்; அவர் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள்: யோவான் 17:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “பிதாவே, இப்பொழுது உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்” என்ற அருள் வார்த்தைகளைக்கொண்டு, முதல் மனிதனின் பார்வையில் இருந்து அவர் எவ்வாறு பேசுகிறார் என்பதைக் கவனியுங்கள். அந்த வேண்டுகோளில், பாவத்தில் விழுவதற்கு முன்பு, ஒரு மனிதனாக, மோட்சத்தில் கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். லூக்கா 23:43-ல் கூறப்பட்டுள்ளபடி, அவர் தனது பாடுகளின் போது கள்வனிடம் அதுபற்றிக் கூறும்போது, ‘இன்று நீ என்னுடன் மோட்சத்தில் இருப்பாய் என்று நான் உனக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார். இது உலகம் தோன்றுவதற்கு முன்பு இருந்த மகிமையைக் குறிக்கிறது. இருப்பினும், அவர் மனிதர்களுக்குப் பதிலாக உலகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார்; நீங்கள் இங்கே பார்ப்பது போல: ‘இதோ! உலகம் முழுவதும் அவரைப் பின்பற்றுகிறது’ என்று யோவான் 12:19 இலும், யோவான் 17:21-ல், “நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

93. யோவான் 17:10 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உயிரளிக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளின் குமாரனாகிய கர்த்தரின் மகத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு, “என்னுடையது எல்லாம் உம்முடையதும், உம்முடையதெல்லாம் என்னுடையதும் ஆகும்” என்று அவர் தனது மாட்சிமைக்கு ஒரு சான்றாகக் கொடுத்துள்ளார். அவர் எல்லாவற்றையும் உடையவராக இருக்கிறார். அப்படியானால், அவர் அனுப்பப்பட்டார் என்ற உண்மையை நீங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? அவருக்குத் தீங்கு செய்யவா இவ்வாறு நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

94. இருப்பினும், ரோமர் 8:3-ல் அப்போஸ்தலன் குறிப்பிட்டது போல, சரீர வடிவில் அவர் ஆற்றிய பணியின் உண்மைத் தன்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தால், பூமியில் உள்ளவர்கள் பொதுவாக விண்ணகத்தில் உள்ளவர்களால் அனுப்பப்படுகிறார்கள் என்ற ஒரு வார்த்தையின் அடிப்படையில் நீங்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். அப்படியானால், குமாரன் மனிதகுலத்தின் நன்மைக்காக அனுப்பப் பட்டார் என்ற உண்மையைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அனுப்பப்பட்டவர் யாரால் அனுப்பப்படுகிறாரோ அவரை விட தாழ்ந்தவர் என்று நீங்கள் நினைத்தால், ஒரு தாழ்ந்தவர் ஒரு உயர்ந்தவரை அனுப்பியுள்ளார் என்பதையும், உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தோபித்து 9:3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தோபியாஸ் பிரதான தூதரான ரபேலை அனுப்பினார் என்றும், எண்ணாகமம் 22:22-ல் காணப்படுவது போல், பிலேயாமை நோக்கி ஒரு தேவதூதன் அனுப்பப் பட்டார், என்றும் யூதர்களுக்கு தேவனுடைய குமாரன் அனுப்பப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

95. அல்லது தேவனுடைய குமாரன் தம்மால் அனுப்பப்பட்ட யூதர்களை விடத் தாழ்ந்தவரா? வேதாகமம் அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “கடைசியாக அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனை அவர்களிடம் அனுப்பினார், அவர்கள் என் குமாரனை வணங்குவார்கள்” என்று மத்தேயு 21:37 இல் சொல்லப்பட்டுள்ளது. அவர் முதலில் ஊழியக்காரர்களைப் பற்றியும், பின்னர் குமாரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார், அவருடைய தெய்வீக வல்லமையால் ஒரேபேறான குமாரனாகிய கடவுள், ஊழியக்காரருடன் பொதுவான பெயரோ இடமோ இல்லை என்பதைக் காட்டுவதற்காக. அவர் வணங்கப்பட வேண்டுமென அனுப்பப்படுகிறார், அங்குள்ளவர்களோடு ஒப்பிடப்படுவதற்காக அல்ல.

96. அவர் “எனது” என்ற வார்த்தையைச் சரியாகச் சேர்த்தார், இதனால் அவர் எவரோ ஒருவராகவோ அல்லது குறைந்த அல்லது வல்லமை குன்றியவராகவோ வரவில்லை, ஆனால் உண்மையிலும் உண்மையானவரிடமிருந்து, அதாவது பிதாவின் சொந்த பொருளின் சாயலாக வந்தார் என்று நாம் நம்புவோமாக.

97. இருப்பினும், அனுப்பப்பட்டவர் அவரை அனுப்பியவரை விட வல்லமையில் தாழ்ந்தவர் என்று வைத்துக்கொள்வோம். பிலாத்து அவரை ஏரோதுவிடம் அனுப்பியதால் கிறிஸ்து பிலாத்துவை விட தாழ்ந்தவர் என்றாகிவிடுமா? அப்படி அனுப்பப்பட்டதால் அவரது வல்லமை குறைந்துபோய் விடவில்லை. அவர் பிதாவிடமிருந்து அனுப்பப்பட்டதாகவே வேதாகமம் கூறுகிறது, அதேவேளை, அவர் ஒரு ஆட்சியாளரால் அனுப்பப்பட்டதாகவும் அது கூறுகிறது.

98. எனவே, தேவனுடைய குமாரனுக்குத் தகுதியான விஷயங்களை நாம் உண்மையிலேயே பற்றிக்கொண்டால், கடவுளின் வார்த்தை, அவருடைய மகத்துவத்தின் புரிந்துகொள்ள முடியாத மற்றும் விவரிக்க முடியாத மர்மத்திலிருந்து, அவரைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு, அதாவது நமக்குப் புரியும் வகையில், அவர் அனுப்பப்பட்டார் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபோது மட்டுமல்ல, அவர் நம்மிடையே வாழ்ந்தபோதும் நடந்தது. 2 கொரிந்தியர் 6:16 நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்” என்று கூறுகிறது. மேலும், கடவுள் சொன்னதாக ஆதியாகமம் 11:7 இல் “நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. கடவுள், உண்மையில் எந்த இடத்திலிருந்தும் இறங்கி வருவதில்லை; அவர் இதுபற்றிக் கூறும் போது, “நான் பரலோகம் பூலோகம் என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்” என்று எரேமியா 23:24 கூறுகிறது. இருப்பினும், தீர்க்கதரிசி கூறியது போல் கடவுளின் வார்த்தை நம் இதயங்களில் நுழையும்போது அவர் எமக்குள் இறங்குவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஏசாயா 40:3-ன்படி, “கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள். நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு வழியை அமையுங்கள்” என்றும் தீர்க்கதரிசி மேலும் கூறியுள்ளார். அவர் வாக்குறுதியளித்தபடி, “எவனொருவன் என்னை நேசிக்கிறானோ அவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான். எனது பிதா அவன்மீது அன்பு வைப்பார். நானும் எனது பிதாவும் அவனிடம் வந்து அவனோடு வாழ்வோம்” என்று யோவான் 14:23 கூறுகிறது. இதன்மூலம் அவர் எப்படி வருகிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

அத்தியாயம் 8

கடவுளின் உண்மையான குமாரனாகிய கிறிஸ்துவுக்கு கடவுளைத் தவிர வேறு எஜமானர் இல்லை; ஆனால் ஒரு மனிதனாக, அவர் சில சமயங்களில் பிதாவிடமும், மற்ற நேரங்களில் கடவுளிடமும் பேசுகிறார். வேதாகமத்தில் ஒரு வசனம் பல மதவெறி அடிப்படைகளை மௌனமாக்க முடியும். கடவுளின் குமாரனாக கிறிஸ்துவுக்குச் சொந்தமானதை தாவீதின் குமாரனாக அவருக்குச் சொந்தமானதிலிருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும், ஏனென்றால் பிந்தைய தலைப்பின் கீழ் அவர் ஒரு ஊழியன். அதேபோல் பல பகுதிகள் அவதாரத்தைக் குறிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

99. அவர் அவரை பிதாவாக அறிந்திருந்தாலும், அவரை ஆண்டவர் என்று ஏன் அழைக்கிறார் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன்” (மத்தேயு 11:25) என்று அவர் கூறுகிறார். முதலில் ஞானம் அவருடைய சொந்த பிதாவைப் பற்றிப் பேசியது, பின்னர் அவரைப் படைப்பின் ஆண்டவர் என்று அறிவித்தது. இதன் காரணமாக, உண்மையான சந்ததியினர் தங்கள் பிதாவின் மீது அதிகாரம் செலுத்துவதில்லை என்று கர்த்தர் தம்முடைய நற்செய்தியில் விளக்குகிறார்: “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார். அதற்குப் பரிசேயர்கள், “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர். பின் இயேசு பரிசேயர்களிடம், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே: “‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் வீற்றிரும் என்றும், உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’ தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு. பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை” என்று மத்தேயு 22:42-46 இல் விளக்கமாகக் கூறுகிறது.

100. ஆரியர்கள் காரணமாக இந்த சாட்சியத்தில் கர்த்தர் எவ்வளவு கவனமாக விசுவாசத்தைக் காத்தார். ஆவி அவரை ஆண்டவர் என்று அழைக்கிறது என்று அவர் சொல்லவில்லை, ஆனால் தாவீது சரீர வடிவில் தாவீதின் மகனாக இருப்பது போலவே, அவர் தாவீதின் ஆண்டவரும் அவருடைய தெய்வீக இயல்பில் கடவுளும் என்று மக்கள் நம்புவதற்காக ஆவியால் பேசினார் என்று தாவீது கூறினார். எனவே குடும்பம் அல்லது உறவைக் குறிக்கும் பட்டப்பெயர்களுக்கும் கர்த்தர் குறித்த தெய்வீகத்தனமான பட்டப்பெயர்களுக்கும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் காணலாம்.

101. வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராகிய தம்முடைய சொந்தத் தந்தையைப் பற்றி கர்த்தர் சரியாகப் பேசினார். பிதாவையும் கர்த்தரையும் பற்றி நீங்கள் படிக்கும்போது, ​​பிதா குமாரனுக்கும் பிதா என்றும், கர்த்தர் படைப்பின் ஆட்சியாளர் என்றும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிதா என்ற உன்னத நாமம் அவரது இயல்பைக் காட்டுகிறது; கர்த்தர் என்ற உன்னத நாமம் அவரது அதிகாரத்தைக் காட்டுகிறது. இயேசு, தம்முடைய தெய்வீக வடிவத்தில் கடவுளுக்குச் சமமாக இருந்தாலும், மனிதனாக மாறியதன் மூலம் ஒரு ஊழியனின் வடிவத்தை எடுத்தார். ஏனெனில் சரீரம் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. ஆனால் ஆட்சியோ தெய்வீகத்திற்கு சொந்தமானது. அப்போஸ்தலன் இதுகுறித்து பிரஸ்தாபிக்கயில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த மகிமையின் பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான்” 2 கொரிந்தியர் 1:3) சாட்சியமளிக்கிறது. அதாவது, கடவுள் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாகவும் மகிமையின் தகப்பனாகவும் ஆக்குபவர். கிறிஸ்து மகிமை என்று கடவுளுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தாரா? இல்லை. கடவுளுக்கு ஒரே ஒரு குமாரன் தான் இருக்கிறார், அவர் தான் கிறிஸ்து, கிறிஸ்து என்றால் மகிமை. அப்படியானால், பிதாவின் மகிமையாகிய அவரை நீங்கள் ஏன் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

102. ஆகையால், குமாரனே மகிமை, பிதாவே மகிமை (மகிமையின் பிதா மகிமை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது) என்றால், மகிமைகளைப் பிரிப்பது இல்லை; மகிமை ஒன்றுதான். இவ்வாறு மகிமைக்கு அதன் சொந்த இயல்பு உள்ளது, ஆனால் கர்த்தரின் தெய்வீகத்துவமானது ஏற்றுக்கொண்ட உடலுக்குச் சேவை செய்கிறது. “நான் எனது சொந்த சரீரத்தையே அடக்கி, அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்” என்று 1 கொரிந்தியர் 9:27 இல் எழுதப்பட்டிருக்கிற படி, சரீரம் நீதிமானுடைய ஆன்மாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்திருக்கும் பட்சத்தில், “எல்லாம் உமக்கே ஊழியம் செய்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கிற தேவனுக்கு அது எவ்வளவு அதிகமாய்க் கீழ்ப்படிந்திருக்கும்?

103. ஒரு கேள்வியால் கர்த்தர் சபெல்லியர்கள், ஃபோட்டினியர்கள் மற்றும் அரியர்களின் வாயை அடைத்துவிட்டார். கர்த்தர் கடவுளிடம் பேசினார் என்று அவர் சொன்னபோது, ​​சபெல்லியஸ் ஒதுக்கி வைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் ஒரே நபர் தான் பிதாவும் குமாரனும் என்று அவர் கருதுகிறார். அடுத்ததாக, ஃபோட்டினஸ் ஒதுக்கி வைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் அவரை ஒரு மனிதனாக மட்டுமே நினைக்கிறார்; ஏனென்றால், “உன் தேவனாகிய கர்த்தரை வணங்கு, அவருக்கு மட்டுமே சேவை செய்வாயாக” என்று உபாகமம் 6:13 இல் எழுதப்பட்டிருக்கிறது. தாவீது அரசனின் ஆண்டவராக வேறு யாரும் இருக்க முடியாது. நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ப பேசிய தீர்க்கதரிசி நியாயப்பிரமாணத்திற்கு எதிராகச் செயல்படுவாரா? ஆகவே ஃபோட்டினஸ் இங்கே வெளியேறுகிறார். ஆரியஸ், அவர் குமாரன் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார்; அவர் மனித தர்க்கத்தின் அடிப்படையில் வாதிட்டால், அவர் தன்னை மறுக்கிறார், மேலும் அவரது தெய்வ நிந்தனை வாதங்கள் அவருக்குத் தீங்கு விளைவிக்கத் திரும்புகின்றன. ஏனென்றால், பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான வேறுபாட்டை மனித பழக்கவழக்கங்களின் ஒப்புமையால் விளக்க முயற்சிப்பதில் (இரண்டு சந்தர்ப்பங்களிலும் இது சத்தியத்திலிருந்து விலகிச் செல்கிறது), அவர் அரிதாகவே மதிக்கும் அவரை முதலிடத்தில் வைக்கிறார், அவரை முதல் என்று அழைக்கிறார், அதே நேரத்தில் அவர் வலது பக்கத்தில் இருக்கிறார் என்று கூறுகிறார். இதன்மூலம் ஆரியஸ் தோற்றுப்போகிறார். மணீக்கியனும் இங்கே நீக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் சரீரவடிவின் அடிப்படையில் தாவீதின் குமாரன் என்பதை மறுக்கவில்லை, பார்வையிழந்தோர் அவரை நோக்கி, “இயேசுவே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்” என்று கூப்பிட்டார்கள் என்று மத்தேயு 20:30 சாட்சியம் கூறுகிறது. இயேசு அவர்களுடைய விசுவாசத்தால் மகிழ்ச்சியடைந்து அவர்களைக் குணப்படுத்தினார். இருப்பினும் பொய்யர்களால் மட்டுமே அவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டதால், இது அவரது நித்தியத்தைக் குறிக்கிறது என்பதை மணீக்கியன் ஏற்றுக்கொள்ள வில்லை.

104. தேவனுடைய குமாரன் எபியோனுக்கு எதிரானவர், தாவீதின் குமாரன் மணீக்கியர்களுக்கு எதிரானவர்; தேவனுடைய குமாரன் போட்டினஸுக்கு எதிரானவர், தாவீதின் குமாரன் மார்சியனுக்கு எதிரானவர்; தேவனுடைய குமாரன் சமோசாட்டாவின் பவுலுக்கு எதிரானவர், தாவீதின் குமாரன் வாலண்டினஸுக்கு எதிரானவர்; தேவனுடைய குமாரன் புறஜாதிப் பிழைகளைச் சுமக்கும் ஆரியஸ் மற்றும் சபெலியஸுக்கு எதிரானவர். தாவீதின் கர்த்தர், சரீர வடிவில் தேவனுடைய குமாரனைக் கண்டு, அவரை ஒரு மனிதன் என்று மட்டுமே நம்பிய யூதர்களுக்கு எதிரானவர்.

105. ஆனால் திருச்சபையின் விசுவாசத்தில், இயேசு பிதாவாகிய தேவனுடைய குமாரனும் தாவீதின் குமாரனுமாவார். அவதாரத்தின் மர்மம் – கடவுள் மனிதனாக மாறிய தருணம் – வேதாகமம் கூறுவது போல், எல்லா படைப்புகளையும் இரட்சித்தது. “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்” என்று எபிரேயர் 2:9 கூறும் அதேவேளை, “தேவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் அழிவின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படும்” என்று ரோமர் 8:21 கூறுகிறது.

106. தெய்வீக இயல்பால் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கும், மனித உடலைத் தரித்து குமாரன் என்று அழைக்கப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. தெய்வீக தலைமுறையின்படி, குமாரன் பிதாவாகிய கடவுளுக்குச் சமமானவர்; மனித உடலைத் தரித்த பின் அவர் பிதாவாகிய கடவுளுக்கு ஊழியராகிறார். ஆகவே அவர் ஒரு ஊழியரின் வடிவத்தை எடுத்தார் என்று பிலிப்பியர் 2:7 கூறுகிறது. ஆனாலும் குமாரன் ஒரே நபராகவே இருக்கிறார். அவருடைய மகிமையில் அவர் பரிசுத்த முற்பிதாவான தாவீதுக்கு ஆண்டவராக இருக்கிறார். இருப்பினும், உண்மையான வம்சாவளியின் அடிப்படையில் அவர் தாவீதின் குமாரராக இருக்கிறார். அவர் தமக்கென எதையும் விட்டுக் கொடுக்காமல், நம் இனத்தின் தத்தெடுப்புடன் ஒன்றித்துச் செல்லும் உரிமைகளைத் தமக்காகப் பெறுகிறார்.

107. தாவீதின் வம்சாவளி என்பதால் மட்டுமல்ல, அவருடைய பெயராலும் அவர் ஒரு மனிதனாக சேவை செய்கிறார். “நான் என் ஊழியக்காரனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்” என்றும், வேறு இடங்களில்: “இதோ, நான் என் ஊழியனை உங்களுக்கு அனுப்புவேன், கிழக்கு என்பது அவருடைய பெயர்” என்றும் சகரியா 3:8 கூறுகிறது. மேலும் குமாரன் தாமே கூறுகிறார்: “கர்ப்பத்திலிருந்து என்னைத் தம் ஊழியனாகத் தேர்ந்தெடுத்து, உருவாக்கி, என்னை நோக்கி: நீ என் ஊழியன் என்று அழைக்கப்படுவது ஒரு பெரிய விஷயம்” என்று கூறிய கர்த்தர், இதோ பூமியின் எல்லைகள் வரைக்கும் நீ இரட்சிப்புக்காக இருக்கும்படி, நான் உன்னை என் ஜனங்களுக்குச் சாட்சியாகவும், புறஜாதிகளுக்கு ஒளியாகவும் ஏற்படுத்தினேன்” என்று ஏசாயா 49:5-6 கூறுகிறது. கிறிஸ்துவை நோக்கி இல்லையென்றால், இது இவரை நோக்கிச் சொல்லப்பட்டது? தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார்” என்றும் பிலிப்பியர் 2:6-7 கூறுகிறது. அப்படியானால், கடவுளின் உருவில் முழுமையுடன் இருப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

108. அப்படியானால், இதன் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்: அவர் ஒரு ஊழியரின் வடிவத்தை எடுத்தார். இதன் பொருள் அவர் மனிதகுலத்தின் அனைத்து நல்ல அம்சங்களையும் முழுமையாக எடுத்துக்கொண்டார், மேலும் அவர் முழுமையாகக் கீழ்ப்படிந்தார். சங்கீதம் 30 இவ்வாறு கூறுகிறது, “நீர் என் பாதங்களை விசாலமான இடத்தில் வைக்கச் செய்தீர். என் எல்லா எதிரிகளாலும் நான் ஏளனம் செய்யப்பட்டேன். உமது திருமுகத்தை உமது அடியேன்மேல் பிரகாசிக்கச் செய்யும்” என்று. இங்கே ஊழியன் என்பது கன்னியிடம் பிறந்த பரிசுத்தமாக்கப்பட்ட, அபிஷேகம் செய்யப்பட்ட, நியாயப்பிரமாணத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு மனிதன்; சுருக்கமாக, உமது அடியாளின் மகனான, ஒரு தாயைக் கொண்ட மனிதன். இது எழுதப்பட்டுள்ளது: “ஆண்டவரே, நான் உமது அடியான், நான் உமது அடியாளின் மகன்,” மீண்டும் சொல்கிறேன், “நான் பணிந்து தாழ்த்தப்பட்ட மனிதன்.”

109. தம்முடைய கீழ்ப்படிதலினால் அனைவரையும் இரட்சிக்க வந்த கிறிஸ்துவை விட தாழ்மையுள்ளவர் யார்? “ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர்” என்று ரோமர் 5:19 கூறுகிறது. இரட்சிப்பின் பாத்திரத்தைப் பெற்றவர் யார்? பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்துவா, அல்லது ஒருபோதும் ஆசாரியத்துவம் வகிக்காத அல்லது துன்பத்தைத் தாங்காத தாவீதா? நன்றி செலுத்தும் பலியை யார் செலுத்தினார்கள்?

110. ஆனால் அது போதாது; மீண்டும் படியுங்கள்: என் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளும், ஏனென்றால் நான் பரிசுத்தமானவன் என்று தாவீது இதைத் தானே சொன்னாரா? இல்லை, கடவுள் அதைச் சொல்கிறார். மேலும் அவர் மேலும் கூறும்போது: “நீர் என் ஆத்துமாவை நரகத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தமானவர் அழிவைக் காண விடமாட்டீர்.” அதே பத்தியில் இவை இரண்டையும் கூறுகிறது.

111. அவர் மேலும், உமது அடியேனை இரட்சியும் என்றும், உமது அடியேனுக்கும் உமது அடியாளின் குமாரனுக்கும் உமது வல்லமையைக் கொடும் என்றும் கூறினார். பின்னர் எசேக்கியேல் 34:23-24 இல், “நான் அவற்றுக்கு மேலாக ஒரு மேய்ப்பனை நியமிப்பேன். அவனே என் தாசனாகிய தாவீது. அவன் அவற்றுக்கு உணவளித்து அவர்களின் மேய்ப்பனாக இருப்பான். பிறகு கர்த்தரும் ஆண்டவருமான நான் அவர்களின் பிரபுவாயிருப்பேன்” என்று கூறப்பட்டுள்ளது. ஈசாயின் மகனான தாவீது ஏற்கனவே இறந்துவிட்டார், எனவே இது கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறது. அவர் நமக்கு மனித உருவில் ஒரு ஊழியைக்கு மகனானார். அவருடைய தெய்வீக தலைமுறையின்படி அவருக்குத் தாய் இல்லை, தந்தை மட்டுமே; அவர் பூமிக்குரிய இச்சையின் கனி அல்ல, கடவுளின் நித்திய வல்லமை.

112. ஆகையால், “என் நேரம் இன்னும் வரவில்லை” (யோவான் 7:8) என்றும், “இன்னும் சிறிது காலம் நான் உங்களுடனே இருக்கிறேன், என்னை அனுப்பியவரிடத்திற்குப் போகிறேன்” (யோவான் 7:33) என்றும், “இப்போது மனுஷகுமாரன் மகிமைப்படுத்தப்படுகிறார்” (யோவான் 13:31) என்றும் கர்த்தர் சொல்வதைப் படிக்கும்போது, ​​இவை அவதாரத் திருச்சடங்கைக் குறிக்கின்றன. ஆனால், “தேவன் அவரில் மகிமைப்படுகிறார், தேவன் அவரை மகிமைப்படுத்தினார்” (யோவான் 13:31) என்று நாம் வாசிக்கும்போது, ​​இதில் என்ன சந்தேகம் இருக்கிறது? இது குமாரன் பிதாவால் மகிமைக்குள்ளாகிறார் என்றும் பிதா குமாரனால் மகிமைக்குள்ளாகிறார் என்பதையும் காட்டுகிறது.

113. அடுத்து, கடவுள் திரித்துவத்தின் ஒற்றுமையைக் காட்ட, ஆவியானவர் அவரை மகிமைப்படுத்துவார் என்றும் கூறினார்: “உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார்” என்று யோவான் 16:14 இல் பதிவுசெய்கிறது. எனவே பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய குமாரனையும் மகிமைப்படுத்துகிறார். அப்படியானால், அவர் எப்படி, “எனக்கு நானே மகிமை அளித்துக் கொண்டால் அது வீணாகிவிடும்” (யோவான் 8:54) என்று கூறமுடியும்? அப்படியானால் குமாரனின் மகிமை என்பது ஒன்றுமற்றதா? இந்த வார்த்தைகளை நாம் அவருடைய சரீர ரீதியாகப் பயன்படுத்தாவிட்டால், அது தெய்வ நிந்தனையாகும்; ஏனென்றால் குமாரன் ஒரு மனிதனின் இயல்பில் பேசினார், ஏனென்றால் தெய்வீகத்துடன் ஒப்பிடுகையில் சரீரத்தின் மகிமை வலுவிழந்ததாகி விடுகிறது.

114. அவர்கள் தங்கள் சொந்த பொய்யை மட்டுமே வெளிப்படுத்தும் தீய ஆட்சேபனைகளை நிறுத்தட்டும். எழுதப்பட்டபடி, இப்போது மனுஷகுமாரன் மகிமைப்படுத்தப்படுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். மனுஷகுமாரன் மகிமைப்படுத்தப்படுகிறார் என்று எழுதப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்: கடவுள் அவரில் மகிமைப்படுத்தப்படுகிறார். மனுஷகுமாரனுக்கு நான் சாக்குப் போக்கைச் சொல்ல முடியும், ஆனால் அவர் தம்முடைய பிதாவுக்கு சாக்குப்போக்கைச் சொல்ல முடியாது; ஏனென்றால் பிதா மனிதனாக மாறவில்லை. நான் ஒரு வீண்காரணத்தைக் கேட்க முடியும், ஆனால் நான் அதைப் பயன்படுத்த மாட்டேன். அப்படிப்பட்ட எதுவும் அவரிடம் இல்லை, அவர் தவறான விமர்சனத்துக்கு உள்ளாகிறார். அதன் தெளிவான அர்த்தத்தில் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும். உடல் ரீதியாக வரும்போது, ​​நான் உடல் ரீதியாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு அர்ப்பணிப்புள்ள மனம், சரீரத்தைப் பற்றிச் சொல்லப்பட்டதற்கும் தெய்வீகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய முடியும். மறுபுறம், ஒரு களங்கமுள்ள மனம் தெய்வீகத்தைப் பற்றிச் சொல்லப்பட்ட அனைத்தையும் புறக்கணித்து, சரீரத்தின் அற்ப விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

அத்தியாயம் 9

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் நாமத்திலும்” என்ற வார்த்தைகளின் வரிசையை யூத வழியில் எதிர்க்கும் மக்களை புனிதர் சந்திக்கிறார். பிதாவின் நாமத்திலும் குமாரன் பெரும்பாலும் பெயரிடப்படுகிறார் என்று அவர் பதிலளிக்கிறார். ஆனால் இந்த ஆட்சேபனைக்கு அவர் ஏற்கனவே ஒரு பதிலைக் கொடுத்துள்ளார் என்பதை முதலில் குறிப்பிடுகிறார்.

115. யூத வழியைப் பின்பற்றும் ஆரியர்கள் ஏன் கடவுளின் வார்த்தைகளை இவ்வளவு தவறாக விளக்குவதோடு, வெட்கமற்ற ஒலிபெருக்கிகளைப்போல் செயல்படுகிறார்கள்? பிதாவில் ஒரு வல்லமை, குமாரனில் ஒரு வல்லமை, பரிசுத்த ஆவியில் ஒரு வல்லமை என்று கூடச் சொல்கிறார்கள். “போய், எல்லா தேசத்தாருக்கும் போதித்து, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறதே? ஒருவேளை வார்த்தைகளின் வரிசையின் காரணமாக அவர்கள் தெய்வீக வல்லமையை வேறுபடுத்திக் காட்டுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

116. எனது முந்தைய கட்டுரையில் மாட்சிமை மற்றும் பெயரின் ஒற்றுமை குறித்த சாட்சியத்தை நான் ஏற்கனவே விவாதித்திருந்தாலும், இதைத்தான் அவர்கள் தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று விரும்பினால், பல சந்தர்ப்பங்களில் குமாரனை முதல்நிலைப்படுத்தி, பிதா அதைத் தொடர்ந்து வருவதாகக் கூறும் வேதவசனங்களைக் கொண்டு நான் என் கருத்தை ஆதரிக்க முடியும். எனவே, ஆரியர்கள் கூறுவது போல், குமாரனின் பெயர் முதலில் வருவதால், பிதா எப்படியோ குமாரனுக்குக் கீழ்ப்படிந்தவர் என்பது உண்மையாகி விடுமா? இல்லவே இல்லை! நான் சொல்கிறேன், நிச்சயமாக இல்லை. விசுவாசம் அத்தகைய படிநிலையை அங்கீகரிக்கவில்லை; அது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிளவுபட்ட மரியாதையை அங்கீகரிக்கவில்லை. கடவுளுக்குள் எந்த மாறுபட்ட நிலைகளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை, கேள்விப்பட்டதும் இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது கடவுளைப் பற்றி நான் ஒருபோதும் படித்ததில்லை. ஏசாயா 44:6 இல் “நான் ஒருவரே தேவன்! வேறு எந்தத் தெய்வமும் இல்லை. நானே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறேன்” என்று சொல்லப்பட்டிருப்பது ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளைப் பற்றி நமக்குச் சொல்கிறது, மேலும் உண்மையான கடவுள் ஒருவரைப் பற்றி மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

117. வார்த்தைகளின் வரிசையை நாம் மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றினால், குமாரன் பிதாவின் வலது பக்கத்தில் அமரக்கூடாது, தன்னை முதல் மற்றும் ஆதி என்று அழைக்கக்கூடாது. சுவிசேஷகர் கடவுளுடன் அல்ல, வார்த்தையுடன் தொடங்குவது தவறு, ஏனென்றால் யோவான் 1:1 கூறுகிறது, “ஆதியில் வார்த்தை இருந்தது, வார்த்தை கடவுளுடன் இருந்தது” என்று. மனித வழக்கப்படி, பிதா முதலில் பெயரிடப்பட வேண்டும். அப்போஸ்தலன் அவர்களின் வரிசையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர் இவ்வாறு கூறுகிறார், “இயேசுக் கிறிஸ்துவின் ஊழியரான பவுல் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார், கடவுளின் நற்செய்திக்காகப் பிரிக்கப்பட்டார்” என்று ரோமர் 1:1 கூறுகிறது. அதேபோல், 2 கொரிந்தியர் 13:14 “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை, கடவுளின் அன்பு, பரிசுத்த ஆவியின் நட்புறவு உங்கள் அனைவரோடும் இருப்பதாக” என்று கூறுகிறது. நாம் வார்த்தைகளின் வரிசையைப் பின்பற்றினால், அவர் குமாரனை முதலிடத்திலும் பிதாவை இரண்டாவதாகவும் வைக்கிறார். வார்த்தை வரிசை மாறக்கூடும், எனவே பிதாவுக்கும் அவருடைய குமாரனுக்கு இடையிலான ஒழுங்கையோ அல்லது அந்தஸ்தையோ பற்றி நாம் கேள்வி கேட்கக்கூடாது, ஏனென்றால் தெய்வீகத்தில் ஒற்றுமையின் பிரிவு என்று எதுவும் இல்லை.

அத்தியாயம் 10

என்னை விசுவாசிக்கிறவன் என்னை விசுவாசிக்கவில்லை, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கிறான்” போன்ற வார்த்தைகளைக் களங்கப்படுத்துவதில் ஆரியர்கள் புறஜாதியினருடன் வெளிப்படையாக இணைந்தே இருக்கிறார்கள். எனினும், இந்தப் பகுதியின் உண்மையான அர்த்தம் விளக்கப்பட்டுள்ளது. கர்த்தர் நம்மை அவரில் விசுவாசம் கொள்ளத் தடைசெய்கிறார் என்று நாம் நினைக்காமல் இருக்க, அவர் ஒரு காலத்தில் கடவுளாகவும் மற்றொரு காலத்தில் மனிதனாகவும் இருந்து எவ்வாறு பேசினார் என்பதைக் காட்டுகிறது. அந்த விசுவாசத்தின் வெவ்வேறு முடிவுகளின் உதாரணங்களைக் கொடுத்த பிறகு, மற்ற பகுதிகளையும் அதே வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் காட்டுகிறார்

118. இறுதியாக, அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க, நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க வேண்டும் என்ற கருத்தை நற்செய்தியில் எழுதப்பட்டதாகக் கூறி அவர்கள் நிராகரிக்கிறார்கள். “என்னை விசுவாசிக்கிறவன் என்னை விசுவாசிக்கவில்லை, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கிறான்” என்று யோவான் 12:44 இல் கூறப்பட்டுள்ள வாசகத்தை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். நான் இந்த ஒப்புதலை எதிர்பார்த்தேன்; உங்கள் வாதங்களால் நீங்கள் ஏன் என்னை தவறாக வழிநடத்தினீர்கள்? நான் விசுவாசிகள் அல்லாதவர்களை எதிர்க்கிறேன் என்று எனக்குத் தெரியும். உண்மையில், அவர்கள் மதம் மாறிவிட்டார்கள், ஆனால் நீங்கள் இன்னும் மாறவில்லை. [ஞானஸ்நானம்] என்ற திருச்சடங்கு செல்லுபடியாகும் என்று அவர்கள் நம்பினால்; நீங்கள் அதை எடுத்துக்கொண்டீர்கள், ஆனால் அதை அழித்துவிட்டீர்கள். ஒருவேளை அது உண்மையில் பெறப்படாமலோ அல்லது ஆரம்பத்திலிருந்தே போலியாகவோ இருந்திருக்கலாம்.

119. “என்னை விசுவாசிக்கிறவன் என்னிடத்தில் மாத்திரமல்ல, என்னை அனுப்பியவரையும் விசுவாசிக்கிறான்” என்று எழுதப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்: தேவனுடைய குமாரன் காணப்பட வேண்டுமென விரும்புகிறார்; அது கூறுகிறது, “என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான், ஏனென்றால் பிதா குமாரனில் காணப்படுகிறார்” என்று யோவான் 12:45 கூறுகிறது.” இது அவர் முன்பு பேசியதை விளக்குகிறது: பிதாவை அறிக்கையிடுகிறவன் குமாரனை விசுவாசிக்கிறான். குமாரனை அறியாதவன் பிதாவை அறியான். குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை ஏற்றுக்கொள்பவன் அல்ல, என்று 1 யோவான் 2:23 கூறுகிறது.

120. எனவே “என்னை நம்புவதில்லை” என்பதன் அர்த்தம் என்ன? அது நீங்கள் பார்க்கக்கூடிய ஒரு உருவத்தை அல்லது நீங்கள் சந்திக்கும் மனிதனை மட்டும் நம்புவது என்று அர்த்தமல்ல. ஒரு மனிதனை மட்டும் நம்பாமல், இயேசு கிறிஸ்துவே கடவுளும் மனிதனுமாக இருக்கிறார் என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே ‘நாம் நம்ப வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார். அதனால்தான் அவர், ” நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன்” என்று யோவான் 7:28 இலும், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான்” என்று யோவான் 8:25 இலும் கூறப்பட்டவைகளைப் பார்க்கும்போது, ஒரு மனிதனாக அவர் தானாகவே வரவில்லை; கடவுளின் குமாரனாக அவர் தொடக்கத்தை மனித வடிவில் எடுக்கவில்லை; ஆனால் நான் தான், நான் உங்களுக்குச் சொல்லும் தொடக்கம் என்று அவர் கூறுகிறார். நான் பேசும் வார்த்தைகள் மனித வார்த்தைகள் அல்ல, அவை தெய்வீகமானவை என்றும் கூறுகிறார்.

121. அவர் நம்மை நம்ப மறுத்தார் என்று நினைப்பதும் சரியல்ல, ஏனென்றால் அவர் தாமே, “என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்” என்று யோவான் 12:46 இலும், “குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர்” என்று யோவான் 6:40 இலும், “தேவனை விசுவாசியுங்கள், ஆனால், என்னிலும் விசுவாசம் வையுங்கள்” என்று யோவான் 14:1 இலும் கூறப்பட்டவை அவர் என்றும் எம்மை நிராகரிப்பவர் அல்ல என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன.

122. ஆகையால், பிதா இல்லாமல் எவரும் குமாரனைப் பெறமுடியாது. ஏனென்றால் நாம் குமாரனைப் பற்றிப் படிக்கிறோம். குமாரனுக்கு பிதாவானவர் இருக்கிறார். ஆனால் காலத்திலோ, அவருடைய துன்பத்தினாலோ, அவருடைய எண்ணங்களாலோ, கிருபையினாலோ அல்ல. நான் அவருடைய தலைமுறையைப் பற்றிப் படித்திருக்கிறேன்; அவருடைய எண்ணங்கள் பற்றி நான் படிக்கவில்லை. பிதா கூறுகிறார்: நான் அவரைப் பெற்றெடுத்தேன்; நான் அவரைப் படைத்தேன் என்று சொல்லவில்லை. மேலும் குமாரன் கடவுளை தனது தெய்வீகத்தின் நித்திய தலைமுறையில் படைப்பாளர் என்று அழைக்கவில்லை, ஆனால் அவரை பிதா என்று தான் அழைக்கிறார்.

123. சில சமயங்களில் அவர் தன்னை ஒரு மனிதனாகவும், மற்ற நேரங்களில் கடவுளின் மாட்சிமையாகவும் காட்டுகிறார்; சில சமயங்களில் அவர் தெய்வீகத்தில் பிதாவுடன் ஐக்கியத்தைக் கோருகிறார், மற்ற நேரங்களில் அவர் மனித சரீரத்தின் அனைத்து பலவீனங்களையும் ஏற்றுக்கொள்கிறார். சில சமயங்களில் அவருக்கு தனிப்பட்ட போதனை இல்லை என்றும், அவர் தனது சொந்த விருப்பத்தைத் தேடவில்லை என்றும், மற்ற நேரங்களில் அவரது சாட்சியம் உண்மையல்ல என்றும் கூறுகிறார், பின்னர் அது உண்மை என்று கூறுகிறார். அவர் ஒருமுறை, “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று யோவான் 5:31 கூறுகிறது. பின்னர் முன்னையதற்கு எதிர்மாறாக, “நான் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறியதாக யோவான் 7:14 கூறுகிறது.

124. கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சாட்சி எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? அதை நம்பிய நல்ல கள்வன், “நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” (லூக்கா 23:41 ) என்றான். ஆகவே சிலுவையில் தொங்கியபடி, தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைச் செலுத்திய போதிலும், கள்வனின் பாவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, குற்றமற்றவனுக்கு தகுந்த பலனைப் பெற்றுக்கொடுக்க வில்லையா? என்று லூக்கா கூறுகிறது.

125. பவுல் வஞ்சிக்கப்பட்டாரா, ஏனென்றால் அப்போஸ்தலர் 9:12, அவர் விசுவாசித்த பிறகு பார்வை பெற்றார் என்று கூறுகிறது. அப்படியானால் விசுவாசிப்பதற்கு முன்பே அவர் பார்வையை இழந்தாரா?

126. யோசுவா 5:13 இல் கூறப்பட்டுள்ளபடி, நூனின் மகனான யோசுவா, பரலோகப் படையின் தலைவரை அடையாளம் காணத் தவறினாரா? ஆனால் அவர் விசுவாசத்தைத் தழுவிக்கொண்ட பிறகு, உடனடியாக போரில் வெற்றி பெற்றார். அதுமட்டுமன்றி, விசுவாசப் போரில் வெற்றிபெறத் தகுதியானவர் ஆனார். அவர் தனது ஆயுதமேந்திய அணிகளை போருக்கு அழைத்துச் செல்லவில்லை, எதிரியின் அரண்களை, இடிக்கும் ஆயுதங்கள் அல்லது பிற போர் தளபாடங்களால் அவர் உடைக்கவில்லை, ஆனால் ஆசாரியர்களால் ஊதப்பட்ட ஏழு எக்காளங்களின் ஒலியால் வெற்றி பெற்றார். இவ்வாறு எக்காள முழக்கமும் ஆசாரியர்களின் அதிகாரமும் கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.

127. ஒரு விலைமாது இதைக் கண்டாள். நகரம் அழிக்கப்படும்போது, ​​அவளுக்குள் இருந்த விசுவாசம் குன்றி பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.. அவள் தனது பாதுகாப்பு முதலான அனைத்து நம்பிக்கையையும் இழந்தாள். இருப்பினும், யோசுவா 2:18 சொல்வது போல் அவளுடைய விசுவாசத்தின் அடையாளமாகவும் கர்த்தருடைய பாடுகளின் ஆதாரமாகவும் அவள் ஜன்னலில் ஒரு கருஞ்சிவப்பு நாடாவைக் கட்டினாள். உலகத்தை மீட்க வேண்டிய இரத்தத்தின் சாயலை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக இது உருவாக்கப்பட்டது. எனவே, வெளிப்புறமாக, யோசுவா என்ற பெயர் போரிட்டவர்களுக்கு வெற்றியின் அடையாளமாக இருந்தது; உட்புறமாக, கர்த்தருடைய பாடுகளின் அடையாளம் ஆபத்தில் இருந்தவர்களுக்கு இரட்சிப்பின் அடையாளமாக இருந்தது. எனவே, ராகாப் இந்த பரலோக மறைபொருளைப் புரிந்துகொண்டதால், ‘என்னை அறிந்த ராகாபையும் பாபிலோனையும் நான் நினைவில் கொள்வேன்’ என்று கர்த்தர் சங்கீதத்தில் கூறுகிறார்.

128. ஆண்டவரே, உமது சாட்சியம் மனித பலவீனத்தின் அடிப்படையில் இருந்திருக்குமானால், எப்படி பொய்யாக முடியும்? அடிப்படையில் ஒவ்வொரு நபரும் பொய்யரே!

129. இறுதியாக, அவர் ஒரு மனிதனாகப் பேசினார் என்பதைக் காட்ட, அவர் சொன்னது இதுதான்: யோவான் 8:18 “நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்கிறது. இருப்பினும், கடவுளாக அவரது சாட்சியம் செல்லுபடியாகும். என் பதிவு உண்மையானது. “நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது” என்றும், “சாதாரணமாக ஒரு மனிதனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை” என்று யோவான் 8:14-15-ல் பதிவொன்று காணப்படுகிறது. எனவே, அவர்கள் தெய்வீகக் கண்ணோட்டத்தில் அல்ல, மாறாக மனிதக் கண்ணோட்டத்துடன் தீர்ப்பளிக்கிறார்கள். ஏனென்றால், கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்கும் திறன் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

130. எனவே, “விசுவாசிக்கிறவன் என்னை விசுவாசிக்கவில்லை” அல்லது “என்னை அனுப்பிய பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்று பொருள் படும்படி, “நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும்” என்று யோவான் 12:49 இல் கூறப்பட்டுள்ளது. ஆகவே, அந்த வார்த்தைகளை எங்கு இடவேண்டும் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். இறுதியாக, கட்டளை என்றால் என்ன என்பதை அவர் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்: “என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன்” என்று யோவான் 10:17 இல் கூறப்பட்டுள்ளது. அவர் அதை என் ‘சொந்த விருப்பப்படி கொடுக்கிறேன் என்றும், அப்படியானால், அவர் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவோ அல்லது எடுத்துக்கொள்ளவோ ​​முழு அதிகாரம் பெற்றிருந்தார்’ என்பதைக் காட்டுவதற்காக இது வெளிப்படுத்தப் பட்டுள்ளது என்பதை நீங்கள் காணலாம்; அவர் மேலும் குறிப்பிட்டது போல: “என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்று யோவான் 10:18-ல் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது.

131. எனவே, அது ஒரு கட்டளையாக இருந்தாலும் சரி அல்லது சில இலத்தீன் கையெழுத்துப் பிரதிகள் கூறுவது போல, அது ஒரு திசை, அது அவருக்கு கடவுள் என்ற ரீதியில் கொடுக்கப்படவில்லை, ஆனால் சரீர வடிவிலான ஒரு மனிதனாக அவருக்குக் கொடுக்கப்பட்டது, இது அவர் தனது பாடுகளைத் அனுபவித்து அடைய வேண்டிய வெற்றியைக் குறிக்கிறது.

அத்தியாயம் 11

கிறிஸ்து தன்னைப் பற்றி எதுவும் பேசுவதில்லை என்ற உண்மையை அவருடைய மனித இயல்புடன் நாம் தொடர்புபடுத்த வேண்டும். பிதாவைக் கடவுளாகக் கேட்பதாகவும், பார்ப்பதாகவும் கூறுவது சரியானது என்பதைக் காட்டிய பிறகு, கடவுளின் குமாரன் ஒரு சிருஷ்டி அல்ல என்பதை பல சான்றுகளுடன் அவர் நிரூபிக்கிறார்.

132. கடவுளின் குமாரன் மிகவும் தாழ்த்தப்பட்டவர் என்றும், முதலில் கேட்டாலன்றி, அவரால் பேசவோ செயல்படவோ முடியாது என்றும், அவர் என்ன செய்கிறார் அல்லது சொல்வதற்கு ஒரு நிலையான வரையறை இருப்பதாகவும் நாம் உண்மையில் நினைக்கக் கூடுமா? ஏனெனில் “என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றும் யோவான் 12:50 இல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த வார்த்தைகள் சரீரத்தின் கீழ்ப்படிதலை அல்லது விசுவாசத்தின் ஐக்கியத்தைக் குறிக்கின்றன. பல கற்றறிந்த மனிதர்கள், குமாரன் கேட்கிறார் என்றும், பிதா குமாரனிடம் தங்கள் இயல்பின் ஒற்றுமையின் மூலம் பேசுகிறார் என்றும் கூறுகிறார்கள்; ஏனெனில், பிதா விரும்புவதை குமாரன் அறிந்திருப்பது, அவர்களின் சித்தத்தின் ஒற்றுமையால் குமாரன் கேட்டதாகத் தெரிகிறது.

133. இங்கே விஷயம் என்னவென்றால், திரித்துவத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடமை இருக்கிறது என்பதல்ல, மாறாக அவர்கள் ஒன்றாகச் செயல்படுகிறார்கள். வார்த்தைகள் சத்தமாகப் பேசப்படுகின்றன என்று அர்த்தமல்ல, ஆனால் பிதாவும் குமாரனும் பகிர்ந்து கொள்ளும் ஒரே விருப்பமும் சக்தியும் உள்ளது. பரிசுத்த ஆவியும் இதைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது: “உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார்” என்று யோவான் 16:13 பதிவு செய்கிறது. இதிலிருந்து நாம் ஆவியானவர் என்ன சொல்கிறாரோ, அதையே குமாரன் கூறுகிறார்; குமாரன் என்ன சொல்கிறாரோ, அதையே பிதா கூறுகிறார் என்று கற்றுக்கொள்கிறோம். ஏனெனில் திரித்துவத்தில் ஒரே மனமும் ஒரே செயல்பாட்டு முறையும் உள்ளது. பிதா குமாரனில் காணப்படுவது போல – உடல் தோற்றத்தால் அல்ல, தெய்வீக ஒற்றுமையால் – பிதா குமாரனில் பேசுகிறார், பூமிக்குரிய குரல் அல்லது மனிதனால் எழுப்பப்படும் ஒலியுடன் அல்ல, மாறாக அவர்களின் கிரியைகளின் ஐக்கியத்தில். “நான் உங்களுக்குச் சொன்னவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை அல்ல. பிதா என்னில் வாழ்கிறார். அவர் அவருடைய பணியைச் செய்கிறார்” என யோவான் 14:10 கூறுகிறது. அவர் மேலும் கூறுகையில், “நான் பிதாவில் இருக்கிறேன். பிதா என்னில் இருக்கிறார் என்று நான் சொல்லும்போது என்னை நம்புங்கள். இல்லாவிட்டால் நான் செய்த அற்புதங்களுக்காவது என்னை நம்புங்கள்” என்று யோவான் 14:11 இல் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

134. பரிசுத்த வேதாகமத்தின் முழு போக்கையும் அடிப்படையாகக் கொண்ட எங்கள் புரிதல் தான் இது; இருப்பினும், கடவுளைப் பற்றி சரியாக சிந்திக்க மறுக்கும் அரியர்கள், அவர்களின் செயல்களுக்கு ஏற்ற ஒரு உதாரணத்தால் அவர்களை மௌனித்துவிட முடியும். குறிப்பாக தங்கள் தந்தையான பிசாசின் செயல்களைத் தங்கள் கண்களால் பார்க்க முடியாது என்பதால் அவர்கள் எல்லாவற்றையும் வெறும் உடல் ரீதியான வழியில் விளக்கக்கூடாது. கர்த்தர் தங்கள் சகாக்களான யூதர்களைப் பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்: யோவான் 8:38 இல், “என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்ற குறிப்பு, அவர்கள் பிசாசின் கிரியையைக் கண்டதால் அல்ல, மாறாக அவருடைய சித்தத்தைச் செய்ததால் கண்டனத்துக்கு உள்ளாகின்றனர். ஏனெனில் பிசாசு காணப்படாதவன், அவர்களின் சொந்த தீய நோக்கங்களுக்கு ஏற்ப அவன் அவர்களில் பாவத்தை உண்டாக்குகிறான். 2 தீமோத்தேயு 3:9 இல் “அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர்” என்கிறது. ஆகவே இந்த துரோகிகளின் முட்டாள்தனத்தால் அப்போஸ்தலன் செய்தது போல் நாமும் இதை எழுதியுள்ளோம்.

135. ஆனால் கடவுளின் மாட்சிமையின் ஒற்றுமையில் பிதா குமாரனில் வசிக்கிறார் என்றும், குமாரன் பிதாவிடமிருந்து அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்பது போல் தோன்றுகிறது என்றும் வேதாகமத்திலிருந்து தெளிவாகக் காட்டினோம். பிதாவும் குமாரனும் ஒரே கௌரவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அறிவதன் மூலம் மாட்சிமையின் ஐக்கியத்தை வேறு எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? இது 1 கொரிந்தியர் 2:8 இல் காணப்படுவதுபோல, “இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள்” என்ற அந்தக் கருத்தை வெளிப்படுத்த உதவுகிறது.

136. குமாரன் மகிமையின் தேவனும் மகிமையின் கர்த்தருமாவார், ஆனால் மகிமை சிருஷ்டிகளுக்குக் கீழ்ப்படிந்ததல்ல, எனவே குமாரன் ஒரு சிருஷ்டி அல்லர்.

137. எபிரேயர் 1:3 இன் படி, ‘குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார்.’ ஆனால் ஒவ்வொரு உயிரினமும் அந்த தெய்வீக பொருளிலிருந்து வேறுபட்டது. இருப்பினும், குமாரன் கடவுளிடமிருந்து வேறுபட்டவர் அல்ல, எனவே குமாரன் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் அல்ல.

138. “அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை” என்று பிலிப்பியர் 2:6 கூறுகிறது. ஆகவே எந்த உயிரினமும் கடவுளுக்குச் சமமானது அல்ல. இருப்பினும், குமாரன் சமமானவர், ஆனபடியால் அவர் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் அல்ல.

139. ஒவ்வொரு உயிரினமும் மாற்றத்துக்கு உட்படக்கூடியது; ஆனால் கடவுளின் குமாரன் மாற்றத்துக்கு உட்படக்கூடியவர் அல்ல; எனவே கடவுளின் குமாரன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் அல்ல.

140. ஒவ்வொரு உயிரினமும் அதன் சொந்த இயல்பிலிருந்து வரும் நன்மை தீமைகளை அனுபவிக்கிறது, அவை கடந்து செல்லும்போது அது உணர்கிறது. ஆனால் கடவுளின் குமாரனிடமிருந்து எதையும் எடுக்கவோ அல்லது அவரது தெய்வீக இயல்பில் அவரோடு சேர்க்கவோ முடியாது. எனவே, கடவுளின் குமாரன் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் அல்ல.

141. பிரசங்கி 12:14 சொல்வது போல், அவருடைய ஒவ்வொரு செயலையும், கடவுள் நியாயந்தீர்ப்பார்; ஆனால் தேவனுடைய குமாரன் நியாதீர்ப்புக்கு உள்ளாவதில்லை, ஏனென்றால் அவரே நியாயந்தீர்ப்பவராய் இருக்கிறார். எனவே தேவனுடைய குமாரன் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் அல்ல.

142. இறுதியாக, அவற்றின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ, இரட்சகர் தம்முடைய செம்மறி ஆடுகளைப் பற்றிப் பேசும்போது, அவற்றை என் கையிலிருந்து யாரும் பறிக்க முடியாது என்று கூறுகிறார். “என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிச் செல்லமுடியாது. நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார் என்று யோவான் 10:28-30 கூறுகிறது.

143. எனவே, பிதாவைப் போலவே குமாரனும் உயிர்ப்பிக்கிறார். பிதா மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிப்பது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார் என்று யோவான் 5:21 கூறுகிறது. அதேபோல், பிதா சொல்வது போல் குமாரனும் உயிரைக் காப்பாற்றுகிறார். பிதாவும் குமாரனும் வல்லமையில் வேறுபடுகிறார்கள் என்று யாராவது சொன்னால், அது அபத்தம்; அவர்கள் கிருபையிலும் வல்லமையிலும் சமத்துவத்தைக் கொண்டிருக்கின்றனர். பிதா அழிக்காதது போல, குமாரனும் அழிப்பதில்லை. இரண்டு கடவுள்கள் அல்லது இரண்டு அதிகாரப் பிரிவுகள் இருப்பதாக யாரும் நினைப்பதைத் தடுக்க, தான் தனது பிதாவுடன் ஒரே பொருளானவர் என்று கூறினார். ஒரு உயிரினம் அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்? எனவே கடவுளின் குமாரன் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் அல்ல.

144. ஆட்சி செய்வதும் சேவை செய்வதும் ஒன்றல்ல; கிறிஸ்து ஒரு அரசரும் ஒரு அரசரின் மகனும் ஆவார், எனவே கடவுளின் குமாரன் ஒரு ஊழியன் அல்ல. ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒரு வகையில் சேவை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஊழியர்களை கடவுளின் மகன்மாராக மாற்றும் கடவுளின் குமாரன் சேவை செய்வதில்லை. எனவே கடவுளின் குமாரன் ஒரு ஊழியன் அல்ல.

அத்தியாயம் 12

தொலைதூர நாடொன்றில் அரசனாக நியமனம் பெறும் நோக்கில் பயணித்த செல்வந்தனின் உவமையின் மூலம் ஏற்கனவே சொல்லப்பட்டதை அவர் ஒப்புக்கொள்கிறார். குமாரன் பிதாவிடம் இராச்சியத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது, ​​பிதாவுக்கு எல்லாவற்றின் மீதும் அதிகாரம் இருப்பதைப் பற்றி நாம் எதிர்மறையாகச் சிந்திக்கக்கூடாது என்று அவர் விளக்குகிறார். இப்போது, ​​நாம் கிறிஸ்துவின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம், எதிர்காலத்தில், பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒன்றாக ஆட்சி செய்யும் கடவுளின் இராச்சியத்தில் இருப்போம்.

145. அரசனாக நியமனம் பெறும் நோக்கில் தொலைதூர நாட்டிற்குச் சென்ற செல்வந்தனின் உவமையை அவர் தெய்வீக பாணியில் சித்தரித்துள்ளார் என்று லூக்கா 19:12 கூறுகிறது. இந்தக் கதை அவரது தெய்வீக இயல்பு மற்றும் அவரது மனித இயல்பு இரண்டையும் விவரிக்கிறது. அவர் கடவுள் என்பதால் செல்வந்தராக இருந்தாலும், அவர் ஒரு நித்திய அரசராகவும், நித்திய அரசரின் குமாரனாக இருந்தாலும், அவர் நமக்காக தாழ்மையை ஏற்றுக்கொண்டார். அதாவது, அந்நிய தேசத்தை நோக்கிப் பயணம் செய்யும் ஒருவரைப் போல, நம்மிடமிருந்து ஒரு இராச்சியத்தை உருவாக்க, மனித உடலை எடுத்துக்கொண்டு அவர் இந்த உலகத்திற்கு வந்தார்.

146. யோவான் 17:21 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயேசு நம்மிடமிருந்து ஒரு இராச்சியத்தைப் பெறுவதற்காக பூமிக்கு வந்தார். அங்கு தேவனுடைய இராச்சியம் நமக்குள் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இது அவர் பெற்றுக்கொண்ட இராச்சியம், பிதாவாகிய கடவுளுக்கு கையளிக்கப்பட்ட இராச்சியம். இயேசு ஏற்கனவே ஒரு நித்திய அரசராக இருந்தபோதிலும், அவர் இந்த இராச்சியத்தைப் பெற்று பின்னர் திரும்பிப் போகவே வந்தார். யூத மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. மேலும் அவர் தங்கள் மீது ஆட்சி செய்வதை விரும்பாதவர்கள் விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று அவர் எச்சரித்தார். இது லூக்கா 19:27 இல், “தமக்கு நான் அரசனாக ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்க்கவேண்டும்’ என்று சொன்னதாகக் கூறுகிறது.

147. வேதாகமம் சொல்வதைப் பின்பற்றுவோம். வந்தவர் பிதாவாகிய தேவனுக்கு இராச்சியத்தை ஒப்புக்கொடுப்பார்; அவர் அதை ஒப்புக்கொடுத்த பின்பு, தேவன் எல்லாவற்றிலும் சகலமுமாக இருக்கும்படி, எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவருக்கும் அவர் கீழ்ப்படிவார் என்று 1 கொரிந்தியர் 15:24-28 கூறுகிறது. தேவகுமாரன் மனுஷகுமாரனாக இராச்சியத்தைப் பெற்றிருந்தால், நிச்சயமாக மனுஷகுமாரனாகவே அவர் பெற்றதை ஒப்புக்கொடுத்திருப்பார். அப்படி அவர் மனுஷகுமாரனாக அதை ஒப்புக்கொடுக்குமிடத்து, மனுஷகுமாரனாகவே அதைச் செய்திருப்பார், தம்முடைய தெய்வீக மகிமையில் அல்ல. அப்படியானால் இந்த நிலைமைகளின் கீழ் அவர் தம்முடைய கீழ்ப்படிதலை ஒப்புக்கொள்கிறார்.

148. எல்லாம் மனுஷகுமாரனின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நீங்கள் கடவுளைக் கேள்வி கேட்பீர்களா? அல்லது அவமதிப்பீர்களா? மனுஷகுமாரன் இராச்சியத்தைக் கடவுளுக்குத் திருப்பிக் கொடுக்கிறார் என்றும், பிதா அவர்களுக்கு உதவாவிட்டால் யாரும் அவரிடம் வர முடியாது என்றும் நீங்கள் கேட்கும்போது, ​​பிதா எல்லாவற்றையும் குமாரனுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளார் என்பதையும், குமாரன் இராச்சியத்தை பிதாவுக்குக் கொடுக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எது பெரியது: எதையேனும் விட்டுக்கொடுப்பதா அல்லது ஒருவரை மீண்டும் உயிர்ப்பிப்பதா? நாம் அடிக்கடி விட்டுக்கொடுப்பதை ஒரு சேவையாகவும், உயிர்ப்பிப்பதை ஒரு சக்திவாய்ந்த செயலாகவும் நினைக்கிறோம். ஆனால் குமாரன் பிதாவுக்குக் கொடுக்கிறார், பிதா குமாரனுக்குக் கொடுக்கிறார். பிதாவும் குமாரனும் மரித்தோரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். உண்மையில் ஒரு வலுவான தொடர்பும் பகிரப்பட்ட வல்லமையும் இருக்கும் இடத்தில் பிரிவினை என்ற தவறான கருத்தை உருவாக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

149. எனவே, குமாரன் தம்முடைய இராச்சியத்தை பிதாவிடம் ஒப்படைப்பார். அவர் ஒப்படைக்கும் இராச்சியம் கிறிஸ்துவிடம் இழக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல; மாறாக, அது விரிவடைகிறது. லூக்கா 17:21 இல் “தேவனுடைய இராச்சியம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் தேவனுடைய இராச்சியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்று கூறுகிறது. நாம் தான் அந்த இராச்சியம், முதலில் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள், பின்னர் பிதாவுக்குச் சொந்தமானவர்கள்; அத்தோடு, “என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று யோவான் 14:6 கூறுகிறது. நான் வழியில் இருக்கும்போது, ​​நான் கிறிஸ்துவுடையவன்; நான் கடந்து செல்லும்போது, ​​நான் பிதாவுடையவன்; ஆனால் கிறிஸ்துவினாலே எல்லா இடங்களிலும், அவருக்குக் கீழும், எப்போதும், எல்லா இடங்களிலும் அவருக்குக் கீழ்ப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

150. கிறிஸ்து நம்மோடு இருக்கும்படி, கிறிஸ்துவின் இராச்சியத்தில் இருப்பது நல்லது, ஏனென்றால் மத்தேயு 28:20 இல் கூறப்பட்டுள்ளபடி, அவர் எப்போதும் நம்மோடு இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், கிறிஸ்துவுடன் இருப்பது இன்னும் சிறந்தது, ஏனெனில் பிலிப்பியர் 1:23 கூறுவதுபோல், அவருடன் இருப்பது மிகவும் சிறப்பானது. இந்த உலகில் நாம் பாவத்துடன் போராடினாலும், கிறிஸ்து நமக்கு உதவ இங்கே இருக்கிறார், என்று ரோமர் 5:19 நமக்குச் சொல்வது போல், “ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர்” என்று. நான் பாவத்தைத் தவிர்க்க முடிந்தால், நான் கிறிஸ்துவுடன் இருக்கத் தொடங்குவேன். யோவான் 14:3 இல், “நான் திரும்பி வருவேன். என்னோடு உங்களை அழைத்துச் செல்வேன். எனவே, நான் எங்கே இருப்பேனோ அங்கே நீங்களும் இருப்பீர்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில், அவர் நம்மைத் தன்னுடன் இருக்க அழைத்துச் செல்லத் திரும்பி வருவார் என்றும், பின்னர் அதே அத்தியாயத்தில், அவர் இருக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.

151. இப்போது, ​​கிறிஸ்து மனிதனாக வந்தபோது அவர் ஏற்றுக்கொண்ட தாழ்மையான பாத்திரத்தை நாம் இன்னும் சுமந்தாலும், நம் உடல்களால் நாம் உயிருடன் இருக்கும்போது அவருடைய அதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம். உலகம் தொடங்குவதற்கு முன்பு இருந்த அவருடைய உண்மையான மகிமையை நாம் இறுதியாகக் காணும்போது, ​​ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற எமது முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் வாசம் செய்யும் கடவுளின் இராச்சியத்துக்குள் நுழைவோம். லூக்கா 13:28 சொல்வது போல், கடவுளுடைய இராச்சியத்தில் இவர்களைப் பார்க்கும்போது, ​​கடவுளைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவோம்.

152. குமாரனுடைய இராச்சியத்தில் பிதாவும் ஆட்சி புரிகிறார். அதுபோல, பிதாவின் இராச்சியத்தில் குமாரனும் ஆட்சி புரிகிறார். ஏனென்றால், பிதா குமாரனிலும், குமாரன் பிதாவிலும் இருக்கிறார். குமாரனை உடைய எவனும் பிதாவையும் கொண்டிருக்கிறான், பிதாவை உடைய எவனும் குமாரனையும் கொண்டிருக்கிறான். “நானும் என் பிதாவும் அவரிடத்தில் வந்து, அவருடனேகூட வாசமாயிருப்போம்” என்று யோவான் 14:23 கூறுகிறது. இவ்வாறு, ஒரே வாசஸ்தலம் இருப்பது போல, ஒரே இராச்சியமும் உண்டு. ஆம், பிதா மற்றும் குமாரனுடைய இராச்சியம் மிகவும் ஒன்றுபட்டது. குமாரன் கொடுப்பதை பிதா ஏற்றுக்கொள்கிறார், மேலும் பிதா ஏற்றுக்கொண்டதால் குமாரன் எதையும் இழந்துவிட வில்லை. எனவே, இந்த ஒரே இராச்சியத்தில், அதிகார ஒற்றுமை நிலவுகிறது. எனவே, பிதாவையும் குமாரனையும் எவரும் பிரிக்கக்கூடாது.

அத்தியாயம் 13

கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் என்றால் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ள விழையும் அதேநேரம், அவர் அப்போஸ்தலரின் வார்த்தைகளைப் பார்த்து, மதவெறியர்களிடமிருந்து வெளிப்படும் தெய்வ நிந்தனைக் கருத்துக்களை நிராகரிக்கிறார். எதிர்காலம் என்று காட்டப்படும் கீழ்ப்படிதல் கடவுளைப் பற்றியது அல்ல, ஏனெனில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே எப்போதும் மிகப்பெரிய விருப்பங்களின் இணக்கம் இருந்து வருகிறது. எல்லாமே குமாரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், எல்லா மக்களும் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில்லை என்பதால் அது “இன்னும் இல்லை” என்று அழைக்கப்படுகிறது. அனைவரும் அவருடைய அதிகாரத்தின் கீழ் வந்தவுடன், கிறிஸ்துவும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவராகக் கருதப்படுவார், அப்போது பிதாவின் கடமைகள் நிறைவேறும்.

153. பிதாவும் குமாரனும் கடவுளின் ஒரே நாமத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதாலும், கடவுளின் குமாரன் உண்மையிலேயே கடவுள் மற்றும் நித்திய அரசர் என்பதாலும், குமாரன் தனது தெய்வீக இயல்பில் தாழ்ந்தவர் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, பேரரசர் அகஸ்டஸ், அவருடைய கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

154. கடவுளின் குமாரன் ஏன் கீழ்ப்படிதலுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்? அப்படியென்றால் அவர் பயனற்ற ஒரு படைப்பைப் போன்றவரா? கடவுளின் உண்மையான இயல்பைப் பற்றி இவ்வாறு சிந்திப்பது தெய்வ நிந்தனையைக் கொண்டு வரக்கூடியது.

155. ஒவ்வொரு உயிரினமும் கடவுளின் குமாரனின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. சரியாகச் சொன்னால், “நீங்கள் எல்லாவற்றையும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளீர்கள்.” இருப்பினும், கிறிஸ்து தம்மைத் தம்முடைய சொந்த அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கவில்லை.

156. வேதாகமத்தை எடுத்துக்கொண்டால், எபேசியர் 5:22 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்றும், 1 தீமோத்தேயு 2:11 இல், “பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு ஆண்மகனை பிதாவாகிய கடவுளுடனோ அல்லது ஒரு பெண்ணை தேவனுடைய குமாரனாகிய இயேசுவுடனோ ஒப்பிடுவது தவறு.

157. 1 பேதுரு 2:13 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆனால் கிறிஸ்து இதை முழுமையாகப் பின்பற்றவில்லை.

158. வேதாகமத்தில், “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள்” என்று பவுல் கூறியதாக எபேசியர் 5:21 கூறுகிறது. இருப்பினும், கிறிஸ்து தாமே வேறு யாருக்கும் கீழ்ப்படியவில்லை, ஏனெனில் அவர் ஒருவராகவும் தனித்துவமானவராகவும் இருக்கிற காரணத்தால். கிறிஸ்துவுக்கு மகிமை செலுத்தும் அதேவேளை, பிதாவாகிய கடவுளுக்கும் நாம் கீழ்ப்படிதல் காட்டவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

159. அப்படியானால், அவருடைய கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? அப்போஸ்தலன் எழுதிய முழு அத்தியாயத்தையும் நாம் மீள்பரிசீலனை செய்யலாமா? இதனால் எதையும் பொய்யாக மறைத்து வைத்ததாகவோ அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் அதன் சக்தியை பலவீனப்படுத்தியதாகவோ தோன்றக்கூடாது அல்லவா?

159. அப்படியானால், அவருடைய கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? அப்போஸ்தலன் எழுதிய முழு அத்தியாயத்தையும் நாம் மீள்பரிசீலனை செய்யலாமா? இதனால் எதையும் பொய்யாக மறைத்து வைத்ததாகவோ அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் அதன் சக்தியை பலவீனப்படுத்தியதாகவோ தோன்றக்கூடாது அல்லவா? “இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்கு உரியவர்களாக இருப்போம். ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் கிறிஸ்து முதல்வராய் மரணத்திலிருந்து உயிர்த்தார்” என்று 1 கொரிந்தியர் 15:19-20 இல் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றி எழுப்பப்படும் கேள்வியைப் பற்றி அவர் எவ்வாறு பேசுகிறார் என்பதை இது காட்டுகிறது.

160. ஒரு மனிதன் உலகிற்கு மரணத்தைக் கொண்டு வந்தான், மற்றொரு மனிதன் மூலம், மரணத்திற்குப் பின்பு வரும் வாழ்க்கைக்கான நம்பிக்கை நமக்கு உண்டானது. ஆதாமின் பாவம் காரணமாக அனைவரும் இறப்பது போல, கிறிஸ்துவின் மூலம் அனைவரும் உயிர்த்தெழுவர். ஒவ்வொரு நபரும் வரிசையில் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்து முதற்பலனாவார்; பின்னர் அவருடைய வருகையை விசுவாசித்த கிறிஸ்துவின் மக்கள். அதன் பிறகு, எல்லா சக்தியையும் அதிகாரத்தையும் தோற்கடித்து, பிதாவாகிய தேவனிடம் இராச்சியத்தைத் திரும்பக் கொடுக்கும் போது அனைத்தும் முடிவுக்கு வரும். கிறிஸ்து தம்முடைய எல்லா எதிரிகளும் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சி செய்வார். அதாவது அழிக்கப்படும் கடைசி சத்துருவின் மரணம் வரைக்கும் அவரது ஆட்சி தொடரும். அத்தோடு, “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது எனும்போது தேவனை உள்ளடக்கியதாகக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார்.” இதன்மூலம் கடவுள் எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பார் என்று ​​1 கொரிந்தியர் 15:21-28 கூறுகிறது. அதேபோல, எபிரேயர் 2:8-ல் “அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை” என்று அப்போஸ்தலன் எபிரெயர்களுக்கு (எபிரெயர் 2:8 ) எழுதினார். ஆகவே அப்போஸ்தலன் கூறிய அனைத்தையும் நாங்கள் உள்ளடக்கியுள்ளோம்.

161. அப்படியானால், அவருடைய அடிபணிதலைப் பற்றி நாம் எப்படிப் பேச முடியும்? பிதாவாகிய கடவுளுக்கு கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் என்பது குமாரன் மீண்டும் பிதாவுடன் ஒன்றாகிவிடுவார் என்று சபெலியர்களும் மார்சியோனைட்டுகளும் நம்புகிறார்கள். அப்படியானால், வார்த்தையின் கீழ்ப்படிதல் என்பது வார்த்தையான கடவுள் பிதாவோடு இணைக்கப் படவேண்டும் என்பதாகும். பிதாவுக்கும் குமாரனுக்கும் உட்பட்ட அனைத்தும், பிதாவுக்குள்ளும் குமாரனுக்குள்ளும் உள்வாங்கப்படும், இதனால் கடவுள் அனைத்து உயிரினங்களிலும் தனது பிரசன்னத்தைக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்தக் கருத்து தர்க்கரீதியானது அல்ல. இணைத்தல் கீழ்ப்படிதலுடன் தொடர்பற்றது. ஏனென்றால் படைக்கப் பட்டவை என்று சொல்லப்படும் மற்றைய காரணிகளும் உள்ளன. அத்தோடு அந்த பணிவுடைமையை நோக்கமாகக் கொண்ட மற்றொரு விஷயம் இருப்பதால், இணைத்தல் என்ற இந்தக் கடுமையான யோசனையை ஆதரிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

162. கடவுளின் வார்த்தையையும் கடவுளின் ஞானத்தையும் திரும்பப் பெற முடியும் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒருவருக்குக் கீழ்ப்படிவது அவரது தெய்வீகத்தில் இருக்கும் பலவீனத்தைக் காட்டுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது அவர்கள், “அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தி இருக்கிறார்” என்ற 1 கொரிந்தியர் 15:28 ஐ மேற்கோள் காட்டுவதன் மூலம் இதை நிரூபிக்க முயல்கின்றனர்.

163. குமாரன் இன்னும் கடவுளின் அதிகாரத்தின் கீழ் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் இது எதிர்காலத்தில் நடக்கும் என்கிறது. ஆகையால் இப்போது குமாரன் பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே, குமாரனின் எதிர்கால கீழ்ப்படிதலை எவ்வாறு வரையறுப்பது? அவருடைய தெய்வீக இயல்பில் அவர் கீழ்ப்படியாதவராகவும், பிதாவுடன் இணக்கமாகவும் இருப்பதால், அவர் ஒரு ஊழியன் அல்ல, ஆனால் பிதாவின் தனித்துவமான குமாரன். வானத்தையும் பூமியையும் படைத்தபோது, ​​அவர் வல்லமையையும் அன்பையும் காட்டினார். எனவே, கிறிஸ்துவின் தெய்வீகத்தில் ஒரு ஊழியருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற எந்தக் நிர்ப்பந்தமும் இல்லை. ஆகவே கீழ்ப்படிதல் குறித்த எந்த கட்டாயமும் இல்லை என்பதால் அவருடைய சித்தம் சுதந்திரமானதாக இருக்கிறது.

164. ஆனால் இதை அவர்கள் குமாரனின் கீழ்ப்படிதல் என்று நினைத்தால்; அதாவது, பிதா தனது சித்தத்துடன் இணைந்து எல்லாவற்றையும் உருவாக்குகிறார் என்றால், இது உண்மையில் பிரிக்க முடியாத சக்தியின் சான்று என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். அவர்களின் விருப்பத்தின் ஒற்றுமை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கிய ஒன்றல்ல; அது எப்போதும் இருந்து வருகிறது. விருப்பத்தின் நிலையான ஒற்றுமை இருக்கும் இடத்தில், தற்காலிக கீழ்ப்படிதலால் எந்த பலவீனமும் இருக்கும் என்று எண்ண முடியாது. அவர் இயல்பாகவே கீழ்ப்படிதலுக்கு உள்ளானவர் என்றால், அவர் எப்போதும் அந்த நிலையிலேயே இருந்திருப்பார். இருப்பினும், அவர் காலப்போக்கில் கீழ்ப்படிதலுக்கு உள்ளானவர் என்று விவரிக்கப்படுவதால், அந்தக் கீழ்ப்படிதல் ஒரு நிரந்தர பலவீனத்திலிருந்து அல்ல, ஒரு நிலையில் இருந்து உருவாகியிருக்க வேண்டும்: குறிப்பாக கடவுளின் நித்திய வல்லமை அவரது நிலையை தற்காலிகமாக மாற்றக்கூடியதல்ல அல்லது ஆட்சி செய்யும் அதிகாரம் காலப்போக்கில் பிதாவுக்கு மாற்றக்கூடியதும் அல்ல. இதற்கிடையில் குமாரன் எப்போதாவது தனது தெய்வீக இயல்பில் கீழ்ப்படிதல் நிலைக்கு மாற நேரிட்டால், உங்கள் விளக்கத்தின்படி, அதிக வல்லமையைப் பெற்று குமாரனை அவரது தெய்வீக இயல்பில் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்றால், பிதாவாகிய கடவுளும் தாழ்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.

165. தம்முடைய தெய்வீகத்திற்குக் கீழ்ப்படியச் செய்ய முடியும் என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு குமாரன் என்ன தவறு செய்திருக்கிறார்? ஒரு மனிதனாக, அவர் தனது தந்தையின் அருகில் வீற்றிருக்கும் உரிமையை எடுத்துக்கொண்டாரா? அல்லது அவரது தந்தையின் சித்தத்துக்கு எதிராக அவரது சிம்மாசனத்துக்கு உரிமை கோரினாரா? யோவான் 8:29 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானதையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று கர்த்தர் கூறுகிறார். எனவே, குமாரன் எல்லாவற்றிலும் பிதாவை மகிழ்விக்கிறார் என்றால், அவர் முன்பு ஒருபோதும் கீழ்ப்படியாதபோது, இப்போது மட்டும் அவர் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

166. கடவுள் மீது கட்டுப்பாடு இல்லை என்பதைப் புரிந்துகொள்வோம், மாறாக, நாம்தான் கிறிஸ்துவை மதிக்க வேண்டும். இது கிருபையானதும் மர்மமானதுமான ஒரு உண்மை. எனவே, அப்போஸ்தலர் சொன்னதைப் பற்றி சிந்திப்போம்: எல்லாம் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும்போது, ​​குமாரனும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவரின் அதிகாரத்தின் கீழ் இருப்பார், இதனால் கடவுள் அனைவருக்கும் எல்லாமாக இருக்க முடியும். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எல்லாம் ஏற்கனவே அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லையா? பரிசுத்தவான்களின் குழுக்கள் அவருடைய அதிகாரத்தின் கீழ் இல்லையா? மத்தேயு 4:11 சொல்வது போல், “சில தூதர்கள் வந்து அவருக்குச் சேவை செய்தனர்” என்று. ஆகவே அவர் பூமியில் இருந்தபோது அவருக்கு உதவிய தேவதூதர்கள் அவருக்கு சேவை செய்யவில்லையா? கர்த்தருடைய வருகையை அறிவிக்க மரியாளிடம் அனுப்பப்பட்ட பிரதான தூதர்களைப் பற்றி என்ன? எல்லா பரலோக ஜீவன்களும் அவருக்குக் கீழ் இல்லையா? தேவதூதர்களும், அதிதூதர்களும், சிம்மாசனங்கள், ஆதிக்கங்கள் மற்றும் வல்லமை உடன் சேர்ந்து அவரை வணங்கித் துதிக்கவில்லையா?

167. மக்கள் எவ்வாறு கீப்படித்தலின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்? மத்தேயு 11:29 ற்கு அமைய, “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கர்த்தர் கூறிய விதம், ‘என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள்’ என்ற அர்த்தத்தையே கூறுகிறது. நுகத்தைச் சுமப்பவர்கள் வலிமையானவர்கள் என்றல்ல, மாறாக மனத்தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்கள். இது பலவீனமான கீழ்ப்படிதல் அல்ல, மாறாக ஒரு மகிமையான கீழ்ப்படிதல்: “பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள்” என்று பிலிப்பியர் 2:10 கூறுகிறது. ஒவ்வொரு நாவும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை இடட்டும். முன்னதாக, மக்கள் கடவுளின் ஞானத்தைப் பின்பற்றவில்லை அல்லது அவரது போதனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், அவரை விசுவாசித்தவர்களுக்கு யோவான் 1:12-ல் கூறப்பட்டுள்ளபடி, கடவுளின் பிள்ளைகளாகும் கொடை அருளப்பட்டது.

168. நிறைய பேர் நம்புவதால் கிறிஸ்து இப்போது ஒருவித கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை. கிறிஸ்துவின் அதிகாரம் நம் அனைவரையும் உள்ளடக்கியது, ஒரு சிலரை மட்டுமல்ல. கலாத்தியர் 5:17 இல் “ஆன்மாவுக்கு எதிராக சரீர இச்சையும், சரீர இச்சைக்கு எதிராக ஆன்மாவும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சொல்லப்படுவது என்னவென்றால், நான் ஓரளவு கட்டுப்படுத்தப்படலாம், ஆனால் முழுமையாக அல்ல. எனவே முழு திருச்சபையும் கிறிஸ்துவின் ஒரே உடலாக இருந்தபோதும் மனித இனத்தின் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவும் வரை நாம் கிறிஸ்துவைப் பிரித்தே பார்க்கிறோம். எனவே, கிறிஸ்து இன்னும் முழுமையாகப் பொறுப்பேற்கவில்லை, ஏனெனில் அவரைப் பின்பற்றுபவர்கள் முழுமையாகப் பணிந்திருக்கவும் இல்லை. ஆனால் நாம் பல உறுப்பினர்களுக்குப் பதிலாக ஒரே சக்தியாக மாறும்போது, ​​அவர் பொறுப்பாளராகவும் இருப்பார், இதனால் அவருடைய அதிகாரத்தின் மூலம் கடவுள் அனைவருக்கும் எல்லாமுமாக இருக்க முடியும்.

169. ஆனால் கிறிஸ்து இன்னும் முழுமையாகப் பணிந்திராதமையால், கடவுளின் பணியும் முழுமையடையவில்லை. யோவான் 4:34 இல் ‘தனது தந்தை விரும்புவதைச் செய்து, அவரது பணியை நிறைவேற்றுவதே தனது நோக்கம்’ என்று கடவுளின் குமாரன் கூறியதை மேற்கோள் காட்டுகிறது. எதிர்காலத்தில் குமாரன் முழுமையாகக் பணிந்திருப்பார் என்பதில் உண்மையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? குறிப்பாக நான் பரிபூரணமாக இல்லாததால், எனக்கு ஒப்படைக்கப்பட்ட பிதாவின் பணி இன்னும் நிறைவேறவில்லை. கடவுளின் பணி முழுமையடையாது என்பதை ஒப்புக்கொள்வதன் மூலம், கடவுளின் குமாரன் பணிந்தவராக இருக்கிறார் என்று நான் கூறமுடியுமா? இது ஒரு பிரச்சனையல்ல; இது கிருபையைப் பற்றியது. நாம் சட்டத்தைப் பின்பற்றி கிருபையைப் பெற்று கீழ்ப்படிவோராக மாறுவது நமக்கு நன்மை பயக்கும், கடவுளுக்கு அல்ல. கடந்த காலத்தில், அப்போஸ்தலன் குறிப்பிட்டது போல, மனித ஞானம் கடவுளுக்கு எதிராக இருந்தது, ஏனெனில் ரோமர் 8:7 இல் காணப்படுவது போல், சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை, ஆனால் இப்போது அது கிறிஸ்துவின் பாடுகள் மூலம் கீழ்ப்படிதலாக மாறியது.

அத்தியாயம் 14

அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிப் பேசுகையில் கிறிஸ்து உடல் ரீதியாக இருந்தபோது தவிர அவர் எவரது கட்டுப்பாட்டிலும் இருந்ததில்லை என்பதை விளக்கினார். கிறிஸ்து தனது மனித வடிவத்தில் பணிந்துபோகக்கூடியவராக இருந்தபோதிலும், அவர் எப்போதும் கடவுள் என்பதைக் காட்டினார். இந்த வழியில் கிறிஸ்து முழுமையாக பணிந்துபோகிறவராக இருக்கிறார் என்ற கருத்தை அவர் எதிர்த்துப் பேசுகிறார். கிறிஸ்து ஏற்றுக்கொண்ட மனித இயல்பு நம்முடையதைப் போலவே தாழ்ச்சியுடையதாகி விட்டது. மேலும் நமது மனித இயல்பு அவர் மூலம் உயர்த்தப்பட்டது. இறுதியாக, கிறிஸ்துவின் கீழ்ப்படுத்தப்பட்ட நிலை எப்போது நிகழும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்.

170. ஆனால், யாராவது வாதிட விரும்பினால், வேதாகமம் கடவுளின் வழிகாட்டுதலைப் பற்றிப் பேசும்போது எவ்வளவு அக்கறையோடும் கவனமாகவும் இருக்கிறது என்பதைப் பாருங்கள். கிறிஸ்து எவ்வாறு கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் என்பதை அது நமக்குச் சொல்கிறது, மேலும் அவர் எவ்வாறு பிரபஞ்சத்தை தமக்குக் கீழ்ப்படும்படி செய்தார் என்பதையும் இது நமக்குக் கற்பிக்கிறது. எனவே எபிரேயர் 2:8 “அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை” என்கிறது. எனினும், எபிரேயர் 2:9 இல் “இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்” என்று கூறுவதன் மூலம், நம்மைப்போல் மனித வடிவத்தை எடுத்துக்கொண்டதன் காரணமாக அவர் தாழ்ந்தவராக ஆனார் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு, நமது மனித இயல்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுவதிலிருந்து அவரைத் தடுப்பது எது? அந்த மனித இயல்பின் மூலம் அவர் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த அதே நேரத்தில், அவரே பிதாவாகிய கடவுளுக்கும் கீழ்ப்படிகிறார்.

171. அவருடைய கீழ்ப்படிதலைப் பற்றி சிந்திப்போம். அவர், “பிதாவே, உமக்கு சித்தமானால், இந்தப் பாத்திரத்தை என்னிடமிருந்து நீக்கிவிடும். அது என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று லூக்கா 22:42 கூறுகிறது. இது மனிதனாக மாறுவதில் அவர் கொண்டிருந்த கீழ்ப்படிதலைக் காட்டுகிறது. பிலிப்பியர் 2:8-இல், “மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார்’ என்று கூறுகிறது. எனவே, அவரது கீழ்ப்படிதல் அவரது மரணத்தின் மூலம் காட்டப்பட்டது. மேலும் அந்த மரணம் அவரது மனித உருவில் நிகழ்ந்தது. இது அவரது தெய்வீகத்தின் பலவீனம் அல்ல, உண்மையான கீழ்ப்படிதலின் ஒரு எடுத்துக்காட்டு.

172. எப்படியேனும், அவர்கள் சொல்வது குறித்து நான் பயப்படவில்லை. அவர் பிதாவாகிய தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர் தம்முடைய தாயாகிய மரியாளுக்குக் கீழ்ப்படிந்தார் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால், யோசேப்பு மற்றும் மரியாளைப் பற்றி அங்கே எழுதப்பட்டுள்ளது. அத்தோடு, இதற்கு சாட்சியமளிக்கும் விதத்தில், லூக்கா 2:51 “அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார்” என்று கூறுகிறது. ஆகவே அவர்கள் அதை நம்பினால், கடவுள் எவ்வாறு மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்தார் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

173. அவர் கீழ்ப்படிதலுள்ளவராகச் சொல்லப்பட்டிருப்பது, அவர் ஒரு ஊழியன் என்று அழைக்கப்படுவதாலும், சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படுவதாலும், அல்லது இறந்துவிட்டதாகப் பேசப்படுவதாலும் எந்தத் தீங்கும் கண்டிராத அவருக்கு எதிராகச் செயல்படாமல் இருக்கட்டும். அவர் மரித்தும், ​​அவர் தொடர்ந்து வாழ்ந்தார்; அவர் ஒரு ஊழியனைப் போல நடத்தப்பட்டபோதும், ​​அவர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தார்; அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் ​​மீண்டும் உயிர் பெற்றார். அவர் மனித அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்தபோதும் பின்னர் அவர் நித்திய மகிமையின் கர்த்தர் என்று கூறினார். அவர் நீதிபதிக்கு முன்பாக நின்றார். கடவுளுக்கு அருகில் ஒரு சிம்மாசனம் இருப்பதாகவும், என்றென்றும் நீதிபதியாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மத்தேயு 26:64 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் வீற்றிருப்பதையும், வானத்து முகில்கள் மீது அவர் வருவதையும் காண்பீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. அவர் யூதர்களால் சவுக்கால் அடிக்கப்பட்டார், ஆனால் தேவதூதர்களுக்குக் கட்டளையிட்டார்; கலாத்தியர் 4:4 இல் கூறப்பட்டுள்ளபடி, “தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்து விதிமுறைகளின்படியே வாழ்ந்தார்” என்று. ஆனால் அவர் ஆபிரகாமுக்கு முன்பாக நியாயப்பிரமாணத்திற்கு மேலாக இருந்தார். சிலுவையில் இருந்தபோதும், இயற்கை கூட அவரைக் கௌரவித்தது; சூரியன் மறைந்தது, பூமி அதிர்ந்தது, தேவதூதர்கள் அமைதியாக இருந்தனர். யாருடைய துன்பத்தைக் காண அவர்கள் பயந்தார்களோ அந்தத் துன்பத்தைக் காண இயற்கையால் கூட முடியவில்லை அல்லவா? ஒரு மனிதனாக இருந்தபோதும் அவர்களால் அறுதியிட்டுப் பார்க்க முடியாத அளவுக்குப் உன்னதராக இருந்தவரின் பணிவை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்தது.

174. பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் அனைவரும் இயல்பில் ஒரே பொருளானவர்கள். எனவே பிதா வேறு எவருக்கும் கீழ்ப்படிந்திருக்க முடியாது. இதன் பொருள், குமாரன் பிதாவுடன் ஒன்றாயிருப்பதில் கீழ்ப்படிந்திருக்க மாட்டார்; ஏனென்றால் தெய்வீக ஐக்கியத்தின் மூலம் பிதா குமாரனுக்குக் கீழ்ப்படிந்திருப்பதாகத் தோன்றக்கூடாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருந்தபோது, ​​பலவீனப்படுத்தப்பட்டது அவரது முழு தெய்வீக இயல்பு அல்ல, மாறாக நமது சொந்த மனித பலவீனம். எதிர்காலத்தில் குமாரன் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தவராகக் காணப்படுவார், அதற்காக நமது மனித இயல்பை எடுத்துக்கொள்வார். ஆகவே நாம் நமது ஆசைகளைக் கட்டுப்படுத்தும்போது, ​​நமது மனம் செல்வம், அதிகாரம் அல்லது இன்பத்தைப் பற்றி கவலைப்படாது. நாம் முடிந்தவரை அவரைப் போல வாழப் பாடுபட்டால் கடவுள் நம் வாழ்வோடு எப்பபோதும் ஒன்றித்து இருப்பார்.

175. நன்மை என்பது ஒருவருக்காக மட்டும் என்ற நிலையில் இருந்து முழு சமூகத்திற்காக என்ற நிலைக்கு மாறிவிட்டது, ஏனென்றால் ஏனென்றால் அவர் தம்முடைய சரீரத்தின் மூலம் எல்லா மனித சரீரத்தின் இயல்பையும் ஒழுங்குபடுத்தியுள்ளார். அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 15:49 இல் சொல்வது போல், நாம் பூமிக்குரிய இயல்பைப் பிரதிபலிப்பது போல, பரலோக இயல்பையும் பிரதிபலிப்போம். இந்த மாற்றம் நம் உள்ளத்தில் மட்டுமே நிகழ முடியும். எனவே, கொலோசெயர் 3:8-ல் குறிப்பிட்டுள்ளபடி, ‘கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை எம் வாழ்வில் இருந்து விலக்கி வைக்கவேண்டும்.’ மேலும், கொலோசெயர் 3:9-10-ல் பவுல், ‘நமது முன்னைய பாவங்களையும் அதனுடன் சேர்ந்த செயல்கள் யாவற்றையும் விட்டுவிட்டு, நம்மைப் படைத்த தேவனைப் போல மாறி புதிய வாழ்வை அணிந்துகொள்ள வேண்டும்’ என்றும் கூறுகிறார்.

176. மேலும், “தேவன் எல்லாரிலும் எல்லாமாயிருக்கலாம்” என்று அவர் கூறும்போது, ​​கிறிஸ்துவைத் தந்தையாகிய கடவுளிடமிருந்து பிரிக்கவில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக, அவர் கொலோசெயரிடம், “இப்புதிய வாழ்வில் ஆணோ பெண்ணோ, காட்டுமிராண்டியோ, சித்தியரோ, அடிமையோ சுதந்திரரோ என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி, விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார்” என்று (கொலோசெயர் 3:11) கூறியுள்ளார். இதேபோல், கடவுள் எல்லாரிலும் எல்லாமாக இருப்பதைப் பற்றி கொரிந்தியர்களிடம் பேசும்போது, ​​கிறிஸ்து பிதாவாகிய கடவுளுடன் ஐக்கியமாகவும் சமமாகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. குமாரன் பிதாவிலிருந்து விலகியவராக இல்லை. பிதா எல்லோரிலும் தனது கிரியையைச் செய்கிறார் என்பது போல, கிறிஸ்துவும் எல்லோரிலும் தனது கிரியை ஆற்றுகிறார். கிறிஸ்து எல்லோரிலும் கிரியை செய்கிறார் என்றால், அவர் கடவுளின் மகிமையில் குறைந்தவராக இல்லை, ஆனால் நம் வாழ்வில். அவர் தனது சரீரத்தின் மூலம் மனிதனாக மாறிய விதத்தில் தேவதூதர்களை விட தாழ்ந்தவராக ஆக்கிக்கொள்கிறார். ஏனெனில், ஆரம்பத்திலிருந்தே தங்கள் படைப்பாளருக்கு சேவை செய்த அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது.

177. ஆனால் அவர் எப்படி நம்மைப் போல ஆனார் என்று நீங்கள் கேட்டால், மத்தேயு 25:36 & 40 இல், அவர் நம்மை நோக்கி இவ்வாறு சொல்கிறார்: “நான் ஆடையின்றி இருந்தபோது நீங்கள் உடுக்க உடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்” என்று. இதன் அர்த்தம் சென்னவன்றால், நீங்கள் தேவைகள் உள்ளோருக்கு உதவும்போது, ​​நீங்கள் அவருக்கு உதவுகிறீர்கள் என்பதே. அவர் நோய்வாய்ப்பட்டவர், பலவீனமானவர் என்பதைக் கேவிப்பட்டபோது, நீங்கள் எதையும் உணரவில்லை. நீங்கள் அவரை பிரச்சனையில் இருக்கும் ஒருவராகப் பார்க்கிறீர்கள், அது உங்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது, ஏனென்றால் அவர் நம் பாவங்களையும் தண்டனைகளையும் ஏற்றுக்கொண்ட ஒருவராக பாடுகளை அனுபவித்தார்.

178. எனவே, அவர் பாவத்தையும் சாபத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்பட்டார், அவருக்காக அல்ல, எமக்காக. அவர் நமக்குக் கீழ்ப்படிந்தார், அவருடைய சொந்த நலனுக்காக அல்ல, நம்முடைய நன்மைக்காக. அவரது நித்திய இயல்பில், அவர் கீழ்ப்படிந்தவராகவும் இல்லை சபிக்கப்பட்டவராகவும் இல்லை. “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே (சிலுவையில்) தொங்க விடப்படுகிறதோ அப்படிப்பட்டவன் சாபத்துக்கு உள்ளாகிறான்” என்று கலாத்தியர் 3:13 கூறுகிறது. ஏனென்றால் அவர் நம்முடைய சாபங்களைச் சுமந்தார். கீழ்ப்படிதலிலும், அவர் ஒரு ஊழியனாக நம்முடைய கீழ்ப்படிதலை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் தேவனுடைய மகிமையில் அல்ல; இதன் பொருள், அவர் சரீரவடிவில் நம் பலவீனங்களில் பங்கு கொள்கிறார் என்றாலும், அவர் தம்முடைய வல்லமையினால் நம்மைத் தெய்வீக இயல்பில் பங்காளிகளாக்குகிறார். இரண்டு சந்தர்ப்பங்களிலும், கிறிஸ்துவின் தெய்வீக இயல்புடன் நமக்கு நேரடி தொடர்பு இல்லை, கிறிஸ்துவின் தெய்வீகம் எந்த வகையிலும் குறையவில்லை. நமது இரட்சிப்பை உறுதி செய்யும் கிறிஸ்துவின் சரீரத்தின் மூலம், நாம் உடல் ரீதியாக அங்கே இல்லாவிட்டாலும், ஆன்மீக ரீதியாக பரலோக ஸ்தானங்களில் (எபேசியர் 2:6) அமர்ந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலன் கூறுகிறார். அதேபோல், கிறிஸ்து நம் மனித இயல்பை ஏற்றுக்கொண்டதால் அவர் நமக்கு “கீழ்ப்படிந்தவர்” என்று கூறப்படுகிறது.

179. கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் கௌரவத்தைப் பெற கிறிஸ்து தகுதியற்றவர் என்று நம்பும் அளவுக்கு முட்டாள்கள் இருப்பார்களோ? இந்த நிலை, அவரது மனித இயல்பின் அடிப்படையில், பிதாவாகிய கடவுளால் அவருக்குக் கொடுக்கப்பட்டது, மேலும் இது ஒரு மகத்தான சக்தி வாய்ந்த நிலை. தேவதூதர்கள் அவரை துதிக்கிறார்கள். அப்படியானால், கடவுளின் அதிகாரத்தை இவ்வளவு அவமரியாதையுடன் கூடிய சவாலுக்கு உட்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்?

180. வேதாகமம், எபேசியர் 2:5-6 இல், ஆன்மீகப்படி நாம் தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். ஆனால் தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அவர் நம்மை உயர்த்தி, கிறிஸ்து இயேசுவுடன் அவருக்கு அடுத்த இடத்தைக் கொடுத்தார்’ என்று அழகாக விளக்குகிறது. ஆகவே வேதாகமம் சொல்வது சரி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் கடவுள் மக்களைத் தம்முடைய வலது பாரிசத்தில் அமரச் செய்கிறார் என்று அது கூறவில்லை; மாறாக, நாம் கிறிஸ்து மூலமாகவேதான் நாம் அங்கே அமர்ந்திருக்கிறோம். எபேசியர் 5:23 இல், “சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எமக்குச் சொல்லப்படுவது என்னவெனில் கிறிஸ்து எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருந்து திருச்சபையை வழிநடத்துகிறார். அவர் மனித குலத்துக்கு கடவுளோடு நெருக்கமாக இருக்கும் பாக்கியத்தை அளித்துள்ளார். இது, நம் உடல்கள் கடவுளாகிய கிறிஸ்துவில் பங்கு கொள்வதால் மதிக்கப்படுகின்றன என்பதையும், மனிதகுலம் முழுவதும் கிறிஸ்துவின் மனித இயல்பின் மூலம் மதிக்கப்படுகிறது என்பதையும் காட்டுகிறது.

181. நாம் அவரோடு மனித இயல்பில் ஒன்றாக இணைந்திருக்கும்போது, ​​நம்முடைய சரீரத்தை எடுத்துக்கொண்டு நமது சாபங்களை சுமக்கும் ஒருவராக மாறியவர் (ஏனென்றால் சாபத்தால் தேவனின் ஆசீர்வதிக்கப்பட்ட குமாரனைத் தொட முடியாது என்பதால்), இதன் பொருள், அனைவரின் கீழ்ப்படிதலாலும், அவர் நமக்குள் இருப்பார். புறஜாதியின மக்கள் நம்பும்போதும், ​​யூதர்கள் தாங்கள் சிலுவையில் அறையப்பட்டவரை அடையாளம் காணும்போதும்; மனித வடிவில் வந்தார் என்று நம்பாத மணீக்கியர்கள் அவரை வணங்கும்போதும்; அவருடைய சக்தியை மறுத்த ஆரியர்கள் அவரை சர்வ வல்லமையுள்ளவராக ஏற்றுக்கொள்ளும்போதும், ​​ஞானம், நீதி, சமாதானம், அன்பு மற்றும் உயிர்த்தெழுதல் போன்ற கடவுளின் குணங்கள் அனைவரிடமும் காணப்படும் போதும் இந்த மாற்றம் நிகழ்கிறது. அவருடைய செயல்கள் மற்றும் நற்பண்புகளைக் காட்டும் பல வழிகள் மூலம், கிறிஸ்து நம்மில் இருப்பார், பிதாவுக்குக் கீழ்ப்படிவார். மக்கள் பாவங்களில் இருந்து விலகி, எல்லாவற்றிலும் கடவுளைத் தேட ஆன்மாவால் ஒன்றுபடும்போது, ​​1 கொரிந்தியர் 15:28 இல் “அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாயம் 15

சர்ச்சைக்குரிய அதே விஷயங்களை மீண்டும் சுருக்கமாகக் கையாண்டு, பிதாவும் குமாரனும் ஒரே தெய்வீக சக்தியைப் பகிர்ந்து கொள்வதால், குமாரன் “கீழ்ப்படிந்தவர்” என்ற எந்தவொரு குறிப்பும் அவரது மனித இயல்புக்கு மட்டுமே பொருந்தும் என்று சாதுர்யமான ஒரு முடிவுக்கு வருகிறார். அத்தோடு, இருவருக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் அன்பைச் சான்றாகக் காட்டுவதன் மூலம் இதை அவர் உறுதிப்படுத்துகிறார்

182. எனவே, முழு விஷயத்திலும் நமது கண்ணோட்டத்திச் செலுத்தி, ஒரு சுருக்கமான முடிவுக்கு வருவோம். ஒரு வலிமையான சக்தி இருக்குமானால், எவரும் பலவீனமானவர் அல்லது முக்கியத்துவம் குறைந்தவர் என்றோ உணர வேண்டிய அவசியமில்லை. அவர் அதிகாரத்தைக் கைவிட்டு மரணத்தை வென்றபோது, ​​அவர் தனது சக்தியை இழக்கவில்லை. கீழ்ப்படிதல் தாழ்மையான பண்புக்கு வழிவகுக்கிறது. கிறிஸ்து மனிதனாக மாறி நம்மை இரட்சிக்க சிலுவையில் மரித்ததன் மூலம் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தார். ஏதேனும் ஒரு காரியத்தை ஆற்றி அதை நிறைவுசெய்த இடத்தில், அதை நிறைவேற்றியவரும் இருப்பார். எல்லாம் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் அவருக்குப் பணிந்து அனைவரும் அவருடைய நாமத்தின் முன் முழந்தாளிட்டு தலைவணங்கும்போது, ​​கிறிஸ்து எல்லோருக்கும் எல்லாமாக இருப்பார். இருந்தபோதிலும், எல்லோரும் இதை நம்புவதில்லை. அதனால் அவர்கள் அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் கடவுளின் சித்தத்தை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றும்போது, ​​கிறிஸ்து நம் அனைவருக்கும் அனைத்து விதத்திலும் உறுதுணையாய் இருப்பார். கிறிஸ்து அனைவருக்கும் உறுதுணையாய் இருக்கும்போது, ​​பிதாவும் அதுபோலவே எல்லாமாக இருப்பார். ஏனென்றால் பிதா எப்போதும் குமாரனுடன் இருக்கிறார். எனவே, பலவீனமானவர்களை அவர் இரட்சித்தபோது, ​​அவரை எப்படி பலவீனராகக் காண முடியும்?

183. பிதா எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படியச் செய்தார் என்று சொல்வதால் குமாரன் பலவீனமானவர் என்று நினைக்காதீர்கள். உண்மையில், அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படியும்படி செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிலிப்பியர் 3:20-21-ல் கூறப்பட்டுள்ளபடி, ‘நம்முடைய வீடு பரலோகத்தில் உள்ளது, அங்கு நாம் நம்முடைய இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுவுக்காகக் காத்திருக்கிறோம். எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படியச் செய்யும் வல்லமை அவருக்கு இருப்பதால், அவர் நம்முடைய தாழ்மையான சரீரங்களைத் தம்முடைய மகிமையான சரீரத்தைப் போல மாற்றுவார். இது அவர் தம்முடைய தெய்வீக வல்லமையால் எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படியச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

184. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, எல்லாம் மனித இயல்புகளுக்கு அமைய, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளுங்கள். “தேவன் இயேசு கிறிஸ்துவைத் தனது வலது பக்கத்தில் வீற்றிருக்கச் செய்தார். ஆள்வோரையும், அதிகாரிகளையும், அரசர்களையும் விட கிறிஸ்துவை மேலானவராக தேவன் செய்தார். இந்த உலகத்தில் மட்டுமன்றி வரவிருக்கும் உலகத்திலும் கூட வல்லமையுள்ள அனைத்தையும் விட கிறிஸ்து வல்லமை மிக்கவர்” என்று எபேசியர் 1:20-21 கூறுகிறது. ஆகவே எல்லாம் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வாறுதான் அவர் மனித ஆன்மாவிலும் அவருடைய தர்க்கரீதியான அதிகாரத்திலும் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார்.

185. பலர் இவ்வாறு எழுதப்பட்டிருப்பதை உன்னதமான முறையில் விளக்குகிறார்கள்: “மெய்யாகவே, என் ஆன்மா கடவுளின் அதிகாரத்தின் கீழ் இருக்கும்; அவர் ஆன்மாவை; தெய்வீகத்தை அல்ல, ஆன்மாவை, மகிமையை அல்ல” என்று குறிப்பிட்டார். நம் மனித இயல்பை ஏற்றுக்கொண்டார் என்பதைக் காட்ட கர்த்தர் தீர்க்கதரிசி மூலம் பேசினார். மக்கள் எவ்வளவு காலம் வெறும் மனிதர்களை நம்பியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். நற்செய்தியில் அவர் மேலும் கூறும்போது, “நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்” என்று யோவான் 8:40 கூறுகிறது. மேலும் அவர் கூறும்போது: நான் வழங்கியதை அவர்கள் இன்னும் நிராகரிக்க விரும்பினர். அவர்கள் தாகமாக இருந்தார்கள், ஆனால் உண்மையான புத்துணர்ச்சியைத் தேடவில்லை. அவர்கள் தங்கள் வார்த்தைகளால் துதித்தார்கள், ஆனால் தங்கள் மனங்களால் சபித்தார்கள். யூதாஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது (மத்தேயு 27:4), யூதர்கள் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, தங்கள் அறிவீனத்தில் விழுந்தார்கள். ஏனென்றால் அவர்கள் ஆன்மீக வாழ்க்கையின் வெகுமதியை நிராகரித்தார்கள்.

186. நாம் கடவுளுக்கு கீழ்ப்படிவதை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை இது விளக்குகிறது. துன்பப்படும்போது இயேசு கீழ்ப்படிந்ததால், அவர் நமக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கலாம். இது ஏன் முக்கியமானது என்றும் நாம் யோசிக்கலாம். ரோமர் 8:38-39 இல், “தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது” என்று ஆணித்தரமாய்க் கூறுகிறது. எனவே, எந்த உயிரினமும் இதிலிருந்து விலக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம்; எல்லாம், அது எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் இதில் அடங்கும்.

187. ரோமர் 8:35-ல் உள்ள வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அது “கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது என்றும், ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது” என்று உறுதியாக உரைக்கிறது. கடவுளின் அன்பும் கிறிஸ்துவின் அன்பும் ஒன்றே என்பதை இது காட்டுகிறது. கடவுளின் அன்பு கிறிஸ்துவில் காணப்படுகிறது, எனவே அவை தனித்தனியாக இருப்பதாக நாம் நினைக்க மாட்டோம் என்பதை ஆசிரியர் தெளிவுபடுத்த விரும்பினார். உண்மையான அன்புக்கு ஒருபோதும் பிரிவில்லை, நித்தியரான கடவுளால் செய்ய முடியாதது எதுவுமில்லை, சத்தியத்திலிருந்து மறைக்கப்படக் கூடியதோ நீதியை ஏமாற்றக்கூடியதோ, ஞானத்தின் கவனத்திலிருந்து தப்பிக்கக்கூடியதோ எதுவுமில்லை.

அத்தியாயம் 16

ஆரியர்கள் கிறிஸ்துவின் அறிவை மட்டுப்படுத்த முயற்சிப்பதால், பரிசுத்த ஆவியால் தாவீது வாயிலாக அவர்கள் கண்டனத்துக்கு உள்ளாகிறார்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் மேற்கோள் காட்டிய பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இதை தெளிவுபடுத்த, “குமாரன்” என்ற வார்த்தையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து, அறிவீனராக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் ஞானத்தின் கனியாகவும் எல்லாவற்றையும் படைத்தவராகவும் இருக்கிறார். காலத்தை உருவாக்கிய அவருக்கு எதிர்காலத்தை, குறிப்பாக நியாயத்தீர்ப்பு நாளை அறியாமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தாலும், இந்த அறிவு குமாரனுக்கோ அல்லது பரிசுத்த ஆவிக்கோ இல்லை என்று மறுக்க முடியாது. இறுதியாக, கிறிஸ்துவுக்கு இந்த அறிவு இருக்கிறது என்பதைக் காட்ட போதுமான சான்றுகள் உள்ளன

188. எனவே, இதுபோன்ற கூற்றுகளைச் சொல்பவர்கள் பரிசுத்த ஆவியால் சபிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்டனம் செய்யப்பட்டவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தீர்க்கதரிசி முக்கியமாக ஆரியர்களைக் கண்டிக்கிறார், ஏனெனில் கடவுளின் குமாரனுக்கு காலமோ வருடங்களோ தெரியாது என்று அவர்கள் கூறுவதனால். இருப்பினும், கடவுள் எல்லாவற்றையும் அறிவார், ஆகவே கிறீஸ்து மேலும் மேலும் உயர்த்தப்படுகிறார். இதுகுறித்து ரோமர் 9:5 இல் “அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன்” என்கிறது.

189. தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவை மட்டுப்படுத்துவதில் அம்மனிதர்கள் காட்டும் ஆர்வம் குறித்து பரிசுத்த தாவீது எவ்வளவு அதிர்ச்சியடைகிறார் என்பதைப் பாருங்கள். அவர்கள் மற்ற மனிதர்களைத் தொந்தரவு செய்வதில்லை, மனிதர்களால் அவர்கள் தண்டிக்கப்படவும் மாட்டார்கள். அவர்களின் பெருமை அவர்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் அவர்கள் துன்மார்க்கத்தாலும், தெய்வ நிந்தனையாலும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களின் தவறு வெளிப்படையானது, ஆன்மீக விஷயங்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களுக்குள் பொருந்த வேண்டும் என்று நினைப்பவர்களை தாவீது விமர்சிக்கிறார். மனித வரலாற்றில் நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுவதில்லை, ஆனால் எதிர்பாராத விதமாகவும் மர்மமான வழிகளிலும் நிகழக்கூடும் என்பதை நாம் அடிக்கடி காண்கிறோம், எனவே கடவுள் எந்த விதிகள் அல்லது ஒழுங்கிற்கும் கட்டுப்பட்டவர் இல்லை.

190. அவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டே தேவ நிந்தனை செய்தார்கள் என்று அவர் விளக்குகிறார். அவர்கள் கடவுளுக்கு எதிராகப் பேசினார்கள். தங்கள் வார்த்தைகளை பரலோகத்திற்கு எதிராகத் திருப்பினார்கள். மனித இயல்புகளைக் கொண்டு பரலோக இரகசியங்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்றும், அவற்றை விளக்க முடியும் என்றும் நினைப்பவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிப்பதை இது காட்டுகிறது.

191. மேலும் ஆரியர்கள், “கடவுள் எப்படி அறிந்திருக்கிறார்?” என்றும், உன்னதமானவரிடத்தில் அறிவு இருக்கிறதா?” என்றும் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் இதை அடிக்கடி மற்றும் தொடர்ந்து கூறுகிறார்கள். இயேசுவால் எல்லாவற்றையும் அறிய முடியாது என்றும், நிகழ்வுகளின் நாள் அல்லது நாழிகையை அவர் அறிந்திருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர் கேட்பதையும் பார்ப்பதையும் மட்டுமே அவர் அறிவார் என்று அவர்கள் நம்புவதால், அவர் எப்படி எல்லாவற்றையும் அறிய முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடவுளின் ஐக்கியம் என்ற கருத்துக்கு தவறான மற்றும் தெய்வ நிந்தனையுடனான விளக்கத்தை அவர்கள் கூறுகிறார்கள். அதன் மூலம் அவரது சக்தியைக் குறைக்க முயல்கிறார்கள்.

192. சில நிகழ்வுகளின் சரியான நாள் அல்லது மணிநேரம் அல்லது நாழிகை கூட யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கோ அல்லது குமாரனுக்கோ கூட தெரியாது, பிதாவுக்கு மட்டுமே தெரியும் என்று வேதாகமம் மாற்கு 13:32 ஐ மேற்கோள் காட்டி விளக்குகிறது. இருப்பினும், வேதாகமத்தின் ஆரம்பகால கிரேக்க பதிப்புகளில் “குமாரனுக்கும் தெரியாது” என்ற சொற்றொடர் இல்லை. பரிசுத்த வேதாகமத்தைத் திரித்துக் கூறியவர்கள் இந்தப் பகுதியையும் திரித்துக் கூறியிருப்பது ஆச்சரியமல்ல. இது சேர்க்கப்பட்டதற்கான காரணம் தெளிவாக உள்ளது, குறிப்பாக இது அத்தகைய தெய்வ நிந்தனையை வெளிப்படுத்தவே இவ்வாறான சொற்பதங்கள் உபயோகிக்கப் பட்டிருக்கலாம்.

193. இருப்பினும், சுவிசேஷகர் இவ்வாறு எழுதினார் என்று வைத்துக்கொள்வோம். குமாரன் என்ற பெயர் இரண்டு இயல்புகளையும் உள்ளடக்கியது. ஏனென்றால் அவர் மனுஷகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார், எனவே நமது இயல்பைப் பற்றிய அனுமானத்துடன் இணைக்கப்பட்ட அறியாமையில், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளை அவர் அறிந்திருக்கவில்லை. கொலோசெயர் 2:3 இல் “கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப் பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கடவுளின் ஞானம் மற்றும் அறிவு என்ற பொக்கிஷங்கள் அவரில் மறைந்திருப்பதை தெரிந்துகொண்டும் அவர் எப்படி அந்த நாளைப் பற்றி அறியாமல் இருந்திருக்க முடியும்?

194. அவர் தான் யார் என்பதன் காரணமாக இதை அறிந்திருந்தாரா, அல்லது அது தற்செயலாக நடந்ததா என்று எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. எல்லா அறிவும் இயற்கையிலிருந்தோ அல்லது கற்றலிலிருந்தோ நமக்கு வருகிறது. குதிரைக்கு ஓடத் தெரிந்தது போலவும், மீனுக்கு நீந்தத் தெரிந்தது போலவும் இயற்கை அறிவைத் தருகிறது. இவை கற்பிக்கப்படாமலேயே வருகின்றன. ஆனால் ஒரு மனிதனுக்கு நீந்த வேண்டுமானால், அதை எப்படிச் செய்வது என்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளாமல் அவர்களால் அதைச் செய்ய முடியாது. எனவே, பேச முடியாத விலங்குகளுக்கு அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய இயற்கை உதவுகிறது, கற்றுக்கொள்ளாமலேயே விஷயங்களை அறிந்து கொள்கிறது. இப்படியிருக்கையில், கடவுளின் குமாரனை ஏன் நியாயந்தீர்க்க வேண்டும்? அவர் கற்பிக்கப்பட்டதாலோ அல்லது அவரது இயல்பால் அவர் விஷயங்களை அறிந்திருக்கிறாரா என்று கேட்டு அவரை நிந்திக்க வேண்டும்? அது அவருக்குக் கற்பிக்கப்பட்டதால் தான் என்றால், அவர் ஞானத்துடன் பிறக்கவில்லை, சரியான முறையில் தொடங்கவில்லை, ஆனால் காலப்போக்கில் சரியாகிக் கொண்டார் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், அதேநேரம், அவர் தனது இயல்பால் விஷயங்களை அறிந்திருந்தால், அவர் ஆரம்பத்திலிருந்தே சரியானவராக இருந்துள்ளார்; தந்தையிடமிருந்து முறையாகவே வந்துள்ளார். ஆகவே அவருக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே அறிய வேண்டிய அவசியமில்லை.

195. ஆகையால், அவர் நாட்கள் மற்றும் காலங்கள் பற்றி அறியாதவராக இருக்கவில்லை; ஏனென்றால், ஓரளவு அறிந்துகொள்வதும், ஓரளவு அறியாமையில் இருப்பதும் கடவுளின் ஞானத்தின் பங்கிற்கு இசைவானது அல்ல. ஏனென்றால், எல்லாவற்றையும் படைத்தவர் எப்படி ஒரு பகுதியை அறியாதவராக இருக்க முடியும்? ஏனெனில் உருவாக்குவதை விட அதை பற்றி அறிவது மிக சிறிய விடயமே. ஏனென்றால், நம்மால் உருவாக்க முடியாத பல விஷயங்களை நாம் அறிவோம், நாம் அனைவரும் ஒரே மாதிரியாக எல்லா விஷயங்களையும் அறிவதில்லை, ஓரளவு மட்டுமே அறிவோம். ஒரு கிராமவாசி காற்றின் வலிமையையும் நட்சத்திரங்களின் போக்கையும் ஒரு விதத்தில் புரிந்துகொள்கிறான், அதே நேரத்தில் ஒரு நகரவாசி அவற்றை வேறொரு விதத்தில் புரிந்துகொள்கிறான், ஒரு விமானிக்கு எப்போதும் முன்னெச்சரியுடனான கண்ணோட்டம் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் எல்லாமும் தெரியாது என்றாலும், அவை ஓரளவுக்கென்றாலும் தெரியும் என்று கூறப்படுகிறது; எல்லாவற்றையும் படைத்த படைப்பாளருக்கு மட்டுமே எல்லாவற்றையும் முழுமையாகத் தெரியும். சுவாதி என்ற பிரகாசமான விண்மீன் வானத்தில் எவ்வளவு நேரம் இருக்கும் என்றும், மானின் தலையைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுதி எந்த நேரத்தில் உதிக்கும் போன்ற விடயங்கள் விமானிக்குத் தெரியும். ஆனால் படைப்பாளருக்குத் தெரிந்ததைப் போல மற்ற நட்சத்திரங்களின் தொடர்புகளோ பெயர்களோ அவருக்குத் தெரியாது. ஏனென்றால் படைப்பாளர் எல்லா நட்சத்திரங்களையும் கணக்கிட்டு அவற்றின் பெயர்களைக்கூட அறிந்திருக்கிறார். படைப்பாளரின் சக்தி வேறு எந்த சக்தியை விடவும் மகத்தானது.

196. அப்படியானால், தேவனுடைய குமாரன் இவற்றை எப்படி உண்டாக்கியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு அடையாள முத்திரை இடுவதற்கு பயன்படும் ஒரு மோதிரம் போன்ற வடிவம் (பொறிப்புக்கணயாழி) ஏற்படுத்தும் தோற்றத்தை அது உணர்வதில்லை. ஆனால் பிதாவானவர் எல்லாவற்றையும் ஞானத்துடன் படைத்தார். அதாவது, 1 கொரிந்தியர் 1:24 இல் கூறப்பட்டுள்ளது போல, கடவுளின் ஞானமும் நல்லொழுக்கமும் மிக்க குமாரன் மூலமாகவே அவர் எல்லாவற்றையும் படைத்தார். அத்தகைய ஞானம் நிச்சயமாக அவரது சொந்த படைப்புகளுக்குப் பின்னால் உள்ள சக்திகள் மற்றும் காரணங்கள் இரண்டையும் புரிந்துகொள்கிறது. எனவே, எல்லாவற்றையும் படைத்தவர் தான் என்ன செய்கிறார், என்ன படைத்தார் என்பதை அறிந்திருக்க வேண்டும். எனவே, அவர் எல்லாவற்றையும் படைத்த நாளையும் அறிந்திருந்தார்.

197. ஏசாயா 45:11, ‘வரவிருப்பவை யாவற்றையும் உண்டாக்குபவர்’ என்றும், எபிரெயர் 1:2-3-ல் “அவர் தன் குமாரன் மூலமாக யுகங்கள் யாவற்றையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. யுகங்கள் என்பது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உள்ளடக்கியது. எனவே, அவருடைய வல்லமையும் அறிவும் எல்லா யுகங்களையும் உள்ளடக்கி இராவிட்டால், அவரால் எப்படி எதிர்கால விஷயங்களை உருவாக்க முடியும்? ரோமர் 4:17-ல் கூறப்பட்டுள்ளபடி, இதுவரை இல்லாத விஷயங்களை இருப்பது போல் அவர் அழைப்பதைக் கொண்டு, எதிர்கால விஷயங்களை அவை ஏற்கனவே இருப்பது போல் அவர் செய்துள்ளார். அவை நிறைவேறாமல் போக முடியாது. அவர் நடத்தத் திட்டமிட்டுள்ள விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். எனவே, நடக்கப் போவதைப் படைத்தவர் அவை இருப்பது போலவே இருப்பதை அறிவார்.

198. யுகங்களைப் பற்றிய விடயங்களை எம்மால் நம்ப முடிந்தால், நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிச் சொல்லப்படுவதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் கடவுளின் குமாரன் அதை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதால் அதைப் பற்றி அறிந்திருக்கிறார். ஏனென்றால், “உமது கட்டளைப்படி, நாள் தொடரும்” என்று எழுதப்பட்டுள்ளது. அவர் அது தொடர்கிறது என்று மட்டும் சொல்லவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அது தொடரும், அதனால் நடக்கும் அனைத்தும் அவருடைய திட்டத்தைப் போலவே நடக்கும். அவர் கட்டளையிட்டதை அவர் அறியாதிருப்பாரா? காதைப் படைத்தவர் கேட்க முடியும், கண்ணைப் படைத்தவர் பார்க்க முடியும்.

199. அதன் படைப்பாளர் அறிந்ததை விட உண்மையிலேயே பெரிய வேறேதும் ஒன்று இருக்க முடியுமா என்று பார்ப்போம். பெரிய மற்றும் முக்கியமான ஒன்றைப் பற்றி அல்லது சிறிய, முக்கியமற்ற ஒன்றைப் பற்றி சிந்திக்க நாம் தேர்வு செய்யலாம். சிறிய மற்றும் முக்கியமற்ற ஒன்றில் நாம் கவனம் செலுத்தினால், அதைப் புறக்கணிப்பது உண்மையில் ஒரு இழப்பு அல்ல. மிகப்பெரிய விஷயங்களை அறிந்துகொள்வது வலிமையின் அடையாளமாக இருப்பதால், குறைவான மதிப்புடைய விடயத்துக்கு முன் பலவீனமான ஒன்றின் அடையாளமாகத் தெரிகிறது. எனவே, படைப்பாளர் தேர்ந்தெடுப்பதில் இருந்து விடுபட்டுள்ளார், ஆனால் அவரது சக்தியிலிருந்து அவர் குறைந்து போய்விடவில்லை.

200. நியாயத்தீர்ப்பு நாளை அறிவது ஒரு பெரிய மற்றும் முக்கியமான விஷயம் என்று அவர்கள் நினைத்தால்: பிதாவாகிய கடவுளை விட மகத்தானது அல்லது சிறந்தது எது என்று அவர்கள் சொல்லட்டும். அவர் பிதாவாகிய தேவனை அறிந்திருக்கிறார், அவர் சொல்வது போல்: “என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார்” என்று மத்தேயு 11:27 கூறுகிறது. எனவே நான் கேட்கிறேன், அவர் பிதாவை அறிந்திருந்தாலும் அந்த நாளை அறிந்திருக்க மாட்டாரா? அப்படியானால், அவர் பிதாவை வெளிப்படுத்துகிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள், அப்படியென்றால், அந்த நாளை எப்படி அவரால் வெளிப்படுத்த முடியாமல் போகும்?

201. பிதாவை குமாரனுக்கு முன்பாகவும், குமாரனை பரிசுத்த ஆவிக்கு முன்பாகவும் வைக்க நீங்கள் சில தரங்களை வகுப்பதால், பரிசுத்த ஆவி நியாயத்தீர்ப்பு நாளை அறிந்திருந்தாரா என்று சொல்லுங்கள். இங்கே அவரைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை. நீங்கள் அதை முற்றிலும் மறுக்கிறீர்கள். ஆனால் அவர் அறிந்திருந்தார் என்று நான் உங்களுக்குக் காட்டினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வேதாகமம் கூறுவது என்னவென்று சற்று நோக்குவோம்: 1 கொரிந்தியர் 2:10-ல், “தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆகையால், அவர் கடவுளின் இந்தக் காரியங்களை ஆராய்வதால், நியாயத்தீர்ப்பு நாளை பிதாவும் அறிந்திருப்பதால், ஆவியானவரும் அதை அறிந்திருக்க வேண்டும். அப்போஸ்தலன் சொல்வது போல், கடவுள் அறிந்த அனைத்தையும் அவர் புரிந்துகொள்கிறார். ஒரு மனிதனுக்கு மற்றவர் மனதிலுள்ள எண்ணங்களை அறிய முடியாது. ஏனென்றால், அந்த மனிதனின் மனதில் உள்ளவைகளை அவனே அறிவதற்கு பொருத்தமானவன். இதுகுறித்து, 1 கொரிந்தியர் 2:11 “ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார்” என்று பதிவு செய்கிறது. ஆகவே கடவுளைத் தவிர வேறு யாரும் கடவுளின் காரியங்களை அறிய மாட்டார்கள். எனவே, பரிசுத்த ஆவி அறிந்திருப்பது குறித்து மறுக்காமல் கவனமாக இருங்கள். ஏனென்றால் அது பிதா அறிந்திருப்பதையும் மறுப்பதாகும்; (ஏனென்றால் கடவுளின் ஆவி கடவுளின் விஷயங்களை அறிந்திருக்கிறது, ஆனால் ஆவிக்குத் தெரியாதவை கடவுளிடமிருந்து வந்தவை அல்ல). கடவுளின் ஆவி அறிந்திருப்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால், அதேவேளை கடவுளின் குமாரன் அறிந்திருப்பதை மறுத்தால், நீங்கள் குமாரனுக்கு முன்பாக ஆவியை வைக்கிறீர்கள். இது நீங்கள் அறிவித்ததற்கு எதிரானது. இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுவது தேவ நிந்தனை மட்டுமல்ல, முட்டாள்தனமான செயலும் கூட.

202. நாம் எவ்வாறு அறிவைப் பெறுகிறோம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். பொதுவாக, நேரம், இடம், அறிகுறிகள், மக்கள் அல்லது அவர்களின் வரிசையைக் குறிப்பிடுவதன் மூலம் நமக்குத் தெரிந்ததை விளக்குகிறோம். எனவே, குமாரன் (இயேசு) நியாயத்தீர்ப்பின் நேரம், இடம், அறிகுறிகள் மற்றும் சூழ்நிலைகளை விவரிக்க முடிந்தால், நியாயத்தீர்ப்பு நாளை அவர் எவ்வாறு அறியாமல் இருக்க முடியும்?

203. லூக்கா 17:31 இல், “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது” என்று இயேசு கூறுகிறார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதையே இது காட்டுகிறது. அந்த ஆபத்தான காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்தும் அவர் அறிவுரை வழங்கினார்.

204. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் என்று தன்னைப் பற்றிச் சொன்ன ஒரு நாளைக் கர்த்தர் அறியாமல் இருக்க முடியுமா? என்று மத்தேயு 12:8 நமக்கு அறிவிக்கிறது.

205. இயேசு தம்முடைய சீஷர்களிடம் ஆலயத்தைப் பற்றிச் சொன்ன போது, ​​ஒரு குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டினார். அங்கே ஆலயத்தை நிர்மாணித்துக்கொண்டிருந்த சீஷர்களை நோக்கி, “இந்தக் கட்டிடங்களைப் பார்த்தீர்களா? உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இக்கட்டிடங்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்படும். ஒவ்வொரு கல்லும் கீழே தள்ளப்படும். ஒரு கல் இன்னொரு கல்மீது இராதபடி ஆகும்” என்று கூறினார் என்று மத்தேயு 24:2 கூறுகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களுக்குக் கூட என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை இது காட்டுகிறது.

206. அவருடைய சீடர்கள் ஒரு அடையாளத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அவர் அவர்களை எச்சரித்தார். இதுகுறித்து லூக்கா 21:8 இல், “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள்” என்றும், மீண்டும் லூக்கா 21:11 இல், “பூகம்பங்களும், நோய்களும், பஞ்சம் போன்ற பல விபரீதங்கள் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் மக்களையும் அடையாளங்களையும் குறித்து விபரித்துள்ளார்.

207. எருசலேமைப் படைகள் சுற்றி வளைக்கும் என்றும், புறஜாதியாரின் காலங்கள் நிறைவுக்கு வரும் என்றும் இயேசு நமக்குச் சொன்னார், மேலும் இந்த நிகழ்வுகளின் வரிசையையும் அவர் வெளிப்படுத்தினார். இவை அனைத்தும் நற்செய்தியில் நமக்குக் காட்டப்பட்டுள்ளன. எனவே, அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார் என்பது தெளிவாகிறது.

அத்தியாயம் 17

கிறிஸ்து நியாயத்தீர்ப்பு நாளை நம் நன்மைக்காகத் தான் வெளிப்படுத்தவில்லை. இயேசு சொல்வதிலிருந்தும் பவுலின் எழுத்துக்களில் உள்ள அதுகுறித்த போதனைகளிலிருந்தும் இது தெளிவாகிறது. இயேசு தம் சீடர்களுக்குப் பதிலளித்தபோது ஏன் தெரியாது என்று சிலர் தங்கள் ஐயத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் பிதா அறியாதவர் அல்லது அறிய முடியாதவர் என்று அவர்கள் கூறுவார்களானால், குமாரன் பிதாவைப் போலவே அதே இயல்பைப் பகிர்ந்து கொள்கிறார் என்றும் அவர்கள் சொல்ல வேண்டும் என்று அம்ப்ரோஸ் வாதிடுகிறார். இல்லையெனில், அவர்கள் குமாரன் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும், இது சாத்தியமில்லை, ஏனென்றால் பிதாவோ குமாரனோ நம்மை ஏமாற்ற மாட்டார்கள். அவர்களுக்கிடையேயான திடமான ஐக்கியம் இந்தப் பகுதிகளில் காட்டப்பட்டுள்ளது.

208. நியாயத்தீர்ப்புக்கான சரியான நேரத்தை இயேசு நமக்குச் சொல்லாததற்குக் காரணம், அவர் அறியாததால் அல்ல, மாறாக வெளிப்படுத்தாமல் இருப்பது புத்திசாலித்தனமானது என்பதால். அதற்கு பதிலாக, நாம் விழிப்புடன் இருப்பது நல்லது, கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து, நம் நற்பண்புகளை வலுவாக வைத்திருப்பது நல்லது. நாம் தவறு செய்து கொண்டிருக்கும் போது கர்த்தருடைய நாள் வரக்கூடும் என்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டும். ரோமர் 11:20-ல் “பெருமைப்படாதீர்கள், ஆனால் கவனமாக இருங்கள்” என்று கூறுவது போல், கவனக்குறைவாக இருப்பதை விட முன்னறிவித்தல் எதுவும் இல்லாத எதிர்காலத்தைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

209. அவர் அந்த நாளைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு அவர் ஒரு விதிகளை வெளியிட்டிருப்பார் போல் இருந்திருக்கும். இது அப்போதைய காலகட்டங்களில் நேர்மையானவர்களை கவனக்குறைவாகவும், பாவிகளை மிகவும் நிதானமாகவும் இருக்கும்படி செய்திருக்கும். ஏமாற்ற விரும்பும் ஒருவர், ஒவ்வொரு நாளும் தான் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற பயம் இல்லாவிட்டால் தனது ஏமாற்று வேலைகளை நிறுத்த மாட்டார். அதேபோல், தண்டனை எப்போதும் கிடைக்கக்கூடும் என்று தெரிந்தால் தவிர, ஒரு திருடன் தனது மறைவிடத்தை விட்டு வெளியேற மாட்டான். தூய்மையற்ற தன்மை பொதுவாக அவர்களைச் செயல்படத் தூண்டுகிறது, ஆனால் பயம் இறுதிவரை அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கும்.

210. சில விஷயங்களை நாம் அறியாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அறியாமை நம்மை எச்சரிக்கை உள்ளவர்களாக மாற்றும், அத்தோடு, விழிப்புடன் இருப்பதனால் நாம் கற்றுக்கொள்ளலாம். மத்தேயு 24:44 சொல்வது போல், “நீங்களும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்த்திராத பொழுது மனித குமாரன் வருவார்” என்று. ஆகவே நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். போர் வருகிறது என்பதை அறிந்தால் மட்டுமே ஒரு போர்வீரன் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறான்.

211. மற்றொரு சமயத்தில் கர்த்தரை நோக்கி அவரது அப்போஸ்தலர்கள் கேட்டபோது (ஆம் கேட்டனர், ஏனென்றால் அவர்கள் அரியஸைப் போல அதைப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் கடவுளின் குமாரனுக்கு எதிர்காலம் பற்றித் தெரியும் என்று நம்பினர். எனவே அவர்கள் இதை நம்பியிராவிட்டால் அவர்கள் ஒருபோதும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள்) அவர் எப்போது இஸ்ரவேலுக்கு இராச்சியத்தைத் திரும்பக் கொண்டுவருவார் என்று அவர்கள் கேட்டார்கள். அவர் தெரியாது என்று சொல்லவில்லை, மாறாக, அப்போஸ்தலர் 1:7 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்து கொள்ள முடியாது” என்று. அவர் சொன்னதைக் கவனியுங்கள்: அது உங்களுக்குத் தெரியாது! மீண்டும் படியுங்கள், உங்களுக்கு, எனக்கு அல்ல, என்று அவர் கூறினார். அந்த நேரத்தில், அவர் தம்முடைய சொந்த பரிபூரணத்திலிருந்து பேசவில்லை, மாறாக நமது மனித உடல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் உதவியாக இருக்கும் விதத்தில் பேசினார். எனவே, அது உங்களுக்காக அல்ல, எனக்காக என்று அவர் கூறினார்.

212. 1 தெசலோனிக்கேயர் 5:1 இல் காட்டப்பட்டுள்ளபடி, மக்கள் எப்போதும் ஆன்மீக ரீதியாக தயாராக இருக்க வேண்டும் என்பதால், சரியான காலத்தையும் நேரத்தையும் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அவர் நேரத்தை அறிந்திருப்பதாகக் கூறவில்லை, ஆனால் மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நம்பினார். அப்போஸ்தலர் 1:7-ல் “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே” என்று குறிப்பிட்டதற்கு அமைய, பிதாவால் நிர்ணயிக்கப்பட்ட காலங்களைப் பற்றி கர்த்தர் பேசியபோது, ​​இறுதி அதிகாரத்தைக் கொண்ட பிதாவுடன் தான் அறிவைப் பகிர்ந்து கொள்வதாக அவர் மறைமுகமாகக் கூறினார். இந்த வல்லமை ஞானம் மற்றும் தார்மீக வலிமையிலிருந்து வருகிறது, இந்த குணங்கள் கிறிஸ்துவில் முழுமையாக உள்ளடங்கியுள்ளன.

213. மாற்கு 13:32 இல், “எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார்” என்ற வாசகத்தைப் பார்க்கும்போது, அவர் ஒரு விடயம் நடக்கவிருப்பதை அறிந்திருப்பதாகத் தோன்றினாலும் அதை ஏன் தம்முடைய சீடர்களுக்குக் கூட வெளிப்படுத்தவில்லை என்றும், தேவதூதர்களுக்கோ குமாரனுக்கோ கூடத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டதன் காரணம் யாது என்று நீங்கள் யோசிக்கலாம். அதேவேளை, ‘கடவுள் ஏன் தாம் கேள்விப் பட்டதைச் செய்தார்களா என்று பார்க்க இறங்குவேன் என்று கூறுகிறார்’ என்றும் நான் கேட்பேன் (ஆதியாகமம் 18:21). வேதாகமத்தில் மற்றுமொரு இடத்தில், “கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்” என்று ஆதியாகமம் 11:5 கூறுவது இதைக் குறிக்கிறது? “மேலும், சங்கீதத்தில், தீர்க்கதரிசி ஏன் கடவுளை யாராவது புரிந்துகொள்கிறார்களா அல்லது தேடுகிறார்களா என்று அறிய கர்த்தர் மனிதர்களைப் பார்த்தார் என்று கூறுகிறார்? கடவுள் இறங்கி வராமலோ அல்லது பார்க்காமலோ இருந்திருந்தால், மக்களின் செயல்களைப் பற்றியோ அல்லது அவர்களின் மதிப்பைப் பற்றியோ அவருக்குத் தெரியாது என்று அல்லவா தோன்றுகிறது?

214. ஆனால் லூக்காவின் நற்செய்தி 20:13 இலும் இதுவே காணப்படுகிறது. பிதா கூறுகிறார்: நான் என்ன செய்வேன் என்றால், என் அன்பின் குமாரனை அனுப்புவேன்; ஒருவேளை அவர்கள் அவரைப் போற்றுவார்கள் என்று அந்த நற்செய்தி கூறுகிறது. மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளிலும், “அவர் தனது ஒரே மகனை அனுப்பி, அவர்கள் என் மகனை மதிக்கிறார்கள் என்று கூறுகிறார்.” “தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்” என்று மத்தேயு 21:37 இலும், “என் குமாரனையாவது அவர்கள் மதிப்பார்கள்” என்று மாற்கு 12:6 இலும் கூறப்பட்டுள்ளது அவதானிக்கத்தக்கது. இது சில நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கிறது. இருப்பினும், மற்ற இரண்டு நற்செய்திகளிலும், அவர்கள் தம்முடைய குமாரனை மதிக்கிறார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறது, அதாவது அவர்கள் மரியாதை காட்டுவார்கள் என்று அவர் நம்புகிறார்.

215. கடவுளை சந்தேகிக்கவோ அல்லது முட்டாளாக்கவோ முடியாது. எதிர்காலத்தை அறியாதவர்கள் மட்டுமே சந்தேகப்பட முடியும், அதேநேரம் தவறான கணிப்புகளைச் செய்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பிதாவாகிய தேவன் குமாரனைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொன்னார் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் பின்னர் வித்தியாசமாகத் தோன்றும் பிற நிகழ்வுகள் நடந்தன. குமாரன் அடித்துத் துன்புறுத்தப்பட்டார், கேலிக்கு உள்ளானார், கடைசியில் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அவர் ஏற்கனவே வாழ்ந்த ஊழியர்களை விட மோசமான துன்பங்களைச் சந்தித்தார். இவற்றையெல்லாம் பார்க்குமிடத்து, பிதாவுக்கு இது தெரியாதா, அல்லது அவர் ஏமாற்றப் பட்டாரா அல்லது அவரால் உதவ முடியவில்லையா? உண்மை என்னவென்றால், கடவுள் தவறுகளைச் செய்ய முடியாது, தீத்து 1:2 இல் கூறப்பட்டுள்ளபடி, “விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை” என்கிறது. ஆகவே கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கும்போது எப்படி அறியாமல் இருக்கிறார் என்று கூற முடியும்? அவரால் எதையும் செய்ய முடியும் என்பதால், அவரால் செய்ய முடியாது எதுவுமில்லை.

216. ஆனால் அவர் அறியாதவராகவோ அல்லது அதிகாரம் இல்லாதவராகவோ இருந்திருந்தால் (குமாரனுக்குத் தெரியாது என்று சொல்வதை விட, தந்தைக்குத் தெரியும் என்று சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்), இந்த உண்மையிலிருந்தே குமாரன் பிதாவுடன் ஒரே பொருளானவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால் (உங்கள் மூட நம்பிக்கைகளின்படி) குமாரனுக்கு எல்லாம் தெரியாது, பிதாவைப் போலவே எல்லாவற்றையும் செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். குமாரனுக்கு பிதாவை விட அதிகமாக எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நான் சொல்லக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், ஏனென்றால், பிதாவுக்கு குமாரனுக்கும் இடையில் எந்த அதிகார வேறுபாட்டையும் நான் காணவில்லை.

217. ஆனால் பிதா அப்படிச் சொல்லவில்லை என்றும், குமாரன் தான் பிதாவைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்றும் நீங்கள் நினைக்கலாம். அப்படியானால், இப்போது நீங்கள் குமாரன் பலவீனமானவர் மட்டுமல்ல, தெய்வ நிந்தனை மற்றும் பொய் சொல்லும் குற்றவாளி என்றும் கூறுகிறீர்கள். ஆனால் பிதாவைப் பொறுத்தவரை நீங்கள் குமாரனை நம்பவில்லை என்றால், வேறு எதிலும் அவரை நம்ப முடியாது. ஏனென்றால், பிதாவுக்கு என்ன நடக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியாது என்பது போல அவர் நம்மை ஏமாற்ற விரும்பினால், எதிர்காலம் அவருக்குத் தெரியாது என்று கூறி, அவர் தன்னைப் பற்றி நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறார். தந்தையைப் பற்றி அவர் கணித்தபடி, நடக்காத ஒன்றைப் பற்றி அவர் தவறு செய்ததாகத் தோன்றுவதை விட, அவர் தானே செய்வதை மறைப்பது அவருக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.

218. ஆனால் பிதாவோ குமாரனோ பொய் சொல்லி வஞ்சிப்பதில்லை. பரிசுத்த வேதாகமம் இதைப் பற்றி ஒரு குறிப்பிட்ட வழியில் பேசுகிறது என்பதை நான் உதாரணங்களுடன் காட்டியுள்ளேன், மேலும் பலர் அதை உறுதிப்படுத்துகிறார்கள். உண்மையில் கடவுள் தான் அறிந்ததை அறியாதது போல் நடிப்பதில்லை. பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில் ஒரே கடவுள் மற்றும் ஒரு பண்பு இருப்பதை இது காட்டுகிறது; பிதாவாகிய கடவுள் தனக்குத் தெரிந்ததை மறைப்பது போல, இந்த விஷயத்தில் அவரின் சாயலாக இருக்கும் குமாரனும் தனக்குத் தெரிந்ததை மறைக்கிறார்.

அத்தியாயம் 18

கர்த்தர் அப்போஸ்தலர்களுக்கு அளித்த பதிலுக்கு ஒரு காரணத்தைக் கூற விரும்பி, கிறிஸ்துவின் கருணைக்கு ஏற்ப ஒரு காரணத்தை அவர் குறிப்பிடுகிறார். பின்னர், மற்றவர்களால் மற்றொரு காரணம் கூறப்பட்டபோது, ​​அது உண்மை என்று அவர் ஒப்புக்கொள்கிறார்; ஏனெனில் கர்த்தர் அதை தனது மனித உணர்வுகள் மூலமாகவே பேசினார். எனவே, பிதாவையும் குமாரனையும் பற்றிய அறிவு சமமானது என்றும், குமாரன் பிதாவை விட தாழ்ந்தவர் அல்ல என்றும் அவர் கூறுகிறார். அவர் தாழ்ந்தவர் என்று கூறப்படும் மற்றொரு வாசகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் சமமானவர் என்று அறிவிக்கப்படும் மற்றொரு வாசகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, குமாரனைப் பற்றி தீர்ப்பளிப்பதில் அரியர்களின் அவசரத்தை அவர் கண்டிக்கிறார், மேலும் அவர்கள் அவர் சிறியவர் என்று தவறாகக் கூறினாலும், அவர் ஒரு பாறை என்று சரியாக அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறார்.

219. கடவுளின் குமாரன் எதிர்காலத்தைப் பற்றி அறிந்திருக்கிறார் என்பதை நாம் கற்றுக்கொண்டோம். மக்கள் இதை ஒப்புக்கொண்டால், தேவதூதர்களுக்கோ குமாரனுக்கோ அல்ல, பிதாவுக்கு மட்டுமே தெரியும் என்று அவர் ஏன் சொன்னார் என்பதை நான் விளக்குவேன். இந்த சூழ்நிலையில் அவர் தனது சீடர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்றும், அடிக்கடி எவ்வளவு அவர் தனது கருணையை வெளிப்படுத்துகிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதை அனைவரும் கவனிக்க வேண்டும். அவருடைய சீடர்கள் தங்களுக்கு உதவாது என்று நினைத்த ஒன்றைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​அவர் பதில் தெரியாதது போல் நடந்து கொண்டார், எதுவும் சொல்லவில்லை. அவர் தனது சொந்த வல்லமையைக் காட்டுவதை விட நமக்குப் பயனுள்ளதை வழங்குவதையே அவர் விரும்புகிறார்.

220. சிலர் என்னைப் போல பலவீனர்களாகவோ அச்சம் கொள்பவர்களாகவோ இருப்பதில்லை. நான் புத்திசாலியாக இருப்பதை விட கடவுள் குறித்த ஆழமான விடயங்களுக்கு பயப்படுவேன். சிலர் வேதாகம வசனமான லூக்கா 2:52 ஐ அடிப்படையாகக் கொண்டு, இயேசு கடவுள் என்பதால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியாமல் இருக்க முடியாது என்று நம்புகிறார்கள். ஆனால் அவர் நம் மனித வடிவத்தை எடுத்தபோது, ​​மனுஷகுமாரனாக, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எல்லாவற்றையும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர் குமாரனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ​​அவர் தம்மைப் பற்றிப் பேசுகிறார், நம்முடைய கர்த்தர், அவர் தேவனுடைய குமாரனும் கன்னியிடம் இருந்து பிறந்தவருமாவார். இந்த இரண்டையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையால், அவர் நம் மனதை வழிநடத்துகிறார். இதனால் அவர் மனுஷகுமாரனாக, நமது அறியாமையையும் அறிவின் வளர்ச்சியையும் ஏற்றுக்கொண்டதன் மூலம், எல்லாவற்றையும் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நம்பலாம். நாம் எதிர்காலத்தை அறிய வேண்டியவர்கள் அல்ல, எனவே அவர் வளர உதவிய விதத்தில் சில விஷயங்களை அவர் அறிந்திருக்க வில்லை போல் தெரிகிறது. கொலோசெயர் 2:9 “தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது” என்கிறது. அப்படியானால் அவர் கடவுளாகவும் எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருந்தால் அவர் எப்படி வளர முடியும் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. மத்தேயு 9:4 “அவர்கள் இவ்வாறு எண்ணியதை இயேசு அறிந்தார். எனவே “நீங்கள் ஏன் தீய எண்ணங்களைக் குறித்து சிந்திக்கின்றீர்கள்?” என கர்த்தர் கேட்டதாக மேற்கோள் காட்டுகிறது. மக்களின் எண்ணங்களை அவர் நன்கு கிரகித்தபோது அவர் எப்படி எல்லாவற்றையும் அறியாமல் இருக்க முடியும்? லூக்கா 6:8 இல் “அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார்” என்றும் வேதாகமம் நமக்குச் சொல்கிறது.

221. பிதா தம்முடைய குமாரனை நாம் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று சிலர், கூறுகிறார்கள். பிதா ஒரு சாமான்யரைப் போலப் பேசினார் என்பதைக் காட்ட இது கூறப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும், மக்கள் மத்தியில் வாழ்ந்த குமாரன், நமது மனித உணர்வுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கொண்டே வாழ்ந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் உண்மையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும், நமது அறியாமை நிமித்தம் அவர் எதையும் அறியவில்லை என்று கூறியிருக்கலாம். அவர் ஒரு மனிதனாகத் தோன்றினாலும், அவர் வாழ்க்கை மற்றும் ஒளியின் ஆதாரமாகவும் இருந்தார். மேலும் லூக்கா 6:19 இல் கூறப்பட்டுள்ளபடி, நோயுற்றோருக்கு உதவ அவரிடமிருந்து குணப்படுத்தும் வல்லமை வெளிப்பட்டது.

222. எனவே, இந்தப் பிரச்சினை உங்களுக்காகத் தீர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். குமாரனின் கூற்று நமது மனித நிலையை முழுமையாக படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் அது குமாரனைக் கேள்வி கேட்பதை நிறுத்துவதற்கு உங்களுக்கு உதவ பிதாவைப் பற்றி எழுதப்பட்டது.

223. பிதாவுக்கு எல்லாம் தெரிதிருந்ததால், தேவனுடைய குமாரனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. ஆகவே குமாரனுக்கு எல்லாம் தெரிந்திருப்பதால், அவர் பிதாவை விடத் தாழ்ந்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? கடவுளுக்குத் தன்னை விட வல்லமையில் குறைந்த ஒரு குமாரன் இருந்திருந்தால், அவர் அவருக்கு எல்லாவற்றையும் கொடுக்கவில்லை என்று அர்த்தம். அப்படி அவர் எல்லாவற்றையும் கொடுக்கவில்லை என்றால், அவர் குறைவாகக் கொடுக்க விரும்பினார் அல்லது குறைவாகவே கொடுக்க முடிந்தது என்று அர்த்தம். ஆனால் பிதா பலவீனமானவரோ அல்லது பொறாமை கொண்டவரோ அல்ல, குமாரனுக்கு முன்பு இந்தப் படைப்பும் இருந்ததில்லை. எனவே, தந்தையைப் போலவே மகனுக்கும் எல்லாம் இருந்தால், அவர் எப்படி குறைவான வல்லமை கொண்டவராக இருக்க முடியும்? குமாரன் தனது தலைமுறையின் உரிமையால் பிதாவிடமிருந்து சகலவற்றையும் பெற்றுள்ளார். ஆதலால் தான் “பிதாவினுடையவை எல்லாம் என்னுடையவை” என்று கர்த்தர் கூறியதாக யோவான் 16:15 கூறுகிறது. ஏனென்றால் அவர் அவரிடமிருந்தே பிறந்தார், மேலும் பிதாவைத் தனது மகத்துவத்தின் மூலம் முழுமையாகக் காட்டுகிறார்.

224. யோவான் 14:28 இல், “பிதா என்னைவிடப் பெரியவர்” என்று வேதாகமம் எடுத்துரைக்கிறது. அதேபோல் பிலிப்பியர் 2:6 இல், கடவுளுக்குச் சமமாக இருப்பதை அவர் தவறாகக் கருதவில்லை என்று கூறுகிறது. அவர் கடவுளின் குமாரன் என்று கூறியதால் யூதர்கள் அவரைக் கொலைசெய்ய தலைப்பட்டனர் என்று யோவான் 5:18 குறிப்பிடுகிறது, ஏனென்றால் அவர் கடவுளுக்குச் சமமானவர் என்று கூறினார். இருப்பினும், யோவான் 10:30, “நானும் என் பிதாவும் ஒன்றே” என்று கூறுகிறது. அவர்கள் ஒன்றாக இருப்பது என்ற கருத்தில் கவனம் செலுத்துகிறார்கள், ஒன்றுக்கு மேற்பட்ட என்ற கருத்தை புறக்கணிக்கிறார்கள். எனவே, அவர் ஒரே நேரத்தில் கடவுளை விட தாழ்ந்தவராகவும் சமமாகவும் இருக்க முடியுமா? இல்லை, ஏனென்றால் ஒரு பகுதி அவரது தெய்வீக இயல்பையும் மற்றொன்று அவரது மனித இயல்பையும் குறிக்கிறது.

225. இயேசு குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அதைச் சொல்ல எவருக்கு உரிமை இருக்கிறது என்று நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் காண பிதாவையும் குமாரனையும் நியாயாசனத்தில் வைத்துப்பார்க்க இவ்வளவு ஆர்வமாக இருப்பவர் யார்? உதாரணமாக, தாவீது அரசன் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார், தாவீது சொன்னது போல என் இதயம் பெருமை கொள்ளவில்லை, என் கண்கள் அர்த்தமற்ற விஷயங்களைத் தேடுவதில்லை. மனித விஷயங்களில் ஆணவம் தலையீடு செய்யக் கூடாது என்று தாவீது அரசர் பயந்தார். ஆனால் நாம் பெரும்பாலும் தெய்வீக உண்மைகளுக்கு எதிராக ஆணவத்துடன் செயல்படுகிறோம். இயேசுவை நியாயந்தீர்க்க யாருக்கு அதிகாரம் உள்ளது? சிம்மாசனங்கள், ஆதிக்கங்கள், தேவதூதர்கள் மற்றும் சக்திகள் போன்ற பிற ஆன்மீகவாதிகள் என்று யார் இருக்கிறார்கள்? இருப்பினும், தேவதூதர்கள், அதிதூதர்கள் எல்லோரும் அவரைப் போற்றித் துதிக்கிறார்கள். இறுதியில், “குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார்” என்று மத்தேயு 11:27 கூறுகிறது. ஆகவே அது “அறிவார்” என்று சொல்கிறது, “தீர்ப்பளிப்பவர்” என்று சொல்வதில்லை. ஒன்றை அறிவது ஒரு விஷயம்; அதை தீர்ப்பது வேறொரு விஷயம். அப்படியானால் இயேசுவை எவரால் நியாயந்தீர்க்க முடியும்? பிதாவுக்கு முழுமையான அறிவு உள்ளது, அதே நேரத்தில் குமாரனுக்கு பிதாவை விட பெரிய அதிகாரம் இல்லை. மேலும், குமாரனைத் தவிர வேறு யாரும் பிதாவை அறிய மாட்டார்கள் என்றும், பிதா அவரை அறிந்திருப்பது போல குமாரனும் பிதாவை அறிந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

226. நீங்கள் அவர் தாழ்ந்தவர் என்று சொன்னதாகக் கூறுகிறீர்கள், ஆனால் அவர் ஒரு தன்னை பாறை என்று கூறுகிறார். நீங்கள் அதை விட அதிகமாகச் சொல்லி அவரை அவமரியாதையாக விமர்சிக்கிறீர்கள். நான் குறைவாகச் சொல்கிறேன், பயபக்தியுடன் நான் அவருடைய மரியாதையைச் சேர்க்கிறேன். நீங்கள் அவர் தாழ்ந்தவர் என்று சொல்லும் அதேநேரம், அவர் தேவதூதர்களை விட உயர்ந்தவர் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள். நான் அவர் தேவதூதர்களை விடக் குறைவானவர் என்று சொல்கிறேன், ஆனால் நான் அவருடைய மரியாதையை குறைத்து மதிப்பிடவில்லை, ஏனென்றால் என்னால் அவருடைய தெய்வீகத்தை மறுக்க முடியாது, மாறாக நான் அவருடைய கருணையை அறிவிக்கிறேன்.

அத்தியாயம் 19

பிதாவாகிய கடவுளைப் பார்த்து, குமாரன் பிதாவை விட குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று ஏன் அவர் சொல்லவில்லை என்பதை புனிதர் விளக்குகிறார். ஒரு தேவதூதராக – அல்லது ஒரு நபராக, ஏன், கிறிஸ்து கூட – எருசலேமை மட்டுமே அளவிடுவது கடவுளின் குமாரனை நியாயந்தீர்ப்பது அவருடைய நோக்கம் அல்ல என்று அவர் கூறுகிறார். அரியஸ், தன்னை சாத்தானைப் பின்பற்றுபவராகக் காட்டியுள்ளார் என்று அவர் கூறுகிறார். தெய்வீக தலைமுறையைப் பற்றி விவாதிப்பது முட்டாள்தனம், ஏனென்றால் ஏசாயா ஏற்கனவே மனித படைப்பின் தெளிவான அடையாளத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். எனவே, தெய்வீகமான விஷயங்களை நாம் ஒப்பிடக்கூடாது. இறுதியாக, வேதாகமத்திலிருந்து வெவ்வேறு உதாரணங்களைக் கொண்டு அரியஸின் ஆணவத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார்.

227. சர்வவல்லமையுள்ள பிதாவே, இப்போது நான் என் வார்த்தைகளை கண்ணீருடன் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். நான் உம்மை அணுக முடியாதவர், புரிந்துகொள்ள முடியாதவர், மதிப்பிட முடியாதவர் என்று நான் மனதால் அழைத்தேன்; ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் உம்முடைய குமாரன் உம்மை விடத் தாழ்ந்தவர் என்று நான் சொல்லத் துணியவில்லை. ஏனென்றால், எபிரெயர் 1:3 இல் “குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் சாயலாக அவர் இருக்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போது, அவர் உமது மகிமையின் பிரகாசமாகவும், உமது சாயலாகவும் இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். ஆகவே, ​​ உம்முடைய சாயலாக இருப்பவரை குறைவாக மதிப்பிட்டு விளித்தால், அது உம்மையும் சிறியவர் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடும் என்று நான் அஞ்சுகிறேன் – ஏனென்றால் குமாரன் உமது முழுமையை முழுமையாக வெளிப்படுத்துவதோடு, உம்மை உண்மையிலேயே கடவுளாக மாற்றும் அனைத்தும் குமாரனில் முழுமையாக உள்ளது என்பதை இங்கே பறைசாற்ற விரும்புகிறேன்.

228. ஆனால் நான் உம்மைப் புரிந்துகொள்ள விரும்பினேன் என்று தைரியமாகச் சொல்ல என்னை அனுமதியும். நான் உம்மை எப்படி அளக்க முடியும்? ஒரு தீர்க்கதரிசி ஒரு ஆளி விதைக் கயிற்றைக் கண்டார், அதைக் கொண்டு ஒரு தேவதூதன் எருசலேமை அளந்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அளந்துகொண்டிருந்தது அரியஸ் அல்ல. அது ஒரு தேவதூதன். அவர் அளந்தது எருசலேமை, கடவுளை அல்ல. ஏனென்றால் ஒரு தேவதூதரால் எருசலேமை அளக்க முடியாது, ஏனெனில் எருசலேம் என்று கூறப்படுவது ஒரு மனிதனைக் குறிக்கிறது. வேதாகமம் கூறுவதை பார்த்தோமானால், “நான் மேலே பார்த்தபோது, அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் வைத்திருப்பதைக் கண்டேன்” என்று எசேக்கியேல் 40:3 கூறுகிறது. அவர் ஒரு மனிதனாகத் தோன்றினார், பின்னர் கிறிஸ்து எந்த வகையான மனித உடலை எடுப்பார் என்பதை முன்கூட்டியே காட்டினார். “எனக்குப் பிறகு ஒரு மனிதன் வருகிறார், அவருடைய காலணியின் பட்டியை அவிழ்க்க நான் தகுதியற்றவன்” (யோவான் 1:27) என்று எழுதப்பட்ட மனிதன் அவர்தான். எனவே, இந்த வடிவத்தில் தோன்றிய கிறிஸ்து, எருசலேமை ஒரு அடையாளமாக மட்டுமே அளவிடுகிறார். ஆனால் அரியஸ் கடவுளையே அளவிட முயற்சிக்கிறார்.

229. 2 கொரிந்தியர் 11:14 இல் கூறப்பட்டுள்ளபடி, சாத்தான் கூட ஒரு ஒளிமிகு தேவதூதனைப்போல் அதாவது, நல்லவனைப்போல் நடிக்க முடியும். அப்படியிருக்கையில், அரியஸ் சாத்தானின் முன்மாதிரியைப் பின்பற்றி, எந்த ஒரு மனிதனாலும் அனுமதிக்கமுடியாததை, சொல்லத்துணியாத ஒன்றைக் கூறுவதில் அல்லது செய்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அரியஸ் தந்தை போல் எண்ணி வழிபாடும் பிசாசு கூட இவ்வளவு தூரம் செல்லவில்லை – கடவுள் குறித்து மறைபொருளை அவன் ஒருபோதும் புரிந்து கொண்டதாக நடிக்கவில்லை. ஆனால் அரியஸ், அதிர்ச்சியூட்டும் வகையில், தெய்வீக இரகசியங்களையும் கடவுளின் படைப்பின் மர்மங்கள் போன்றவற்றைப் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார். சாத்தான் கூட இயேசுவை கடவுளின் உண்மையான குமாரன் என்று ஒப்புக்கொண்டான். ஆனால் அரியஸ் அவரை நிராகரிக்கிறார்.

230. சர்வவல்லமையுள்ள பிதாவே, உம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், உம்முடைய படைப்பின் மர்மங்களைப் பற்றி நான் பேசுவது என்னை தேவ நிந்தனைக்குள் இட்டுச் சென்றுவிடுமா? யோவான் 16:15 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “பிதாவுக்குரியவை எல்லாம் என்னுடையவை” என்று உம்மிடமிருந்து பிறந்த அவர் கூறும்போதும், “நான் ​​உங்கள் நடுவில் நியாயாதிபதியாக இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ கூறியது யார்?” என்று லூக்கா 12:14 இல் குமாரன் கூறியிருப்பதும் இதுபற்றித்தான். பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில் நாம் பிரிவினை செய்து தீர்ப்பளிக்க முடியும் என்று எம்மால் உண்மையில் நினைக்கதான் முடியுமா? ஒரு பாரம்பரியத்தைப் பிரிப்பதில் கூட, அதிலிருக்கும் உண்மையான பொறுப்புணர்வு நம்மை நீதிபதிகள் என்ற நிலையில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, படைக்கப்படாத தெய்வீகத்தின் மகிமையைக் கொண்டு இயங்கும் உமக்கும் உமது குமாரனுக்கு இடையில் எவ்வாறு நாம் தீர்ப்பளிப்பவர்களாகவோ அல்லது பிரிப்பவர்களாகவோ இருக்க முடியும்?

231. “இன்று வாழும் தலைமுறையினர் தீமையைத் தேர்ந்தெடுத்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கின்றனர். யோனாவுக்கு நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும்” என்கிறது லூக்கா 11:29. இதன் பொருள், கடவுளிடமிருந்து ஒரு அடையாளம் வழங்கப்படவில்லை, இயேசுவின் வருகைக்கான அடையாளம் தவிர. தீர்க்கதரிசி இந்த வருகையைப் பற்றிப் பேசவிருந்தபோது, ​​ஒரு அடையாளத்தைக் கேளுங்கள் என்றார். கடவுளைக் கேட்கவோ சோதிக்கவோ மாட்டேன் என்று அரசர் பதிலளித்தபோது, ​​ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்பதே அவருக்கு பதிலாகக் கிடைத்தது. எனவே, கடவுளிடமிருந்து ஒரு அடையாளத்தை நாம் எதிர்பார்க்க முடியாது, அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், அது தொந்தரவாக அமைந்துவிடும். அத்தோடு நாம் முட்டாள்தனமாக அவரைப் பற்றிப் பேச முயற்சிக்கிறோம், ஆனால் அவரை நோக்கி செபிக்கக்கூட நாம் தகுதியற்றவர்களாக இருக்கிறோம்.

232. அரியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் நன்கு சிந்திக்கட்டும். தந்தையே, நீர் எல்லாவற்றையும் விடப் பெரியவர் என்று கூறி உம்மை உம்முடைய செயல்களுடன் நான் தவறாக ஒப்பிட்டுள்ளேன். அரியஸைப் போலவே, நீர் உமது குமாரனை விடப் பெரியவர் என்று நான் சொன்னால், நான் ஒரு மோசமான தீர்ப்பைச் செய்துள்ளேன். இந்தத் தீர்ப்பு முதலில் உமக்குப் பொருந்தும், ஏனென்றால் நாம் விஷயங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே தெரிவுகளை மேற்கொள்ள முடியும். மேலும் தன்னைப் பற்றி முதலில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் ஒருவரை மற்றொருவர் முன் நிறுத்த முடியாது.

233. சட்டப்படி பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய முடியாது, ஆனால் கடவுளைப் பற்றி நியாயத்தீர்ப்புகளைச் செய்ய முடியும். இருப்பினும், எல்லாவற்றையும் நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை உமது குமாரனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறீர்.

234. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்க பயந்து, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டும், நீர் விரும்புகிறீரா?” என்று கேட்டார். கிறிஸ்துவை நியாயந்தீர்க்க வேண்டுமா என்ற தோரணையில் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார்.

235. மோயீசன் ஒரு பாதிரியாராக இருந்து விலகியவர்; பேதுரு ஊழிய விதிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க விரும்பியவர்; இப்படியிருக்கையில், அரியஸ் உண்மையில் கடவுளின் மர்மங்களைப் புரிந்துகொள்கிறாரா? ஆனால் அரியஸ் பரிசுத்த ஆவி அல்ல. இல்லை. உண்மையில், இதுகுறித்து அரியஸுக்கும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது: இதற்கு ஒரு அறிவுறுத்தலாக, “உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை” என்று சிராக் 3:22 கூறுகிறது.

236. மோயீசன் கடவுளின் முகத்தைக் காண அனுமதிக்கப்படவில்லை; “எனது கைகளை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய், ஆனால் நீ என் முகத்தைக் காணமாட்டாய்” என்று யாத்திராகமம் 33:23 இல் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். ஆனால் அரியஸுக்கு அதை ரகசியமாகக் காண வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று அது கூறுகிறது. மோயீசன் ஆரோனுடன் இணைந்து ஒரு பாதிரியாராகப் பணியாற்றியது மட்டுமன்றி, ஒரு காலத்தில் கர்த்தருடன் மகிமையில் தோன்றினார். இருப்பினும், மோயீசனால் கடவுளின் முதுகை மட்டுமே பார்க்க முடிந்தது. இதற்கு நேர்மாறாக, அரியஸ் கடவுளை முழுமையாக, நேருக்கு நேர் பார்த்தார் என்று கூறப்பட்ட அதேவேளை, ‘எந்த மனிதனும் என்னைப் பார்த்த பின்பு உயிரோடு இருக்க முடியாது’ என்று யாத்திராகமம் 33:20 இல் கூறப்பட்டுள்ளதை நிராகரித்துவிடவும் முடியாது.

237. பவுல், “நாங்கள் ஓரளவு அறிந்திருக்கிறோம், ஓரளவு தீர்க்கதரிசனம் கூறுகிறோம்” என்று கூறும்போது மற்றவர்களை விட குறைவான அறிவைக் கொண்டிருப்பதை பற்றிப் பேசுகிறார். இதுகுறித்து 1 கொரிந்தியர் 13:9 “நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு” என்று சான்றளிக்கிறது. அரியஸ் கடவுளை முழுமையாக அறிந்திருப்பதாகக் கூறுகிறார், இது பவுலை விட அவர் உயர்ந்த அறிவை உடையவராகக் காட்டுகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுலுக்கு பகுதி அளவு அறிவே உள்ளது என்றும், அதே நேரத்தில் அரியஸ் தனக்கு நிறைந்த அறிவு இருப்பதாகவும் நம்புகிறார். பவுல் மோட்சத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அற்புதமான விஷயங்களைக் கேட்டறிந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் அந்த மனிதன் சரீர வடிவில் இருந்தானா இல்லையா என்று அவர் கூறவில்லை; கடவுளுக்கு மட்டுமே தெரியும் (2 கொரிந்தியர் 13:3-4). பவுல் தான் பெற்ற சொந்த அனுபவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் பாவத்தில் வாழும் அரியஸ், கடவுளை முழுமையாக அறிந்திருப்பதாகக் கூறுகிறார். கடவுள் தன்னை அறிந்திருப்பதாக பவுல் ஒப்புக்கொள்கிறார், அதே நேரத்தில் அரியஸ், தான் கடவுளை அறிந்திருப்பதாகக் கூறுகிறார்.

238. பெருமையுடனும் துன்மார்க்கத்துடனும் தெய்வீக அந்தஸ்தை உரிமை கொண்டாடியவரைப் பின்பற்றி, ‘நான் என் சிம்மாசனத்தை மேகங்களுக்கு மேலே வைப்பேன்; நான் உன்னதமானவரைப் போல இருப்பேன்’ (ஏசாயா 14:14) என்று கூறியவரை ஏற்றுக்கொண்டாலும், அரியஸ் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், அரியஸ் கடவுளின் உன்னதமான குமாரனும் தன்னைப் போலவே தோன்ற வேண்டும் என்று விரும்புகிறார். அவர் தனது தெய்வீக மகிமையில் அவரை மதிக்கவில்லை, ஆனால் அவரை பலவீனராகவும் மனிதனாகவும் மட்டுமே பார்க்கிறார்.


முதல் புத்தகம் (Book 1)
புத்தகம் II (Book 2)
புத்தகம் III (Book 3)
புத்தகம் IV (Book 4)
புத்தகம் V (Book 5)